என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
- தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார்.
மெல்போர்ன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்த போட்டியில் தொடக்க வீரரான வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டீவ் வாக்கை (18496) பின்னுக்கு தள்ளி டேவிட் வார்னர் (18515) 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் 27368 ரன்கள் எடுத்து யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளார்.
- ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது.
- அந்த பட்டியலில் 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
மெல்போர்ன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.
டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.
இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
- பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய அணியே களம் இறங்கியது.
பாகிஸ்தான் அணியில் சர்ப்ராஸ் அகமது, குர்ரம் ஷசாத், பகீன் அஷ்ரப் ஆகியோருக்கு பதிலாக முகமது ரிஸ்வான், ஹாசன் அலி, மிர் ஹம்சா ஆகியோர் இடம் பெற்றனர்.
டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர்-உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். டேவிட் வார்னர் 2 ரன்னில் இருந்தபோது கேட்ச்சை தவறவிட்டனர். அதன்பின் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் (27.1. ஓவர்) சேர்த்தது. வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் கவாஜாவும் (42 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின் லபுஸ்சேன்-ஸ்பீலன் சுமித் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது லபுஸ்சேன் 14 ரன்னிலும், சுமித் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பொறுமையுடன் விளையாடிய ஸ்மித் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் புஸ்சேன் - ஹேட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
- ஜெய்ஸ்வால் தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 266 ரன்கள் குவித்தார்.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அவர் 25 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது இந்திய அணிக்கு வலு சேர்க்க உதவும்.
கடந்த 2001-ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி சேவாக்கின் முதல் டெஸ்ட். இந்த டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சேவாக், 173 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இதே போன்று சச்சின் டெண்டுல்கர் மிடில் ஆர்டரில் களமிறங்கி 184 பந்துகளில் 155 ரன்கள் குவித்தார். சச்சின் மற்றும் சேவாக் இருவரும் சதம் அடித்த போதிலும் இந்திய அணியால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி டிரா செய்யப்படவே இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
தற்போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று ஜெய்ஸ்வால் தனது அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறானது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவில் மார்கோ ஜான்சென், லுங்கி நிகிடி, கஜிசோ ரபாடா, நாந்த்ரே பர்கர் ஆகியோர் பந்து வீசும் போது பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இது அவருக்கு கடினமானதாக இருக்கும். அதோடு, வித்தியாசமானதாக கூட இருக்கும்.
இந்த அனுபவத்தின் மூலமாக அவர் சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன். ஒரு இளம் வீரர் வந்து சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்க வேண்டும்.
இந்த பாக்ஷிங் டே டெஸ்ட் போட்டியானது ஜெய்ஸ்வாலுக்கு 3-வது போட்டி. ஜெய்ஸ்வால் தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 266 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அவர் 25 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது இந்திய அணிக்கு வலு சேர்க்க உதவும்.
என்று கம்பீர் கூறியுள்ளார்.
- விஸ்டன் பத்திரிகை முதல் 5 ஆட்டக்காரர்களின் பட்டியலில் கவுரை குறிப்பிட்டது
- டைம் பத்திரிகையின் 100 நெக்ஸ்ட் பட்டியலில் கவுர் பெயர் இடம்பெற்றது
15 வருடங்களாக சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை புரிந்து வருபவர், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (34).
பெண்கள் டி20 (T20) கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஹர்மன்ப்ரீத்.
கடந்த பிப்ரவரி மாதம் அவரது சாதனைகளில் ஒன்றாக 150 டி20 போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழ் பெற்றார்.
மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஸ்மிருதி மந்தானாவுடன் இணை கேப்டனாக தங்க பதக்கம் வென்றார்.
கிரிக்கெட் சாதனைகளை குறித்த பதிவுகளை வெளியிடும் பிரபல "விஸ்டன்" (Wisden) பத்திரிகை, இவ்வருடத்தின் முதல் 5 கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் பெயரை குறிப்பிட்டது.
தாக்கத்தை ஏற்படுத்திய முதல் 100 பெண்மணிகள் பட்டியலில் பிபிசி (BBC) செய்தி நிறுவனம் ஹர்மன்ப்ரீத் பெயரையும் சேர்த்தது. அதே போன்று, டைம் (TIME) பத்திரிகை வெளியிட்ட "100 நெக்ஸ்ட்" (100 Next) பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றது.
பிற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்திய மக்களிடையே பெண்கள் கிரிக்கெட்டிற்கும் ஆர்வம் ஏற்பட வைத்த பெருமைக்குரியவர்களில் ஹர்மன்ப்ரீத் ஒருவர். இவரது சாதனைகள் இந்திய பெண்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு வளர காரணமாக இருப்பதாக விமர்சகர்கள் ஒப்பு கொள்கின்றனர்.

