என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- அகீல் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
- பொல்லார்டு தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
கயானா:
6 அணிகள் பங்கேற்றிருந்த 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக இப்திகார் அகமது 30 ரன்கள் அடித்தார். டிரின்பாகோ தரப்பில் நேத்ராவல்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன காலின் முன்ரோ (23 ரன்கள்), அலேக்ஸ் ஹேல்ஸ் (26 ரன்கள்) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினர். பூரன் ஒரு ரன்னிலும், பிராவோ 11 ரன்களிலும், ரசல் கோல்டன் டக் ஆகியும் ஏமாற்றினர்.
இதனால் தடுமாற்றத்திற்குள்ளான அந்த அணியை சுனில் நரைன் (22 ரன்கள்), பொல்லார்டு (21 ரன்கள்) மற்றும் அகீல் ஹொசைன் (16 ரன்கள்) கரை சேர்த்தனர். 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அகீல் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதையும், பொல்லார்டு தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
சாம்பியன் பட்டம் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு 8.83 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ரூ. 5.82 கோடியும் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ. 2.21 கோடி, 0.88 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
- சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.
அதாவது 2022-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் ஹாரிஸ் ராஃப் பந்தில் நேராக விராட் கோலி அடித்த சிக்சர் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என்று ஐ.சி.சி. பாராட்டியது. அதனை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கலாய்த்தனர்.
அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.
அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 4 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர்.
- பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம்- இலங்கை அணிகள் மோதின. இதில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் 4 அணிகளும் ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளனர். ரன்ரேட் அடிப்படையில் இந்தியா (+0.689) முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் வங்கதேசம் அணி (+0.121) உள்ளது.
தோல்வியடைந்த இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ரன் ரேட் அடிப்படையில் 3-வது 4-வது இடங்களில் உள்ளது. பாகிஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
- பாகிஸ்தானுக்கு எதிராக 3 வடிவிலான கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாட உள்ளது.
- டி காக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த 3 வடிவிலான தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக மார்க்ரம் இடம் பெற்றுள்ளார். டி20 அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ஒருநாள் அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிரடி தொடக்க ஆட்டகாரரான குயிண்டன் டி காக் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். டிகாக் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி நமீபியா அணியுடன் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. அந்த போட்டி வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் -ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
- நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 ஆவது முறையாக கரீபியன் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்று நிக்கோலஸ் பூரன் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சாதித்துள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக்க்கின் தொடர் நாயகன் விருதை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர் பொல்லார்டு வென்றார்.
- ஹாரிஸ் அபிஷேக் சர்மாவை ஸ்லெட்ஜிங் செய்யும் வித மாக வம்புக்கு இழுத்தார்.
- அபிஷேக் சர்மாவும் திருப்பி ஏதோ கூறி பதிலடி கொடுத்தார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி பேட்டிங் செய்தபோது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் வீசினார். அப்போது 3 பந்தை எதிர் கொண்ட அபிஷேக் சர்மா ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஹாரிஸ் அவரை ஸ்லெட்ஜிங் செய்யும் வித மாக வம்புக்கு இழுத்தார். அதற்கு அபிஷேக் சர்மாவும் திருப்பி ஏதோ கூறி பதிலடி கொடுத்தார்.
பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் பவுண்டரி அடித்தார். இதனால் ஹாரிஸ் ஏதோ கூற மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா கோபமானார். அத்துடன் ஹாரிஸ் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். நடுவர் இருவரையும் சமாதானம் செய்தார்.
இது குறித்து அபிஷேக் சர்மா போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தான் வீரர்கள் எந்த காரணமும் இல்லாமல் எங்களை நோக்கி வந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறைதான் அதற்கு பதிலடியாக இருந்தது. அவர்களுக்கு மருந்து கொடுக்க ஒரே வழி இதுதான்.
நானும் சுப்மன் கில்லும் பள்ளி நாட்களில் இருந்தே விளையாடி வருகிறோம். ஒருவருக்கொருவர் துணை நிற்பதை ரசிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "முதலில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை Rivalry எனக் கூறாதீர்கள். இரு அணிகளும் 15-20 ஆட்டங்களில் விளையாடி, 7-7 அல்லது 8-7 என வெற்றி பெற்றிருந்தால் அப்படிச் சொல்லலாம்.ஆனால் 10-1 அல்லது 10-0 ஆக இருந்தால் அது எப்படி Rivalry ஆகும்? அதனால் இனிமேல் இது Rivalry-யே அல்ல" என்று கூறி சிரித்தார்.
- சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் எளிதில் வீழ்த்தியது.
- இந்திய வீரர்கள் கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் எளிதில் வீழ்த்தியது.
இந்த போட்டின்போதும் டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. அதே போல் போட்டி முடிந்த பிறகு இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் கைக் குலுக்காமல் சென்றனர்.
- 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
- அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது ஆட்டத்தில் 5 ஆவது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். அந்த ஓவரில் கில் பவுண்டரி விளாசினார்.
அப்போது முதல் ஹாரிஸ் ராஃப் அபிஷேக் சர்மாவை பார்த்து ஏதோ கூற, அதற்கு அபிஷேக் சர்மா பதிலடி கொடுத்தார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நடுவர் ராஃபை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
- அபிஷேக் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்தபோது பகர் சமான் 15 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த பர்ஹான், சயீம் அயூப் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக பர்ஹான் சிக்சர், பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்தார்.
இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் சயீம் அயூப் 21 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பர்ஹான் 58 ரன்னில் வெளியேறினார். முகமது நவாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
இந்தியத் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அபிஷேக் சர்மா அதிரடியாக அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 47 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, திலக் வர்மா களமிறங்கினார். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்தார்.
இறுதியில், இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 171 ரன்கள் எடுத்தது.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்தபோது பகர் சமான் 15 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த பர்ஹான், சயீம் அயூப் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக பர்ஹான் சிக்சர், பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்தார்.
இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் சயீம் அயூப் 21 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பர்ஹான் 58 ரன்னில் வெளியேறினார். முகமது நவாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- இவ்விரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
- 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்று இருக்கின்றன.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கையை வங்கதேசம் வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, இந்திய அணி பந்து வீச, பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களம் இறங்க உள்ளது.






