என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஓமன் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- ஓமன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அந்த அணி கடைசி வரை போராடி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என ஓமன் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் விநாயக் சுக்லா கூறினார். மேலும் அவர் ஆட்டங்களை முடித்து அணியை வழிநடத்து விதம் ஈடு இணையற்றது. அவர் எனது குரு என கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த குழுவில் உள்ள மற்ற இரண்டு அணிகளை விடவும் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள்.
- இந்த உத்வேகத்தைத் தொடருங்கள் என சூர்யகுமார் கூறினார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி வரை போராடிய ஓமன் அணி 20 ஓவரில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஓமன் அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம், நீங்கள் இன்று சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினீர்கள். இந்த குழுவில் உள்ள மற்ற இரண்டு அணிகளை (பாகிஸ்தான், யுஏஇ) விடவும் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள். இந்த உத்வேகத்தைத் தொடருங்கள். இன்று நீங்கள் செய்ததை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் என கூறினார்.
இதனையடுத்து சூர்யகுமார் யாதவுடன் ஓமன் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.
- இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்லாப்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இந்தியா 102 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி பிங்க் ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிங்க் நிற ஜெர்சி அணிந்து இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து இந்திய வீராங்கனை தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
- ஓமனுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் கைப்பற்றினார்.
- இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 100-வது விக்கெட்டை தொட்டார்.
ஓமனுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 100-வது விக்கெட்டை தொட்டார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். தனது 64-வது போட்டியில் இந்த மைல்கல்லை அவர் அடைந்தார்.
அர்ஷ்தீப் சிங் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் அறிமுகம் ஆனார். 3 ஆண்டுகள் 74 நாட்களில் அவர் இந்த சாதனையை புரிந்தார். டெஸ்ட்டில் வினோ மன்காட்டும் (23 போட்டி) ஒரு நாள் போட்டியில் கபில்தேவும் (77 ஆட்டம்) 100 விக்கெட்டை எடுத்த முதல் இந்திய வீரர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வரிசையில் அர்ஷ்தீப் சிங் இணைந்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக 20 ஓவர் போட்டியில் மற்ற இந்திய வீரர்களான யுஸ்வேந்திர சாஹல் (80 ஆட்டம்), ஹர்திக் பாண்ட்யா (117) ஆகியோர் தலா 96 விக்கெட்டும், பும்ரா 92 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
100 விக்கெட்டை குறைந்த கால அளவில் கைப்பற்றிய 2-வது வீரர் அர்ஷ்தீப் சிங் ஆவார். பக்ரைன் வீரர் ரிஸ்வான் பட் 2 ஆண்டுகள் 240 நாட்களில் 100 விக்கெட்டை தொடடார். அதிகவேகமாக 20 ஓவர் விக்கெட்டை வீழ்த்திய 4-வது வீரர் அர்ஷ்தீப் சிங் ஆவார். ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) 53 ஆட்டத்திலும், நேபாளை சேர்ந்த சந்தீப் லமீச்சனே 54 போட்டியிலும், ஹசரங்கா 63 ஆட்டத்திலும் வீழ்த்தி இருந்தனர்.
- 4ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.
- ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் சுப்மன் கில் க்ளின் போல்டானர். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.
இந்த ஜோடி அபாரமான விளையாடியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடினார். 3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 4ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.
5ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் பவர்பிளேயின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க இந்தியா 6 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
8ஆவது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 15 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா இதே ஓவரில் ரன்அவுட் ஆனார்.
4ஆவது விக்கெட்டுக்கு சஞச் சாம்சன் உடன் அக்சார் படேல் ஜோடி சேர்ந்தார். இவர் அதிரடியாக 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையே இந்தியா 10 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
ஷிவம் துபே (5) ரன்னில் வெளியேற சுஞ்சு சாம்சன் 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவருடைய மெதுவான டி20 அரைசதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 29 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ஹர்ஷித் ராணா கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். அவர் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
189 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி, சிறப்பாக விளையாடியது. ஓமன் வீரர்கள் அமீர் கலீம் மற்றும் ஹம்மத் மிர்சா ஆகியோர் தலா அரைசதம் அடித்தனர்.
