search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Thalaivas Team"

    • மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது.
    • நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்திய அரியானா, தலைவாஸ் அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்ததுடன் முதல் பாதியில் 18-12 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

    பிற்பாதியிலும் அரியானா வீரர்கள் மளமளவென புள்ளிகளை எடுத்தனர். குறிப்பாக சூப்பர் டேக்கிள்ஸ் யுக்தியில் அருமையாக செயல்பட்டு தலைவாஸ் அணியை தத்தளிக்க வைத்தனர். இந்த வகையில் மடக்கி பிடித்ததில் மட்டும் 13 புள்ளிகள் திரட்டினர்.

    முடிவில் அரியானா அணி 42-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. அதிகப்பட்சமாக தலைவாஸ் அணியில் சாஹில் குலியா 10 புள்ளியும், அரியானா தரப்பில் சிவம் படரே 8 புள்ளியும் எடுத்தனர்.

    இதுவரை உள்ளுரில் நடந்த மூன்று ஆட்டத்திலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்து இருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் 2 வெற்றி, 5 தோல்வி என 11 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் இருக்கிறது. அரியானா 5 வெற்றி, 2 தோல்வி என 26 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 38-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி கேப்டன் நவீன்குமார் 11 புள்ளி எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இன்றைய லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. நாளையுடன் சென்னையில் நடைபெறும் லீக் சுற்று நிறைவடைகிறது.

    • தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார்.
    • நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    பெங்களூர்:

    9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சுடன் மோதுகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார். இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

    ‘புரோ கபடி லீக் போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான தொடக்கம் காணும்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் தெரிவித்தார். #ProKabaddiLeague2018
    சென்னை:

    12 அணிகள் பங்கேற்கும் 6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, ‘ஹாட்ரிக்’ சாம்பியனான பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியை எதிர்கொள்கிறது. சென்னை சுற்று ஆட்டம் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சோனாபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இந்த போட்டி நடக்கிறது.

    புரோ கபடியில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த சீசனில் வலுவான அணியாக உருவெடுக்க வீரர்கள் பலரை மாற்றி இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி ஆகஸ்டு 30-ந் தேதி முதல் சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் தலைவாஸ் அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான அளவில் இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனுக்காக தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறது. எங்களது பலம், பலவீனத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி அணியினரை தயார்படுத்தி இருக்கிறோம். எதிரணியின் பலம், பலவீனத்தை அறிந்து ஆட்ட வியூகம் அமைத்து களம் காணுவோம். இந்த முறை எங்கள் பிரிவில் இடம் பிடித்து இருக்கும் எல்லா அணிகளும் வலுவானது தான். அதனை சமாளிக்க திட்டமிட்டு செயல்படுவோம்.

    எங்கள் அணியில் 10 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். அணியில் பலவீனம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தொடக்க சுற்று ஆட்டங்களில் நாங்கள் சொந்த ஊரில் விளையாடுவது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. வீரர்கள் நல்ல புத்துணர்ச்சியுடன் உள்ளனர். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு நன்கு கிடைக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்த போட்டி தொடரில் நாங்கள் சிறப்பான தொடக்கம் காணுவோம்.

    இந்த போட்டித் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது தான் எங்கள் முதல் இலக்காகும். அதை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் அந்த அளவுக்கு நாங்கள் கடின பயிற்சி மேற்கொண்டு அணி வீரர்கள் இடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ProKabaddiLeague2018
    ×