பஞ்சாப் மாநில மோகா பகுதியை சேர்ந்தவரான ஹர்மன்ப்ரீத் கவுர், நடுத்தர சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். கமல்தீஷ் சிங் சோதி என்பவரிடம் பயிற்சி எடுத்து கொள்ள தொடங்கியதும், ஹர்மன்ப்ரீத்தின் விளையாட்டு பயணம் ஏறுமுகத்தை காண தொடங்கியது.
கடந்த வருடம் பெண்கள் கிரிக்கெட்டில் புகழ் பெற்ற மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு பெண்கள் கிரிக்கெட்டை அனைத்து வடிவங்களிலும் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்பவர்களில் ஒருவராக ஹர்மன்ப்ரீத் திகழ்கிறார்.
ஹர்மன்ப்ரீத் இதுவரை 290 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6,500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

அவ்வப்போது விளையாட்டு மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்துபவராக பார்க்கப்பட்டாலும் விரைவில் பக்குவமுள்ள பவர் ஹிட்டராக (power hitter) கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்ப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான்.
- 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகி உள்ளார். இந்தியாவிற்காக டெஸ்ட்டில் அறிமுகமாகும் 309-வது வீரர் இவர் ஆவார்.
இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான். 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை. மேலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.
7 முறை தொடரை பறிகொடுத்திருக்கும் இந்திய அணி 2010-11-ம் ஆண்டில் மட்டும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், டோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களால் முடியாத அந்த 31 ஆண்டு கால ஏக்கத்தை ரோகித் சர்மா படை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்குர், அஸ்வின், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
தென்ஆப்பிரிக்கா:
டீன் எல்கர், மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெரைன், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜீ, ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட்கோலி 14 போட்டியில் விளையாடி 1236 ன்கள் எடுத்துள்ளார்.
- இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் டோனி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
செஞ்சூரியன்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுசூரியன் நகரில் இன்று மதியம் தொடங்குகிறது. 2 ஆட்டம் கொண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட்கோலி, புதிய மைக்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட்கோலி 14 போட்டியில் விளையாடி 1236 ன்கள் எடுத்துள்ளார். இதில் முதலிடத்தில் டெண்டுல்கர் 1741 ரன்களுடன் (25 போட்டி) உள்ளார்.
2-வது இடத்தில் சேவாக் (1306 ரன், 15 டெஸ்ட்) 3-வது இடத்தில் ராகுல் டிராவிட் (1252 ரன், 21 டெஸ்ட்) உள்ளார். இதில் டிராவிட், சேவாக்கை முந்த கோலிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2-வது இடத்தில் உள்ள சேவாக்கை முந்த கோலிக்கு 71 ரன்கள் தேவை. டிராவிட்டை முந்த 17 ரன்கள் தேவை. அவர் இந்த ரன்களை எடுத்து டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிகாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்து இந்திய வீரர்களில் 2-வது இடத்தை பிடிக்கிறார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்தவர்களின் பட்டியலில் டோனி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 144 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 78 சிக்சர்களை விளாசியுள்ளார். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 88 இன்னிங்ஸ்களில் 77 சிக்சர்களை அடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மேலும் 2 சிக்சர்களை அடித்தால் டோனியை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடிப்பார். சேவாக் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 சிக்சர்களை விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
இன்றைய முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இன்று செஞ்சூரியன் நகரில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக தெலுங்கு நடிகை தெரிவித்தார்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் விளையாடியதன் மூலம் இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பிரதமர் மோடி உள்பட விளையாட்டு பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் கண்டு களித்தனர். உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னர் சச்சின் 2011 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசளித்தார்.

