என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • மும்பையில் அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    அதன்பின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒவ்வொருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.


    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா என 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

    இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் தோற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த எமில் ரூசுவோரி உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-7 (10-12), 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ரஜாவத்தை தவிர, மூன்றாம் நிலை இந்திய மகளிர் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் காலிறுதிக்கு முன்னேறியது.
    • இந்திய ஜோடி அடுத்ததாக சீன தைபேயின் பெய் ஷான் ஹ்சீ மற்றும் என்-ட்சு ஹங் ஜோடியை எதிர்கொள்கிறது.

    இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் கனடா ஓபனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கனடா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் டகுமா ஒபயாஷியை நேர் கேம்களில் வீழ்த்தி முன்னேறினார்.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் உலக தரவரிசையில் 39 இடத்தில் உள்ள ரஜாவத் 33-வது தரவரிசையில் உள்ள ஒபயாஷியை 21-19, 21-11 என்ற கணக்கில் 38 நிமிடங்களில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் முதல் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொள்கிறார்.

    ரஜாவத்தை தவிர, மூன்றாம் நிலை இந்திய மகளிர் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் காலிறுதிக்கு முன்னேறியது.

    48 நிமிடங்கள் நீடித்த 16-வது சுற்று ஆட்டத்தில் ட்ரீசா மற்றும் காயத்ரி ஜோடி 17-21, 21-7, 21-8 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் நடாஸ்ஜா பி அந்தோனிசென் மற்றும் நெதர்லாந்தின் அலிசா டிர்டோசென்டோனோ ஜோடியை தோற்கடித்தது.

    இந்திய ஜோடி அடுத்ததாக சீன தைபேயின் பெய் ஷான் ஹ்சீ மற்றும் என்-ட்சு ஹங் ஜோடியை எதிர்கொள்கிறது.

    அனுபமா உபாத்யாயா மற்றும் தான்யா ஹேமந்த் இருவரும் தங்களது இரண்டாவது சுற்று பெண்கள் ஒற்றையர் ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்.

    கனடாவின் மிச்செல் லீக்கு எதிராக அனுபமா கடுமையாக போராடி 14-21, 21-17, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். தன்யா 11-21, 13-21 என்ற நேர் கேம்களில் மூன்றாம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் தோல்வியடைந்தார்.

    ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான கிருஷ்ண பிரசாத் கரகா மற்றும் கே சாய் பிரதீக் ஜோடி 21-19, 18-21, 17-21 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் பிங்-வீ லின் மற்றும் சிங் ஹெங் சூ ஜோடியிடம் தோல்வியடைந்தது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் கபூர் மற்றும் ருத்விகா ஷிவானி காடே ஜோடியும் 15-21, 21-19, 9-21 என்ற கணக்கில் 8-ம் நிலை சீன தைபே ஜோடியான செங் குவான் சென் மற்றும் யின்-ஹுய் ஹுசு விடம் தோல்வியடைந்தது.

    • பெனால்டி ஷூட்அவுட்டில் மெஸ்சி வாய்ப்பை தவறவிட்டார்.
    • ஈகுவடாரின் முதல் இரண்டு வாய்ப்புகளையும் அர்ஜென்டினா கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா- ஈகுவடார் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்ட்டினேஸ் கோல் அடித்தார். கார்னர் வாய்ப்பில் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா முதல் பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்தில் ஈகுவடார் அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஸ்டாப்பேஜ் (காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு வழங்கப்படும் கூடுதல் நேரம்) நேரத்தில் 91-வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சக வீரர் பாஸ் செய்த பந்தை கெவின் ரோட்ரிக்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என சமநிலையில் முடிந்தது.

    இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அர்ஜென்டினா முதலில் ஆரம்பிடித்தது. மெஸ்சி முதல் வாய்ப்பை பயன்படுத்தினார். பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது. இதனால் மெஸ்சி ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஈகுவடாரின் முதல் வாய்ப்பில் அந்நாட்டு வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார்.

    இதனால் 0-0 என ஆனது. அதன்பின் அர்ஜென்டினா தொடர்ந்து 3 வாய்ப்புளிலும் கோல் அடித்தது. ஈகுவடார் 2-வது வாய்ப்பிலும் கோல் அடிக்காமல் தவறவிட்டது. 3-வது மற்றும் 4-வது முறை கோல் அடித்தது. இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலையில் இருந்தது.

