என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான ஷபலென்கா காத்திருக்கிறார்.
    • 27 வயதான ஜெங் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று பிற்பகலில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ளவருமான சபலென்கா (பெலாராஸ்)-சீனாவை சேர்ந்த 12-ம் நிலை வீராங்கனையான ஜெங் மோதுகிறார்கள்.

    சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான சபலென்கா காத்திருக்கிறார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற அவர் அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்திலும், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

    சபலென்காவுக்கு எல்லா வகையிலும் ஜெங் ஈடு கொடுத்து விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவ் (ரஷியா-நான்காம் நிலை வீரான சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.

    மெட்வதேவ் 2-வது கிராண்ட்சிலாம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச்சை அதிர்ச்சிகரமாக வீழ்த்திய சின்னர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்.

    • ஜடேஜா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 4 விக்கெட் சாய்த்தார்.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் (80), கே.எல். ராகுல் (86) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது.

    ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் வெளியேறினார்.

    கடைசி விக்கெட்டுக்க அக்சர் பட்டேல் உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றபோதிலும் 44 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோடி ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • கவாஜா 75 ரன்கள் எடுத்து நீண்ட நேரம் களத்தில் நின்றார்.
    • அறிமுக போட்டியிலேயே நட்சத்திர வீரரை வீழ்த்தினார் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்.

    ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

    நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதலில் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் டிக்ளேர் செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா சிறப்பாக விளையாடி 75 ரன்கள் சேர்த்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் அலேக்ஸ் கேரியுடன் இணைந்து 6-வது விக்கெட்கட்கு 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    கவாஜா சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். சின்க்ளேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த போது ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் களத்தில் நின்ற கவாஜாவின் விக்கெட்டை அறிமுக போட்டியில் வீழ்த்தியதும் உற்சாகத்துடன் சின்க்ளேர் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து (Cartwheel Celebration) சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஐதராபாத் அணி வீரர் தன்மய் அகர்வால் ரஞ்சி போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார்.
    • அதிவேக இரட்டை சதம் மற்றும் அதிவேக முச்சதம் சாதனைகளை முறியடித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி தொடர் நடந்து வருகிறது.

    அதில் ஐதராபாத், அருணாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேசம் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரர்களாக தன்மய் அகர்வால், கேப்டன் ராகுல் சிங் இறங்கினர். இருவரும் சேர்ந்து அருணாச்சல் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். ராகுல் சிங் 105 பந்துகளில் 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தன்மய் அகர்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 119 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட் (உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை சேர்த்து) வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முச்சதம் கடந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 160 பந்துகளில் 323 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்மய் அகர்வால் படைத்தார்.

    ஒரே நாளில் 300 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர், இரண்டாவது ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 21 சிக்சர், 33 பவுண்டரிகள் விளாசி இருந்தார்.

    21 சிக்சர் அடித்ததன் மூலம் இந்திய முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஏற்கனவே, இஷான் கிஷன் 14 சிக்ஸ் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தன்மய் அகர்வால் உடைத்தார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 48 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் குவித்தது.

    அருணாச்சல பிரதேசம் அணி 172 ரன்கள், ஐதராபாத் அணி 527 ரன்கள் எடுத்த நிலையில் ஒரே நாளில் 701 ரன்கள் குவிக்கப்பட்டது.

    விஸ்டன் அல்மனாக்கின் கூற்றுப்படி, முதல் தர கிரிக்கெட் போட்டி 1772-ல் விளையாடப்பட்டது. சுமார் 252 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றது.
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஓமனில் நடைபெற்று வரும் முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்று இருந்தது.

    இதே பிரிவில் இந்தியாவுடன் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி பாதையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அந்த வகையில் இந்திய அணி இன்று (ஜனவரி 26) காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடியது.

     


    போட்டி முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா சார்பில் தீபிகா சோரெங், ருதஜா பிசல் ஆகியோர் தலா 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும், ஓரிவா ஹெபி 1 கோல் அடித்தனர்.

    அரையிறுதி சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லீக் சுற்று வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி 75-வது குடியரசு தினத்தை ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சிறப்பாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை எம்.எஸ். டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் கொடி கம்பத்தில் உயரமாக பறக்கும் தேசிய கொடியை எம்.எஸ். டோனி பார்த்து கொண்டே நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

     


    விரைவில் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடரில் எம்.எஸ். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்க இருக்கிறார். கடந்த ஆண்டுடன் ஐ.பி.எல்.-இல் இருந்து டோனி ஓய்வு பெறுவார் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.

