என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது.
    • 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அறிமுக தொடரில் இருந்து விளையாடி வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அந்த அணி நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்களை வாரி வழங்கி 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பந்து வீச்சு படுமோசமாக இருப்பதால் பெங்களூரு அணி வீரர்கள் தேர்வு விஷயத்தில் தவறு இழைத்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.

    இந்த நிலையில் பிரபல இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும், பெங்களூரு அணி நிர்வாகத்தை சாடியிருக்கிறார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், 'விளையாட்டின், ஐ.பி.எல். கிரிக்கெட்டின், ரசிகர்களின், வீரர்களின் நலன் கருதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வேறு உரிமையாளரிடம் விற்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். மற்ற அணி நிர்வாகங்கள் எப்படி அணியை சிறப்பாக கட்டமைத்து செயல்படுகிறதோ? அதேபோல் பெங்களூரு அணியையும் சிறப்பானதாக உருவாக்கும் அக்கறை கொண்ட புதிய உரிமையாளரிடம் விற்று விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நேற்று ஏற்றப்பட்டது.
    • வழக்கமாக சூரியஒளியை குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதில் இருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும்.

    ஏதென்ஸ்:

    33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    போட்டிக்கான 'கவுண்டவுன்' தொடங்குவதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் நேற்று நடந்தது.

    வழக்கமாக சூரியஒளியை குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதில் இருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும். ஆனால் நேற்று ஒலிம்பியாவில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவியதால் சூரியஒளியை பார்க்க முடியவில்லை. வானிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்ததால் அதற்குஏற்ப மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

    இதன்படி கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை நோக்கி வணங்கி விட்டு அங்கு சிறிய பானையில் எரிந்து கொண்டிருந்த ஜூவாலையில் தீபத்தை ஏற்றினார். சிறிது நேரத்தில் மேகக்கூட்டம் கலைந்து சூரிய ஒளியும் பளிச்சிட்டது.

    அதன் பிறகு ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் துடுப்பு படகு வீரர் ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ் முதல் நபராகவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரே மனவ்டோவும் சிறிது தூரம் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர். கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தீபம் பயணிக்கிறது. அது முடிந்து வருகிற 26-ந்தேதி பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் தீபம் ஒப்படைக்கப்படுகிறது. 

    பின்னர் ஒலிம்பிக் தீபம் பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 400 நகரங்களில் தொடர் ஓட்டம் நடைபெறுகிறது. இங்கு ஏறக்குறைய 10 ஆயிரம் பேரின் கைகளில் தீபம் தவழ இருக்கிறது. இறுதியில் தொடக்க விழா நடைபெறும் பாரீசுக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள மெகா கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டதும் போட்டி தொடங்கும்.

    ஒலிம்பிக் தீபம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் பேசுகையில், 'ஒலிம்பிக் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் இந்த அமைதியான போட்டியில் ஒன்றிைணக்கிறது. வீரர், வீராங்கனைகள் முடிந்த அளவுக்கு கடும் சவாலுடன் மோதிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் நாம் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் ஒரே குடைக்குள் வாழ்கிறோம் என்பதையும் உணர்த்துகிறார்கள்' என்றார்.

    மேலும் அவர், 'இது ஒரு கடினமான காலக்கட்டம். அதிகரித்து வரும் போர், மோதல்கள் மற்றும் நாள்தோறும் எதிர்கொள்ளும் வெறுப்பு, எதிர்மறை செய்திகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். நம்மை ஏதாவது ஒன்று ஒன்றிணைத்து விடாதா என்று ஏங்குகிறோம். இன்று ஏற்றப்பட்டுள்ள ஒலிம்பிக் சுடர் அந்த நம்பிக்கையின் சின்னமாக தெரிகிறது' என்றும் குறிப்பிட்டார்.

    • புள்ளிபட்டியலில் குஜராத் அணி 6-வது இடத்தில் உள்ளது.
    • டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 197 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது.

    அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆனால் மிடில் வரிசை பேட்டிங்கில் தடுமாற்றம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ரஷித் கான், மொகித் ஷர்மா, உமேஷ் யாதவ், நூர் அகமது வலுசேர்க்கிறார்கள்.

    டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் வார்னர், பிரித்வி ஷாவும், பந்து வீச்சில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர். மூன்று துறைகளிலும் அந்த அணி நிலையான திறனை வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் அனுகூலத்துடன் களம் காணும் குஜராத்தை சமாளிப்பது டெல்லி அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
    • ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

    பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 19 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ரியான் பராக் தன் பங்கிற்கு 34 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார்.

    அடுத்தடுத்து வந்த துருவ் ஜூரெல், அஸ்வின் மற்றும் ஹெட்மையர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், துவக்கத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். இவருடன் போவெல் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் ஹர்ஷித் ரானா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வைபவ் அரோரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கொல்கத்தா அணியின் சுனில் நரைன் சதம் அடித்தார்.
    • ஆவேஷ் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடினார். அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 11 ரன்களில் நடையை கட்டினார்.

    பிறகு நரைனுடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரே ரசல் ரன் குவிப்பில் ஈடுபட்டார். போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி சதம் அடித்த சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்களை குவித்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்தல் செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிலிப் சால்ட் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சுனில் நரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 49 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது.

    தொடர்ந்து விளையாடிய அவர் 56 பந்தில் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

    • ஒரே போட்டியில் தோல்வியை தழுவியது.
    • புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரே போட்டியில் தோல்வியை தழுவி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரே போட்டியில் தோல்வியை தழுவியது.

