என் மலர்
விளையாட்டு
- குஜராத் அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
- டெல்லி அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- நேற்று நடைபெற்ற கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சுனில் நரைன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்
- இதன் மூலம் 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உள்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார்.
இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவது குறித்தும் சுனில் நரேன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.
இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்" என்று கூறினார்.
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மேட்ரிட்:
பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவுடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- 9-வது விக்கெட்டுக்கு பட்லர்- ஆவேஷ் கான் ஜோடி 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
- இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20-வது ஓவர் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
ராஜஸ்தான் அணி 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது பட்லருடன் ஆவேஷ் கான் ஜோடி சேர்ந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ஆவேஷ் கான் ஒரு பந்து கூட சந்திக்காமல் கடைசி வரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்தார். ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பட்லர் பார்த்துக் கொண்டு ஆடினார்.
9-வது விக்கெட்டுக்கு இவர்களது பார்ட்னர்ஷிப் 38 ரன்கள் ஆகும். இதில் ஆவேஷ் கான் 0 ரன் எடுத்திருந்தார்.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறைக்கு வீரர்கள் சென்றனர். அந்த வகையில் ஆவேஷ் கானுக்கு சென்றார். அப்போது அவருக்கு ராஜஸ்தான் அணி சார்பில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
- ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும்.
கொல்கத்தா:
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் களம் இறங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடைசி வரை களத்தில் தனி நபராக நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
தொடக்கத்தில் மெதுவாக பட்லர் விளையாடினார். முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.
ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் பட்லர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் இருந்த ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பார்த்துக் கொண்டு புத்தி சாலித்தனமாக ஆடினார். தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
ஐ.பி.எல். போட்டியில் பட்லர் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவரது 2-வது சென்சுரி ஆகும் ஐ.பி.எல்.லில் அதிக சதம் அடித்த வீரர்களில் பட்லர் 2-வது இடத்தில் உள்ளார். கோலி 8 சென்சுரியுடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 6 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும். அவர் கிறிஸ் கெய்ல் (22 சதம்), பாபர் ஆசம் (11), விராட்கோலி (9), ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.
கடைசி 6 ஓவரில் ராஜஸ்தான் 96 ரன் எடுத்தது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி 6 ஓவரில் 92 ரன் எடுத்தது.
இதே போல கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனும் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.
- பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன.
- கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.
கொல்கத்தா:
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 224 ரன் இலக்கை எடுத்து ராஜஸ்தான் சாதனை வெற்றியை பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன் என்ற இமாலய இலக்கு இருந்தது.
சுனில் நரைன் 56 பந்தில் 109 ரன்னும் (13 பவுண்டரி, 6 சிக்சர்), ரகுவன்ஷி 18 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். அவேஷ்கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டும், போல்ட், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி பந்தில் வெற்றி பெற்று சாதித்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 60 பந்தில் 107 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரியான் பராக் 14 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), போவெல் 13 பந்தில் 23 ரன்னும் (1 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்தனர். ஹர்சித் ரானா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், வைபவ் அரோரா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
224 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் ராஜஸ்தான் தனது சாதனையை சமன் செய்தது. 2020-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் 224 ரன் இலக்கை எட்டி பிடித்து சாதனை புரிந்து இருந்தது. அதை நேற்று சமன் செய்தது.
ராஜஸ்தான் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-
பட்லர் ஒரு சிறப்பான வீரர். அவர் களத்தில் இருக்கும் போது எந்த ஒரு இலக்கும் பாதுகாப்பாக இருக்காது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
6-வது விக்கெட் விழுந்த பிறகு ரோமன் போவல் உள்ளே வந்து அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்ததும் நாங்கள் இன்னும் ஆட்டத்தில் இருப்பது போல உணர்ந்தோம். அவர் ஆட்டம் இழந்த பிறகு ஜோஸ் பட்லர் அதிரடியை வெளிப்படுத்தினார். எங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது.
இது மிகவும் வேடிக்கையான விளையாட்டு. சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த பிட்ச் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது.
ஜோஸ் பட்லர் கடந்த 6-7 ஆண்டுகள் செய்ததை தொடர்ந்து செய்துள்ளார். தொடக்க வீரரான அவர் 20 ஓவர் வரை பேட்டிங் செய்தால் எந்த ரன் இலக்கையும் எடுத்து விடுவார். டக் அவுட்டும் ஆவார். கடைசி வரை நின்று வெற்றியும் பெற வைப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தா அணி 2-வது தோல்வியை தழுவியது. 223 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் தோற்றதால் அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஏமாற்றம் அடைந்துள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. கசப்பான மாத்திரை போல் இருக்கிறது. பரபரப்பான இந்த போட்டியில் வீரர்களின் உணர்ச்சி தருணங்கள் மாறி மாறி இருந்தன. இந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கிரிக்கெட் உண்மையிலேயே கணிக்க முடியாத விளையாட்டாகும்.
இந்த ஆட்டத்தில் நாங்கள் சரியான முறையில் தான் பந்து வீசினோம். கொஞ்சம் தவறினால் கூட பேட்ஸ்மேன்கள் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்பி விடுகிறார்கள்.
நல்ல வேளையாக இந்த தோல்வி எங்களுக்கு இப்போதே கிடைத்து விட்டது. முக்கியமான நேரத்தில் தோல்வி அடைந்திருந்தால் அது கடினமாக இருக்கும். தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டு வருவது முக்கியம்.
சுனில் நரைன் கொல்கத்தா அணியின் விலை மதிக்க முடியாத சொத்து. அவரால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.
இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.
- கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
- அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம்.
கொல்கத்தா:
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய சுனில் நரேன் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார்.
இதையடுத்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் சதம் (107 ரன்) அடித்து அசத்தினார்.