    அந்த வகையில், இது தொடர்பான கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். அதில், இது அவரின் கடைசி தொடராக இருக்குமா என்பதை எம்.எஸ். டோனி தான் முடிவு செய்வார் என தெரிவித்து இருக்கிறார்.



    • 2வது அரையிறுதியின் முதல் 2 செட்டை ஸ்வரேவ் எளிதில் வென்றார்.
    • அடுத்த 3 செட்களை மெத்வதேவ் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட ஸ்வரேவுடன் மோதினார்.

    முதலில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த 3 செட்களையும் சிறப்பாக ஆடி கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், மெத்வதேவ் 5-7, 3-6, 7-6 (7-4), 7-6 ( 7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், இத்தாலி வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா 2வது நாள் முடிவில் 421 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி 70 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜெய்ஸ்வால் 80 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் 34 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஜடேஜாவுடன் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரீகர் பரத் 41 ரன்னில் அவுட்டானார். அஸ்வின் ஒரு ரன்னில் ரன் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய அக்சர் படேல் நிதானமாக ஆடினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் படேல் 35 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்திய அணி இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • முதல் அரையிறுதியின் முதல் 2 செட்டை சின்னர் எளிதில் வென்றார்.
    • மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    இறுதியில், சின்னர் 6-1, 6-2, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • ராகுல் - ஷ்ரேயாஸ் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது.
    • கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் 2-வது நாள் இன்று தொடங்கியது. முதல் ஓவரை ரூட் வீசினார். 2-வது பந்தை பவுண்டரி விரட்டிய ஜெய்ஸ்வால் 4-வது பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேஎல் ராகுல் 0 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் நழுவவிட்டார்.

    கில் - ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். பொறுமையாக விளையாடி வந்த கில் பவுண்டரி விளாச நினைத்து கேட்ச் கொடுத்து 23 (66) ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து ராகுல் - ஷ்ரேயாஸ் ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடினர். அவ்வபோது பவுண்டரிகளும் பறக்க விட்ட இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.

    இதனால் 2-ம் நாள் மதிய உணவு இடைவெளி வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் 34 ரன்னிலும் கேஎல் ராகுல் 55 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தது.

    இதனையடுத்து இந்திய அணி சுழற்பந்து வீச்சை உபயோகப்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினார். இறுதியில் இங்கிலாந்து அணி 64.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

    அதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 127 ரன்கள் தான் குறைவாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும். எப்படி ஆடினால் நீங்கள் முன்னிலை பெறுவீர்கள் என்பதில் தான் போட்டியின் மகிமையே இருக்கிறது.

    இதனை நீங்கள் புத்திசாலித்தனம், தைரியம் அல்லது பேஸ் பால் என்று எல்லாம் அழைக்க தேவையில்லை.

    போட்டியின் சூழல் மாறினால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுடைய தருணத்திற்காக நீங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களால் சூழலைப் புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    நீங்கள் பேஸ் பால் அல்லது எந்த மாதிரி பாலை விளையாடினாலும் சரி. உங்களுக்கு அது நன்மையை கொடுக்காது.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை.
    • ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய பிறகு எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 2022-ம் ஆண்டு காமன்வெல்த் தகுதி போட்டிக்கு முன்பாக கால் முட்டியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்த அவர் களம் திரும்பவில்லை.

    இந்த நிலையில் 41 வயதான மேரிகோம் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று செய்தி வெளியானது. 40 வயதுக்கு மேல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இதனை மேரிகோம் மறுத்துள்ளார்.

    இது குறித்து மேரிகோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை. ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது. திப்ருகாரில் (அசாம்) கடந்த புதன்கிழமை நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறுவர்களை ஊக்கப்படுத்தினேன். நான் இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் தான் இருக்கிறேன். ஆனால் வயது கட்டுப்பாடு காரணமாக என்னால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. ஆனால் என்னால் விளையாட்டை தொடர முடியும். நான் இன்னும் எனது உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். ஓய்வு பெற முடிவு செய்யும் போது முறைப்படி அறிவிப்பேன்' என்றார்.

    ×