என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பாகிஸ்தான் வாரியம் 2 முறை விடுத்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்தது.
    • போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 14-ந் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    இந்த விவகாரம் சா்ச்சையானதால் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண் டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக் கெட் கவுன்சில்) முறையிட்டது. தங்களது இந்த கோரிக்கையை ஏற்கா விட்டால் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவோம் என்றும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது.

    பைகிராப்ட்டை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் 2 முறை விடுத்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்தது. இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பைகிராப்ட் வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனால் போட்டியில் இருந்து விலகும் முடிவை பாகிஸ்தான் கைவிட்டது. இந்த பிரச்சினையால் பாகிஸ்தான்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் கடந்த 17-ந் தேதி மோதிய ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மேலும் இந்த ஆட்டம் துபாயில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணிகளின் கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டிக்கான ஊடக சந்திப்பை பாகிஸ்தான் அணி ரத்து செய்தது.

    இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுமாதிரி செயல்படுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஊடக சந்திப்பில் இருந்து விலகியது.

    இந்த நிலையில் நிருபர்கள் சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தானுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்ர கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக பாகிஸ்தானுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணி எந்த யோசனையில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர் சந்திப்பு கட்டாயமாகும். ஏதேனும் இருந்தால் அதை ஊடகங்களில் தெரிவிப்பது அவசியமாகும்.

    பாகிஸ்தான் தங்களிடம் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்று நினைக்கலாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்விதான் ஆசிய அமைப்பின் தலைவராக செயல்படுகிறார்.

    ஊடக சந்திப்பை ரத்து செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்கலாம் அல்லது போட்டி முடிவுகளின் பட்டியலில் ஒரு புள்ளியை குறைக்கலாம்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
    • மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்

    இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.

    அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. பின்னர் அது வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், காலியாக உள்ள பதவிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து விவாதம் நடைபெற்றது. மிதுன் மனாஸ் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு தலைவர் பதவிக்கு மிதுன் மனாஸ் பெயரே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பி.சி. சி.ஐ.யின் தலைவராக மிதுன் மனாஸ் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார். இதே போல புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு நியமனங்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.

    டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.

    ஓய்வு பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடுகளின் இயக்குநராகவும் பணியாற்றி, நிர்வாக அனுபவத்தை பெற்றுள்ளார். இந்த அனுபவமே அவரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்குக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    • இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர்.
    • கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக நடுவரை பாகிஸ்தான் பகடையாக பயன்படுத்தியது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 'சூப்பர்4' சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது.

    ஏற்கனவே லீக் சுற்றில் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எளிதாக வீழ்த்தியிருந்தது. ஆகவே இப்போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேட்டி அளித்த அஸ்வின், "இந்திய வீரர்களுடன் ஒப்பிட முடியாத அளவில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். அவர்களின் திறமை மேல் எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கைகுலுக்காத சர்ச்சை தொடர்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிசிசி-ஐ ஒன்றும் சொல்ல முடியாமல் நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை பகடையாக பயன்படுத்தியது,

    பாகிஸ்தானுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்யாதீர்கள். நீங்கள் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் போட்டியை சுவாரசியமற்றதாக மாற்றுகிறீர்கள். நீங்கள் 150 ரன்களுக்கு அவுட்டாகி, இரண்டாவது இன்னிங்சில போட்டியை பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் ஆக்குகிறீர்கள்" என்று தெரிவித்தார்.

    • இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.
    • பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் 'சூப்பர்4' சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்திய அணி லீக் ஆட்டங்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து எளிதில் தோற்கடித்தது. ஓமனுக்கு எதிரான கடைசி லீக்கில் 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

    தங்களது வெற்றி உத்வேகத்தை தொடரும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 127 ரன்னில் கட்டுப்படுத்திய இந்தியா இலக்கை 15.5 ஓவர்களில் எளிதில் எட்டிப்பிடித்தது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் எனலாம்.

    இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபேவும் பலம் சேர்க்கிறார்கள்.

    ஓமனுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 15-வது ஓவரில் ஹமாத் மிர்சா அடித்த பந்தை பிடிக்க முயற்சிக்கையில் இந்திய அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப் தெரிவித்தார். இந்த தொடரில் இதுவரை 3 விக்கெட் வீழ்த்தி இருக்கும் அக்ஷர் பட்டேல் ஆட முடியாமல் போனால் அணிக்கு இழப்பாகும்.

    சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி 2 வெற்றி (ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இந்தியாவுக்கு எதிராக) தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

    பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பேட்டிங்கில் பஹர் ஜமான், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், சகிப்சதா பர்ஹான், பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் ஓரளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்த அணியின் மிடில் வரிசை தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது நல்ல நிலையில் உள்ளனர்.

    லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக 'டாஸ்' போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. இந்த சம்பவம் ஆட்டம் முடிந்ததும் சர்ச்சையாக வெடித்தது. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது. அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது.

    கைகுலுக்க மறுத்த சர்ச்சை அதைத்தொடர்ந்து அரங்கேறிய புறக்கணிப்பு மிரட்டல் பிரச்சனை ஓய்ந்த சில தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பரம எதிரிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 11 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறும் இந்த ஆட்டத்தில் நெருக்கடியை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழலில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணாஅல்லது அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

    பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை- வங்கதேசம் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினார். அதேவேளையில் 19ஆவது ஓவரில் முஷ்டாபிஷுர் ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார். தசுன் ஷனகா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் விளாச இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    தொடர்ந்து 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக சைப் ஹாசன் 61 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    • தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர்.
    • அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை- வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினார். அதேவேளையில் 19ஆவது ஓவரில் முஷ்டாபிஷுர் ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார். தசுன் ஷனகா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் விளாச இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்துள்ளது.

    • ஸ்மிரிதி மந்தனா 125 ரன் விளாசினார்.
    • ஒரு கட்டத்தில் 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 125 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தீப்தி ஷர்மா நேர்த்தியாக விளையாடினார். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (18), அருந்ததி ரெட்டி (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 289 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா உடன், ஷே்னே ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது. இந்தியா 42.2 ஓவரில் 354 ரன்கள் எடுத்திருந்தது. 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 42.3 ஆவது ஓவரில் தீப்தி ஷர்மா 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ராணா 46ஆவது ஓவரில் 35 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    • 28 பந்தில் அரைசதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 2ஆவது பேட்டர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    அத்துடன் 13 சதங்களுடன், பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசி பேட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    • பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.
    • இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ரேனுகா சிங் 9 ஓவரில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரதிகா ராவல் 10 ரன்னில் வெளியேறினார்.

    • ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்றார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா- ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 188 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுதது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இம்பேக்ட் பிளேயர் விருது வழங்கப்பட்டது. அவர் பதக்கத்தை உதவி பயிற்சியாளரான தயானந்த் கரனியிடம் வழங்கினார், அவர் ஃபீல்டிங் பயிற்சிகளின் போது அவருக்கு நிறைய உதவியுள்ளார் எனவும் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    ஓமன் வீரர் அமீர் கலீம் அடித்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு அருகில் இருந்து பாண்ட்யா சிறப்பாக கேட்ச் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவரை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் விடுத்த கோரிக்கோயை ஐ.சி.சி. நிராகரித்தது.
    • இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டை நீக்குமாறு பாகிஸ்தான் வாரியம் 2 முறை விடுத்த கோரிக்கோயை ஐ.சி.சி. நிராகரித்தது. இந்த பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தான் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த சந்திப்பை பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் நயீம் கிலானி வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவின் பயன்பாடு குறித்தும் ஐ.சி.சி.க்கு தெரிவிக்கப்படாத நிலையில், அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறியதாக ஐ.சி.சி.குற்றம்சாட்டியது.

    இதற்கிடையே ஆண்டி பைகிராப்ட், கேப்டன் சல்மான் ஆகா, மேலாளர் நவீத் அக்ரம் சீமா இடையேயான சந்திப்பின் போது தங்களின் ஊடக மேலாளா் உடன் இருந்ததும், அதை வீடியோ பதிவு செய்ததும் விதிமீறல் இல்லை என்று பாகிஸ்தான் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது ஐ.சி.சி.யால் வகுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டதே என்றும், ஊடக மேலாளா் தங்கள் அணியின் ஒரு அங்கமே என்றும் தெரிவித்துள்ளது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று இந்தியா- ஓமன் அணிகள் மோதினர்.
    • இந்த போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது குரூப் கடைசி லீக் போட்டியில் ஓமனை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய ஓமன் அணி 167 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக டாஸ் போடும் போது இரு அணி கேப்டன்களும் லெவனில் ஆடும் வீரர்களை மறந்து விட்டனர். அதன்படி டாஸ் போடும் போது இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஹர்ஷித் ராணா மற்றும் மற்றொரு வீரர் என சூர்யகுமார் யோசிக்க ஆரமித்தார். சிரித்தப்படியே அட கடவுளே.. நான் ரோகித் போல ஆகிவிட்டேன் என கூறி சிரித்தார்.

    அதன்பிறகு ஓமன் அணி கேப்டனிடன் எத்தனை மாற்றங்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரும் 2 மாற்றம் என கூறி விட்டு ஒரு வீரரை மறந்து விட்டார். சிரித்து கொண்டே இரண்டு மாற்றம் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×