    இரு அணிகளும் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரே தோல்வியை தழுவியுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் வெற்றியை தொடரும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

    • சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 19.2 ஓவரில் சென்னை அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி களம் இறங்கினார். அவர் அடுத்த 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 206 ரன்களை குவித்தது. இதுதான் ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தார்.

    இந்நிலையில், போட்டியின் போது டோனி ஹாட்ரிக் சிக்சர் அடித்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக தூரம் சிக்சர் அடித்த வீரர்களில் கிளாசனை முந்தியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 287 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் சதமும் ஹென்ரிச் கிளாசென் அரை சதமும் விளாசினர்.

    ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் போட்டியின் 17-வது ஓவரில் அவர் அடித்த சிக்சர் ஒன்று 106 மீ தூரம் வரை சென்றது. இதன் மூலமாக இந்த சீசனில் அதிக தூரம் சிக்சர் அடித்து வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக வெங்கடேஷ் ஐயர் அடித்த சிக்சர் 106 மீ தூரம் சென்றது. நிக்கோலஸ் பூரன் 106 மீ மற்றும் இஷான் கிஷான் 103 மீ தூரம் வரை சிக்சர் அடித்திருந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தினேஷ் கார்த்தி களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.

    அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் ஒன்று அதிக தூரம் வரை சென்று சாதனையை உருவாக்கியுள்ளது. 106 மீ அதிகபட்சமாக இருந்த நிலையில், தினேஷ் கார்த்திக் 108 மீ நீண்ட தூரம் சிக்சர் அடித்து கிளாசெனின் சாதனையை முறியடித்துள்ளார். இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ஆர்சிபி விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    • பந்து வீச்சில் ஆர்சிபி அணியின் 4 பவுலர்கள் அரைசதம் விளாசினர்.
    • அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 68 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

    பெங்களூருவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இந்த சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் பவுலிங் சரியில்லை என்று அவருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், அவரும் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 52 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும், ரீஸ் டாப்லி 68 ரன்களும், வைஷாக் விஜயகுமார் 64 ரன்களும், யாஷ் தயாள் 51 ரன்களும் வாரி வழங்கினர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்வதை கண்ட விராட் கோலி மைதானத்திலேயே மனமுடைந்து நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மோசமான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசியதை கண்ட விராட் கோலி ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே திட்டித் தீர்த்தார். அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.

    இதனை கண்ட ரசிகர்கள் பீல்டிங் நின்றால் சுறுசுறுப்பாக இருக்கும் அந்த வீரரை இப்படி கண்கலங்கும் வகையில் நிற்க வைத்து வீட்டீர்களே என ஆர்சிபி பவுலர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

    ஆர்சிபி ரசிகர்கள் தவிர மற்ற ரசிகர்கள் விராட் கோலிக்காக ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று.
    • பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம் என ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர். டி20 கிரிக்கெட் ஏற்ற மைதானமாக இந்த மைதானம் இருந்தது. கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம்.

    ஆனால் 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று. இருந்தாலும் நாங்கள் நிறைய விசயங்களை இந்த போட்டியில் முயற்சி செய்தோம். அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதில் மிக சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ரன் ரேட்டினை மனதில் வைத்து தான் எந்த இடத்திலும் ரன்களை குறைய விடாமல் விளையாடினோம். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் 30 முதல் 40 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக வழங்கி விட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இருந்தாலும் எங்கள் பேட்டர்கள் கடைசி வரை நின்று விடாமுயற்சியுடன் வெற்றிக்கு போராடியது மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு டு பிளெசிஸ் கூறினார்.

    • 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 10- வது சுற்று நேற்று நடந்தது.
    • டி. குகேஷ் இந்த சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியை எதிர் கொண்டார்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 10- வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியை எதிர் கொண்டார். 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது. இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்ட மும் டிராவில் முடிந்து இருந்தது.

    10 சுற்றுகள் முடிவில் குகேசும், இயன் நெபோம்னி யாச்சியும் தலா 6 புள்ளி களுடன் முன்னிலையில் உள்ளனர். இன்னும் 4 சுற்றுகளே எஞ்சியுள்ளன.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 10-வது ரவுண்டில் சக நாட்டவரான விதித் குஜராத்தியுடன் மோதினார். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்ற ஆட்டங்களில் ஹிகாரு நகமுரா , பேபி யானோ (இருவரும் அமெ ரிக்கா) வெற்றி பெற்றனர். அவர்கள் முறையே நிஜாத் அப்சோவ் (அ ஜர்பைஜான்), அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) ஆகியோரை தோற்கடித்தனர்.

    பெண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா சகோதரி வைஷாலி பல்கேரியாவை சேர்ந்த நூர்சியுல் சலிமோ வாவை 10-வது சுற்றில் எதிர் கொண்டார். இதில் வைஷாலி வெற்றி பெற்றார். அவரை 2-வது முறையாக வீழ்த்தியுள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங் கனை ஹம்பி சீன வீராங்கனை டான் ஜோங்கியுடன் மோதிய ஆட்டம் டிரா ஆனது.

    10 சுற்றுகள் முடிவில் ஹம்பி 4.5 புள்ளியுடன் 5-வது இடத்திலும், வைஷாலி 3.5 புள்ளியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    ×