2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அது என்னவென்றால் உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவதாக அவர் தெரிவித்தார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்தனர்.

ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபட்டது.

ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி ஐசிசி நடத்திய 8 கோப்பைகளை வென்று அபார சாதனை படைத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:
1987, 1999, 2003, 2007, 2015 என ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்று சாதித்துள்ளது.2006 மற்றும் 2009ம் ஆண்டில் சாம்பியன் டிராபி கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
ஒரு உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக அதிக ரன் திரட்டிய கேன் வில்லியம்சனின் (2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 ஆட்டத்தில் 578 ரன்) சாதனையை ரோகித் தகர்த்தார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்சர் அடித்த கிறிஸ் கெய்ல் (85) சாதனையை ரோகித் (86) முறியடித்தார்.

இந்திய வீரர் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் 3 சதம், 6 அரைசதம் உள்பட 765 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற புதிய வரலாறு படைத்து விட்டார். இதில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 50 ரன்னுக்கு மேல் எடுத்ததும் அடங்கும். உலகக் கோப்பையில் 2-வது தடவையாக அவர் தொடர்ந்து 5 ஆட்டங்களில் 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.
உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை மீது கால் வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டது. மேலும், குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
- ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
- இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி கேட்டனர்.
இந்த நிலையில் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. மேலும் அவர்களின் மத்திய ஒப்பந்தத்தை தாம தப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும்போது, 3 வீரர்களும், மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலக நினைப்பது அவர்கள் வணிக லீக் போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தை காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது. இதன் மூலம் இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.
- இது 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செஞ்சூரியன்:
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஆடும் முதல் போட்டி இதுவாகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் அவர்கள் ஆடவில்லை. உலகக் கோப்பை தோல்வியை மறந்து டெஸ்ட் களத்தில் சாதிக்கும் முனைப்புடன் தங்களை ஆயத்தப்படுத்தியுள்ளனர்.
இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான். 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை. 7 முறை தொடரை பறிகொடுத்திருக்கும் இந்திய அணி 2010-11-ம் ஆண்டில் மட்டும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அசாருதீன், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், டோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களால் முடியாத அந்த 31 ஆண்டு கால ஏக்கத்தை ரோகித் சர்மா படை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கேப்டன் ரோகித், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் என்று தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இங்குள்ள உயிரோட்டமான ஆடுகளத்தில் தாக்குப்பிடித்து ஆடுவது அவ்வளவு சுலபமல்ல. பந்தை நன்கு தீர்க்கமாக கணித்து ஆட வேண்டியது அவசியமாகும்.
செஞ்சூரியன் ஆடுகளத்தில் பந்து அதிவேகத்துடன் வெவ்வேறு விதமாக எகிறி பாயும். அதுவும் திறந்த வெளி மைதானம் என்பதால் குளிர்ச்சியான காற்றின் தாக்கமும் உண்டு. எல்லாமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் பேட்ஸ்மேன்கள் எப்படி தங்களை நிலை நிறுத்தி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். முதல் இன்னிங்சில் 300-க்கு மேல் ரன் எடுத்தாலே நம்பிக்கை வந்து விடும்.
Preps in full swing for the Boxing Day Test ?#TeamIndia sharpen their fielding skills ahead of the first #SAvIND Test tomorrow in Centurion ?? pic.twitter.com/SftEN2kDED
— BCCI (@BCCI) December 25, 2023