    ஐந்தாவது மற்றும் கடைசி வாய்ப்பை அர்ஜென்டினா கோலாக மாற்றியது. இதனால் 4-2 என அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக சேசிங் செய்தது. 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 15 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. 15-வது ஓவரில் 24 ரன்கள் குவித்த அந்த அணி பெரிய அளவில் தன்னம்பிக்கையை பெற்றது.

    ஆனால், 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தமே ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க தென்னாப்பிரிக்கா அணி திணறியது. அதன் காரணமாக, அந்த அணிக்கு இருந்த அழுத்தம், இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    பாராட்டு விழாவில், பும்ராவை 'உலகின் எட்டாவது அதிசயம்' மற்றும் 'தேசிய பொக்கிஷம்' என்று அழைக்கும் மனுவில் கையெழுத்திடுவீர்களா என்று கேட்டதற்கு, கோலி சிறிதும் தயங்காமல் கையெழுத்திடுவேன் என்று விராட் கோலி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- மைதானத்தில் இருந்த அனைவரையும் போலவே ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையும் கையை விட்டு நழுவுகிறது என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் என்ன நடந்ததோ அது மிகவும் அற்புதமானது. நாம் அனைவரும் இந்த போட்டியில் நம்மை மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு வந்த வீரரை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்த தொடரில் மீண்டும், மீண்டும் அதை செய்தார். அந்த கடைசி ஐந்து ஓவரில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசினார். அது அற்புதமாக இருந்தது என்றார்.

    இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    • 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமத்து அளவிலும் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் ஒரு அடித்தளமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வென்றுள்ளன. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்களுக்கு ஐ.பி.எல்.-ல் ஆடும் அதிர்ஷ்டம் அடிப்பதால் இளம் வீரர்கள் எப்போதும் தங்களது முழு திறமையை வெளிக்காட்ட முயற்சிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் உள்ளிட்டோர் டி.என்.பி.எல்.-ல் அபாரமாக ஆடியதாலேயே ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி மட்டும் சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறும். இறுதிப்போட்டி ஆகஸ்டு 4-ம்தேதி நடக்கிறது.

    இந்த சீசனில் ஜெகதீசன், பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் (3 பேரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), ஷாருக்கான், சாய் சுதர்சன், எம்.சித்தார்த் (கோவை), வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், அலெக்சாண்டர் (மதுரை), கடந்த ஆண்டில் ஒரு சதத்துடன் 385 ரன் குவித்து முதலிடம் பிடித்தவரான அஜிதேஷ், அருண் கார்த்திக் (நெல்லை), டெஸ்டில் 516 விக்கெட் வீழ்த்திய சாதனையாளரான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக சுழலில் மிரட்டிய வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் (4 பேரும் திண்டுக்கல்), சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவசாலிகளான விஜய் சங்கர், டி.நடராஜன், சாய் கிஷோர் (3 பேரும் திருப்பூர்), ஹரிஷ்குமார் (சேலம்), ரூ,22 லட்சத்துக்கு ஏலம் போன ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவ், அதிசயராஜ் டேவிட்சன் (திருச்சி) உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்று இருப்பதால் அவர்கள் டி என் பி எல் -ல் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள்.

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல்சுற்று ஆட்டங்கள் சேலத்தில் நடக்கிறது. சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன், ரஞ்சன் பால், பெரியசாமி, ரஹில் ஷா, ஷாஜகான், அபிஷேக் தன்வர், சிலம்பரசன் ஆகியோர் நன்றாக ஆடக்கூடியவர்கள். இதேபோல் கோவை அணிக்கு கேப்டன் ஷாருக்கான், முகிலேஷ், தாமரைக் கண்ணன், சித்தார்த், சுரேஷ்குமார், முகமது உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

    இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், 3-ல் கோவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஏறக்குறைய சரிசம பலத்துடன் வெற்றியோடு தொடங்கும் உத்வேகத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    சேப்பாக் கேப்டன் பாபா அபராஜித் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆண்டு சேப்பாக் அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதுவும் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். எங்கள் அணியில் அனுபவமிக்க வீரர்களும், பல கவனிக்கத்தக்க இளம் வீரர்களும் நிறைந்துள்ளனர். இந்த சீசன் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முறை எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும்' என்றார்.

    கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மட்டுமின்றி எல்லா அணிகளும் திறமையான அணிகள் தான். இந்த சீசன் முழுவதும் நன்றாக விளையாட வேண்டும். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது போல் இந்த முறையும் வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்தார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ,1.7 கோடியாகும். இதில் மகுடம் சூடும் அணிக்கு ரூ,50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: பாபா அபராஜித் (கேப்டன்), ஆந்த்ரே சித்தார்த், வி.அருணாசலம், அஸ்வின் கிறிஸ்ட், டேரில் பெராரியோ, அய்யப்பன், என்.ஜெகதீசன், ஜிதேந்திர குமார், மதன்குமார், ஜி.பெரியசாமி, பிரேம்குமார், பிரதோஷ் ரஞ்சன் பால், சந்தோஷ்குமார், ஆர்.சதீஷ், ரஹில் ஷா, ஷாஜகான், சிபி, எம்.சிலம்பரசன், பி.சூர்யா, அபிஷேக் தன்வர்.

    கோவை கிங்ஸ்: ஷாருக்கான் (கேப்டன்), சுரேஷ்குமார், சுஜய், அதீக் ரகுமான், திவாகர், கவுதம் தாமரைக் கண்ணன், ஹேம் சரண், மீரான் ரஹில் ரகுமான், முகிலேஷ், ஓம் பிரகாஷ், ராம் அரவிந்த், சாய் சுதர்சன், எம்.சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வித்யூத், ஜி.வி.விக்னேஷ், யுதீஸ்வரன், மணிஷ், சச்சின்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணி புறந்தள்ளப்பட்டது.
    • பாராட்டு விழாவின்போது உலக அதிகாரிகள் யாரும் அணியுடன் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் ராஜீவ் சுக்லா கலந்து கொண்டனர்.

    வீரர்கள் உட்கார்ந்த வரிசையில் ஜெய்ஷா மற்றும் ராஜீவ் சுக்லா முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

    இதனை முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கடும்யைாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஜெய்ஷா அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு, உண்மையிலேயே உலகக் கோப்பையை வென்றது ஜெய்ஷா, ராஜீவ் சுக்லா.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணி புறந்தள்ளப்பட்டது. பாராட்டு விழாவின்போது உலக அதிகாரிகள் யாரும் அணியுடன் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை. வெட்கம் கெட்ட சந்தர்ப்பவாதிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார்.
    • பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

    பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து பேசினார். அப்போது 15 வருடங்களில் இதுபோன்ற ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    15 வருடங்களில் முதன்முறையாக ரோகித் சர்மா மிகவும் அதிகமான வகையில் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார். நானும் அழுது கொண்டிருந்தேன்.

    பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. வான்கடே மைதானம் சிறப்பு வாய்ந்தது. சிறு வயதாக இருக்கும்போதே இங்கு வந்துள்ளேன். இன்று (பாராட்டு விழா) என்ன பார்க்கிறனோ, அதை இதற்கு முன்னதாக பார்த்தது இல்லை. என்னுடைய மகனை பார்த்தபோது, நாம் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது பேச வார்த்தைவரவில்லை.

    சச்சின் தெண்டுல்கர் 21 வருடம் இந்திய அணியை வழி நடத்திச் சென்றார். அவரை நாங்கள் இதே மைதானத்தில் தோளில் தூக்கிச் சென்றோம். அவரை தூக்கிச் சென்றது நியாயமானது. நானும் ரோகித் சர்மாவும் அணியை வழி நடத்திச் சென்றோம். வான்கடேவுக்கு மீண்டும் கோப்பையை கொண்டு வந்ததைவிட சிறந்தது இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அணி இன்று இந்தியா வந்தடைந்தது.
    • மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அபாரமாக விளையாடியது. பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    17 வருடத்திற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது. மும்பையில் இந்திய அணிக்கு வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் மரைன் டிரைவ் பகுதியில் இருபக்கமும் குவிந்து வீரர்களை வரவேற்றனர். வீரர்களுடன் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

    அதன்பின் வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூறுகையில் "ரசிகர்களின் இந்த அன்பை இழக்கப் போகிறேன். இன்று இரவு தெருக்களில் நான் பார்த்ததை (ரசிகர்களின் வரவேற்பு) ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    விராட் கோலி பேசும்போது "2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது சீனியில் வீரர்கள் அழுத எமோசன் உடன் நான் தொடர்பு கொள்ள முடியவில்ல. ஆனால் தற்போது அதை செய்கிறேன்" என்றார்.

    ×