என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஜோ ரூட் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் முதல் பந்திலேயே வெளியேறினார்.
    • ஜேமி ஸ்மித் 80 பந்தில் சதம் விளாசினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் (269), ஜடேஜா (89) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.

    நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், ப்ரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் சிராஜ் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6ஆவது விக்கெட்டுக்கு ப்ரூக் உடன் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருநாள் போட்டி போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ப்ரூபக் 73 பந்திலும், ஸ்மித் 43 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

    தொடர்நது விளையாடிய ஸ்மித் 80 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசினார். மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து 3ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்க 249 ரன்கள் அடித்துள்ளது. ப்ரூக் 91 ரன்களுடனும், ஸ்மித் 102 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 25.3 ஓவரில் 165 ரன்கள் குவித்துள்ளது.

    • எட்ஜ்பாஸ்டனில் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.
    • நான் பார்த்ததில் இங்கிலாந்தில் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்- கங்குலி.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். மேலும், இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    முதல் டெஸ்டில் சதம் அடித்த சுப்மன் கில் 2ஆவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியது தொடர்பாக சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    சுப்மன் கில்லின் இரட்டை சதம் குறைபாடு அற்ற, முற்றிலும் மாஸ்டர்கிளாஸ். எந்தவொரு காலக்கட்டத்திலும் இங்கிலாந்து மண்ணில் நான் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸ். கடந்த சில மாதங்களாக அவரிடம் மிக அதிகமான முன்னேற்றம். டெஸ்டிலவ் தொடக்க வீரர என்பதை அவரது இடம் இல்லை. இந்தியா வெற்றி பெறுவதற்கான டெஸ்ட் இது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • முதல் நாள் ஆட்ட முடிவில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • 2ஆவது நாளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269) விளாசினார். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். சுப்மன் கில்- ஜடேஜா ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.

    இந்திய அணி வீரர்கள் இணைந்து மொத்தமாகத்தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வர வேண்டும் என்பது பிசிசிஐ-யின் விதிமுறையில் உள்ளது. ஆனால், ஜடேஜா மட்டும் முன்னதாக மைதானத்திற்கு வர அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு காரணம் பந்து புதியதாக இருந்ததால், நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டால் சந்திக்க எளிதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வந்து பயிற்சி மேற்கொண்டதுதான்.

    அணி நிர்வாகத்திடம் ஏன் சிறப்பு அனுமதி கேட்டேன் என்பது குறித்து ஜடேஜா கூறியதாவது:-

    முன்னதாக மைதானத்திற்கு சென்று கூடுதலாக பேட்டிங் செய்தேன். ஏனென்றால், நான் 2ஆவது நாளில் கூடுதலாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால். ஏனென்றால், பந்து புதிதாக இருந்தது. நியூ பால்-ஐ பார்க்க முடியும் என்றால், இன்னிங்சில் தொடர்ந்து விளையாட அது எளிதாக இருக்கும். இங்கிலாந்தை பொறுத்தவரை நாம் அதிக ரன்கள் அடித்து செட் ஆகிவிட்டோம் என நினைக்க முடியாது. பந்து எந்த நேரத்தில் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆகும்.

    இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

    முதல்நாளில் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், 2ஆவது நாள் ஆட்டத்தின்போது 89 ரன்னில் அவுட் ஆனார். சுப்மன் கில் உடன் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- இங்கிலாந்து தொடர் தொடங்கும்போது, சுப்மன் கில்லின் தரம், சராசரி 35க்கு போதுமானதாக இல்லை.
    • அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் சராசரி 45ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்தியாவின் இளம் டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து பந்து வீச்சை இந்திய வீரர்கள் தாக்குப்பிடிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

    மேலும், சமீபகாலமாக சரியாக பேட்டிங் செய்யாத சுப்மன் கில்லால் சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். கேப்டன் சுப்மன் கில் முதல் டெஸ்டில் சதமும், 2ஆவது டெஸ்டில் இரட்டை சதமும் விளாசியுள்ளார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் "இந்தியா- இங்கிலாந்து தொடர் தொடங்கும்போது, சுப்மன் கில்லின் தரம், சராசரி 35க்கு போதுமானதாக இல்லை. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் சராசரி 45ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்த தொடரிலேயெ அவரது சராசரி 45 ஆக இருக்கும் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    சுப்மன் கில் 2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்துள்ளார். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 147 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 8 ரன்களும் அடித்திருந்தார். 3 இன்னிங்சில் 424 ரன்கள் குவித்துள்ளார். இன்னிங்சில் சராசரி 141.3 ஆகும். டெஸ்ட் சராசரி என்றால் 212 ஆகும்.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கிரெனடா:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 110 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஜோடி பொறுப்புடன் ஆடி 112 ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். அலெக்ஸ் கேரி 63 ரன்னும், வெப்ஸ்டர் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
    • கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடித்து 269 ரன்கள் எடுத்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்னும், ஜடேஜா 41 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 41 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் 269 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் ஆகாஷ் தீப் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

    பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றினார். சிராஜ் கிராலியை அவுட்டாக்கினார். 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • சுப்மன் கில் 269 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • இங்கிலாந்து தரப்பில் பஷீர் 3 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வாஷிங்டன் சுந்தர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பவுண்டரிக்கு பறக்க விட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அரை சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டர் சுந்தர் 41 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் 269 ரன்களில் வெளியேறினார்.

    இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பஷீர் 3 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
    • இங்கிலாந்தில் தனி நபராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார்.

    அதன்படி SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.


    இதன்மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவான்களை சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    23 வயது 39 நாட்கள் - எம்.ஏ.கே. பட்டோடி vs இங்கிலாந்து, டெல்லி, 1964

    25 வயது 298 நாட்கள் - சுப்மன் கில் vs இங்கிலாந்து, எட்ஜ்பாஸ்டன், 2025

    26 வயது 189 நாட்கள் - சச்சின் டெண்டுல்கர் vs நியூசிலாந்து, அகமதாபாத், 1999

    27 வயது 260 நாட்கள் - விராட் கோலி vs மேற்கு ஆப்பிரிக்கா, நார்த் சவுண்ட், 2016

    இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் தனி நபராக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

    இங்கிலாந்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்:-

    சுப்மன் கில் 222 பர்மிங்காம் 2025

    சுனில் கவாஸ்கர் 221 ஓவல் 1979

    ராகுல் டிராவிட் 219 ஓவல் 2002

    சச்சின் டெண்டுல்கர் 193 லீட்ஸ் 2002

    ரவி சாஸ்திரி 187 ஓவல் 1990

    மினூ மங்காட் 184 லார்ட்ஸ் 1952

    • இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது.
    • ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    • 11 ரன்னில் சதத்தை ஜடேஜா தவறவிட்டார்.
    • இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விளையாடிய ஜடேஜா அரைசதமும் கில் 150 ரன்களும் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இதனையடுத்து 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 168 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஜூலை 9, 2024 நியமிக்கப்பட்டார்.
    • கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் 3-வது வரிசையில் நிலையான வீரரை விளையாட வைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஜூலை 9, 2024 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார்.

    கம்பீரின் தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பல மோசமான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. அவரது பயிற்சியாளர் பதவியில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (0-3) தோல்வியடைந்தது. இது இந்தியாவின் முதல் முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடர் தோல்வியாகும். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் 3-வது வரிசையில் நிலையான வீரரை விளையாட வைக்கவில்லை.

    அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 3-வது வரிசையில் பட்டிக்கல் களமிறங்கினார்.

    2-வது டெஸ்டில் சுப்மன் கில், 3-வது டெஸ்டில் கில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து கேஎல் ராகுல், மீண்டும் கில் 3-வது வரிசையில் இறங்கினார்.

    அதனை தொடர்ந்து இங்கிலாந்து எதிரான தொடரில் 3-வது வரிசையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய சுதர்சன் களமிறங்கினார். முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் 2-வது டெஸ்ட்டில் கருண் நாயர் அந்த வரிசையில் களமிறங்கினார்.

    இப்படி கடந்த 7 டெஸ்ட் போட்டியில் ஒரு நிலையான வீரரை 3-வது வரிசையில் களமிறக்கியதில்லை.

    அவரது முதல் ஆறு மாதங்களில், இந்திய அணி 26 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 14 வெற்றிகள், 10 தோல்விகள், ஒரு டிரா மற்றும் ஒரு டை பெற்றது.

    • 2-வது டெஸ்டில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
    • ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    பிர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. சாய் சுதர்சன், பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    இதன்மூலம் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் இல்லாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி தங்களின் சிறந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது. இதுவே இந்தியாவுக்கு வெற்றி பெற சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி ரன்களைக் குவித்தால், அது வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.

    பிட்ச்சில் சிறிது சுழற்சி இருக்கும் நிலையில், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாதது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.

    என்று கங்குலி கூறினார்.

    ×