அனுபவம் வாய்ந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி பெரிதும் நம்பி இருக்கிறது. ஆப்-ஸ்டம்புக்கு மிகவும் வெளியே செல்லும் பந்துகளை தேவையில்லாமல் தொடுவதை தவிர்ப்பதில் கோலி எந்த அளவுக்கு பொறுமை காட்டுகிறார், அவசர கதியில் புல்ஷாட்டுகள் அடிப்பதை ரோகித் சர்மா எந்த அளவுக்கு குறைக்கிறார் என்பதில் தான் அவர்களின் பேட்டிங் ஆயுசும் அடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில் இவர்கள் கூடுதல் கவனமுடன் இருந்தாலே கணிசமாக ரன் சேர்த்து விடலாம். இந்திய மண்ணில் ரன் மழை பொழியும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு இந்த போட்டி அவர்களது உண்மையான திறமையை சோதித்து பார்க்கும் களமாக இருக்கும். விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனிக்க உள்ளார். எதிரணி ரபடா, இங்கிடி, யான்சென், கோட்ஜீ என்று 4 முனை சூறாவளி தாக்குதலை தொடுக்க காத்திருக்கிறது. அதற்கு ஏற்ப இந்திய பேட்ஸ்மேன்களும் வியூகம் தீட்டுகிறார்கள்.
உலகக் கோப்பையில் 24 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் விலகியது சற்று பாதிப்பு தான். இருப்பினும் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா வலுசேர்க்கிறார்கள். இது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் என்பதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அனேகமாக அஸ்வின் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று தெரிகிறது.
தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை சொந்த மண்ணில் எப்போதும் பலமிக்கவர்களாக விளங்குவார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். கேப்டன் பவுமா, மார்க்ரம், முன்னாள் கேப்டன் டீன் எல்கர், கீகன் பீட்டர்சன், டோனி டி ஜோர்ஜி ரன் வேட்டை நடத்தக்கூடியவர்கள். பந்து வீச்சில் ரபடா, இங்கிடி, யான்சென் மிரட்டுவார்கள்.
இங்கு முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதனால் எப்போது போட்டி தொடங்கினாலும் வேகப்பந்து வீச்சாளர்களின் கையே சற்று ஓங்கும் நிற்கும்.
மொத்தத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முட்டுக்கட்டை போடுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இது 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன் அல்லது டேவிட் பெடிங்ஹாம், கைல் வெரைன், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ஜெரால்டு கோட்ஜீ, ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது.
- நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.
சென்னை:
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய அரியானா, தலைவாஸ் அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்ததுடன் முதல் பாதியில் 18-12 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதியிலும் அரியானா வீரர்கள் மளமளவென புள்ளிகளை எடுத்தனர். குறிப்பாக சூப்பர் டேக்கிள்ஸ் யுக்தியில் அருமையாக செயல்பட்டு தலைவாஸ் அணியை தத்தளிக்க வைத்தனர். இந்த வகையில் மடக்கி பிடித்ததில் மட்டும் 13 புள்ளிகள் திரட்டினர்.
முடிவில் அரியானா அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. அதிகப்பட்சமாக தலைவாஸ் அணியில் சாஹில் குலியா 10 புள்ளியும், அரியானா தரப்பில் சிவம் படரே 8 புள்ளியும் எடுத்தனர்.
இதுவரை உள்ளுரில் நடந்த மூன்று ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது. அரியானா 5 வெற்றி, 2 தோல்வி என 26 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேப்டன் நவீன்குமார் 11 புள்ளி எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இன்றைய லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
- பத்திரிகையாளர்களிடம் ஐபிஎல் குறித்து கேள்வி கேட்கக்கூடாது என ரோகித் சர்மா கேட்டுக்கொண்டார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ஐ.பி.எல். தொடர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் குறித்து கேள்விகளை எழுப்ப தயாராக இருந்தனர்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடங்கியதும் ரோகித் சர்மா, ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்றார். இது பத்திரியாளர் சந்திப்பு தானே?... நாங்கள் கேள்விகள் கேட்க முடியும் என நிருபர்கள் தெரிவித்தனர். பிசிசிஐ லோகோவை சுட்டிக்காட்டு இது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பின்னர், அடுத்த இரண்டு வருடத்திற்கு கிரிக்கெட் விளையாடுவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. டி20 கிரிக்கெட் மற்றும் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு கேள்வி எழுப்பினர்.

அதற்கு எனக்கான, என்முன் இருக்கும் கிரிக்கெட்டில் நான் விளையாடுவேன் என்றார். அப்போதும் டி20 எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா பிடி கொடுக்காமல் பதில் அளித்தார்.
சீனியர் வீரர்களான நீங்கள் மற்றும் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாட விருப்பப்படுகிறீர்களா? என்று நேரடியாக கேள்விகளை தொடுத்தனர்.
அதற்கு ரோகித் சர்மா, நாங்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட விருப்பப்படுகிறோம். யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாட விரும்புவார்கள் என்றார்.
அதன்பின், நீங்கள் அனைவரும் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக ஒரு பதிலை பெறுவீர்கள் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தார்.






