என் மலர்
நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்"
- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள்.
இஸ்லாமாபாத்:
தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் கூறும் போது, பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான தாக்குதலில் துணிச்சலான கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலக முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தது.
- ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.
- இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி கேட்டனர்.
இந்த நிலையில் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. மேலும் அவர்களின் மத்திய ஒப்பந்தத்தை தாம தப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறும்போது, 3 வீரர்களும், மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலக நினைப்பது அவர்கள் வணிக லீக் போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தை காட்டுகிறது.
ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தது. இதன் மூலம் இந்த 3 வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில் கேள்விக் குறி ஏற்பட்டுள்ளது.