நடப்பு ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வரும் ஜூன் 1-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை அணியில் சுனில் நரைன் இடம் பெறுவாரா என ராஜஸ்தான் வீரர் ரோவ்மன் பவலிடம் கேள்வி கேட்க்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
220 ரன்களை சேசிங் செய்தது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது. நான் களமிறங்கிய போது சுனில் நரைனை அட்டாக் செய்யும் திட்டத்துடன் தான் களமிறங்கினேன்.
ஏனென்றால் கொல்கத்தா அணியின் சிறந்த பவுலர் நரைன் தான். அதேபோல் சூழலும் அதற்கேற்றபடி அமைந்தது. அதனால் எனது பலத்தை அறிந்து, ஷாட்களை விளையாடினேன். அது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
ஆனால் எங்கள் எல்லோரையும் அவர் தவிர்த்துவிட்டு செல்கிறார். அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம். டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன் நிச்சயம் மனதை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.
ராஜஸ்தான் அணியின் சிந்தனையும், எண்ணமும் ஒன்றாக உள்ளது. அதேபோல் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கும் சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் பகிரப்படுகிறது. சர்வதேச வீரரான எனக்கு சரியாக தகவல்கள் சொல்லப்படுவதை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல சூழலில் உள்ளோம்.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்காக நான் 4 அல்லது 5 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறேன். அதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்னை மேல் வரிசையிலும் களமிறக்கலாம். அடுத்த சில நாட்கள் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு நாட்களில் சங்கக்காராவின் காதுகளில் இதனை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
- இந்த சீசனிலும் டோனி கால் வலியால் அவதிப்பட்டு வருவதை பலமுறை பார்க்க முடிந்தது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதி ஓவரில் களமிறங்கிய டோனி 4 பந்துகளை எதிர்கொண்டார். இதில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனிலும் டோனி கால் வலியால் அவதிப்பட்டு வருவதை பலமுறை பார்க்க முடிந்தது. ஆம், இடது காலில் அவ்வப்போது ஐஸ்பேக் வைத்து வலம் வருகிறார். அப்படி ஒரு வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மும்பை போட்டியை முடித்துக் கொண்டு சிஎஸ்கே வீரர்கள் லக்னோவிற்கு புறப்பட தங்கியிருந்த அறையிலிருந்து வெளியில் வருகின்றனர்.
அதில், டோனி நண்பனும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா உடன் கையை பிடித்துக் கொண்டு வருகிறார். அப்போது படிக்கட்டில் இறங்குவதற்கு சுரேஷ் ரெய்னா உதவி செய்திருக்கிறார். ரெய்னாவின் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக படிக்கட்டிலிருந்து இறங்கி பேருந்தை நோக்கி செல்கிறார். பேருந்தை அடைந்தவுடன் ரெய்னா வெளியே செல்கிறார். டோனி சிஎஸ்கே பஸ்சில் செல்கிறார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. சிஸ்கே தங்களது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது.
வரும் 19-ம் தேதி லக்னோவில் நடைபெறும் 34-வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லக்னோவின் ஹோம் மைதானத்தில் நடைபெறுகிறது.
- விராட் கோலி மற்றும் அனுஷ்க சர்மா தம்பதிக்கு பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்தது.
- அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி மகள் வாமிகா பிறந்தாள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், அதற்கு முன் சில மாதங்களாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தையை வரவேற்க இருப்பதாகவே செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது தான், விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவியர்ஸ் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.இதையடுத்து, ஒரு சில நாட்களுக்கு பிறகு அது உண்மையில்லை என்று அதற்கு மறுப்பு செய்தியும் வெளியிட்டார்.
இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் 20-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.
தற்போது விராட் கோலி ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தனது மகன் அகாய் மற்றும் மகள் வாமிகா உடன் லண்டனிலிருந்து திரும்ப வந்துள்ளார். இந்தியா வந்த அவரை மும்பை விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது தனது மகன் மற்றும் மகளை கேமராவிற்கு மறைத்து தான் மட்டுமே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், மகனை புகைப்பட கலைஞர்களிடம் காண்பித்துள்ளார். புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஆர்சிபி விளையாடும் போட்டியை பார்க்க அனுஷ்கா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் சதம் அடித்து அசத்தினார்.
- கொல்கத்தா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தன் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன் பல சாதனைகளை படைத்துள்ளார். 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை அவர் படைத்தார். மொத்தமாக கொல்கத்தா அணிக்காக சதம் அடித்தவர்களில் மெக்கல்லம் (2008-ம் ஆண்டு) முதல் இடத்திலும் வெங்கடேஷ் ஐயர் (2023-ம் ஆண்டு) 2-வது இடத்திலும் உள்ளார். அவர்களுக்கு அடுத்தப்படியாக சுனில் நரைன் உல்ளார். மேலும் சதம் மற்றும் விக்கெட் எடுத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் இடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:-
107 & 3/21 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக பஞ்சாப், பெங்களூரு, 2011
175* & 2/5 - கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி) எதிராக புனே, பெங்களூரு, 2013
104* & 2/38 - ஷேன் வாட்சன் (ஆர்ஆர்) எதிராக கேகேஆர், பிரபோர்ன், 2015
106 & 1/13 - ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) எதிராக ஆர்ஆர், புனே, 2018
109 & 2/30 - சுனில் நரைன் (கேகேஆர்) எதிராக ஆர்ஆர், கொல்கத்தா, 2024
- முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.
- கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.
அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 19 (9) ரன்னில் அவுட்டாகினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
அதனை தொடர்ந்து பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து. அதிரடியாக விளையாடி ரியான் பராக் 34 ரன்களில் அவுட்டாகினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26, ரன்களில் அவுட்டாகினர்.
இருப்பினும் தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் அணி சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.