எனினும், இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டதால், ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா குரூப் 'ஏ' பிரிவில் தனது போட்டிகளை வெற்றியுடன் முடித்துள்ளது.
- சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார்.
- அபிஷேக் சர்மா 15 பந்தில் 38 ரன்கள் அடித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் சுப்மன் கில் க்ளின் போல்டானர். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.
இந்த ஜோடி அபாரமான விளையாடியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடினார். 3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 4ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தார்.
5ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் பவர்பிளேயின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க இந்தியா 6 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
8ஆவது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 15 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா இதே ஓவரில் ரன்அவுட் ஆனார்.
4ஆவது விக்கெட்டுக்கு சஞச் சாம்சன் உடன் அக்சார் படேல் ஜோடி சேர்ந்தார். இவர் அதிரடியாக 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையே இந்தியா 10 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
ஷிவம் துபே (5) ரன்னில் வெளியேற சுஞ்சு சாம்சன் 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவருடைய மெதுவான டி20 அரைசதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 29 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ஹர்ஷித் ராணா கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். அவர் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- 3ஆவது பந்தில் சுப்மன் கில் க்ளீன் போல்டானார்.
- சஞ்சு சாம்சன் அடுத்த 3 பந்தில் ரன் அடிக்கவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறவில்லை.
அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இந்தியா 6 ரன்கள் அடித்தது. 2ஆவது ஓவரை ஷா பைசல் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தில் சுப்மன் கில் ரன் அடிக்கவில்லை. 3ஆவது பந்தில் க்ளீன் போல்டானார்.
அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் அடுத்த 3 பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்ல. இதனால் பைசல் ஷா இந்த ஓவரை மெய்டனாக வீசினார்.
இதன்மூலம் ஐசிசி-யின் முழு உறுப்பினர் நாடு அல்லது, Associate நாட்டை வீரர் ஒருவர் இந்திய அணிக்கு எதிராக பவர்பிளேயில் மெய்டன் ஓவர் விசியவர் என்ற சாதனையை பைசல் ஷா படைத்துள்ளார்.
- பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது குரூப் கடைசி லீக் போட்டியில் இன்று ஓமனை எதிர்த்து விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி விவரம்:-
1. அபிஷேக் சர்மா, 2. சுப்மன் கில், 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்ட்யா, 5. சஞ்சு சாம்சன், 6. அக்சர் படேல், 7. ஹர்ஷித் ராணா, 8. குல்தீப் யாதவ், 9 திலக் வர்மா, 10. ஷிவம் துவே, 11 அர்ஷ்தீப் சிங்,
- ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்.
- ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு 'மாரி', 'விசுவாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.
அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்னர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரோபோ சங்கர் மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "ரோபோ சங்கரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.
- வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.
- இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.
தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
- இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தானை வெளியேற்றி இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி இலங்கை அணி தகுதி பெற்றதை தொடர்ந்து வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர்.
அந்நேரத்தில், இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லலகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தகவல் அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தந்தை இறந்த துக்கச் செய்தி தெரியவர துனித் கண்கலங்கியபடி Dressing Room-க்கு சென்றார். அவரை சகவீரர்கள் ஆறுதல்படுத்தினர்.
இதையடுத்து துனித் வெல்லாலகே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகஸ்ட் 2024 இல் கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த சாதனையாகும். 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
- இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும்.
- சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும், ஓமனும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி அணியான ஓமனுடன் ( 'ஏ' பிரிவு) மோதுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தானை துவம்சம் செய்து ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறி விட்டது. அதே சமயம் ஜதிந்தர் சிங் தலைமையிலான ஓமன் தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
பலம் வாய்ந்த இந்திய அணி, ஓமனை எளிதில் வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்துடன் உள்ளது. இருப்பினும் துபாயுடன் ஒப்பிடும் போது அபுதாபி ஆடுகளம் சுழலுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காது என்பது சமீபகாலத்தில் இங்கு நடந்த ஆட்டங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும், ஓமனும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஓமன் அணியின் கேப்டன் 36 வயதான ஜதிந்தர் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.






