என் மலர்
விளையாட்டு
- கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.
- யூரோ கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் ஆனார் ஸ்பெயின் அணியின் யமால்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் ராண்டல் கோலோ பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலை அடித்தார்.

துவக்கத்திலேயே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் யமால் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த போட்டில் சமனில் சென்று கொண்டிருந்தது. இந்த கோலை தொடர்ந்து 4-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோ கோல் அடிக்க அந்த அணி 2-1 என முன்னிலை வகித்தது.
போட்டி முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது. இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது.
- மதுரை அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹரி 20 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- திருச்சி அணி தரப்பில் சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சேலம்:
டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வசீம் அகமது- சஞ்சய் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.
இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட் ஆகவில்லை.
இதனையடுத்து இமாலய இலக்குடன் மதுரை அணி களமிறங்குகியது. தொடக்க வீரரான லோகேஸ்வர் 7 ரன்னிலும் அடுத்து வந்த கவுசிக் 1, என்.எஸ்.சதுர்வேத் 7, அக்ரம் கான் 11 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹரி 20 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற மதுரை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. திருச்சி அணி தரப்பில் சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார்.
- கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை உதயநிதி வழங்கினார்.
பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணியை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்,
இது குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம்.
தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பு குறித்து கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். மதிப்புமிக்க வேறொரு பொறுப்புடன் மீண்டும் இந்திய அணிக்குள் வருவதில் பெருமை கொள்கிறேன்.
ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 140 கோடி இந்தியர்களின் கனவுகளை தோள்களில் சுமக்கும் வீரர்களுடன் இணைந்து, அதனை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
- 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார்.
- 2018-ம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக கம்பீர் அறிவித்தார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லியை சேர்ந்தவர். இவர் 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து 2007-ம் ஆண்டில் டி20 என மூன்று வடிவ இந்திய அணியிலும் இடம் பிடித்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமான நபர். அவர் கிரிக்கெட் ஆடிய காலங்களிலேயே ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது கம்ரான் அக்மல் மற்றும் அப்ரிடியிடம் மோதலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பான சம்பவம் அந்த நேரத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் போதும் சரி விளையாடி முடித்து தற்போது ஆலோசகராக இருக்கும் போது சரி, மோதலில் ஈடுபடுவதை தவிர்த்ததில்லை.
குறிப்பாக விராட் கோலி - கம்பீர் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதை அனைவரும் பார்த்ததுண்டு. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி விளையாடும் போது விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் காம்பீர் கொண்டாடுவார். அப்போது விராட் கோலி அவரிடம் வார்த்தை மோதலில் ஈடுபடுவார்.

அதேபோல் லக்னோ அணிக்கு ஆலோசகராக இருக்கும் போது விராட் லக்னோ வீரர்களிடம் வம்பிலுப்பார். இதனால் போட்டி முடிந்தவுடன் கம்பீர் இது தொடர்பாக விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபடுவார். இது ஐபிஎல் தொடரில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் டோனியுடன் இவர் நேருக்கு நேர் மோதுவதில்லை. ஆனால் அவ்வபோது பேட்டியில் டோனியை எதிர்த்து கருத்துக்களை தெரிவிப்பார். டோனியால் மட்டும் தான் உலகக் கோப்பை இந்தியா வாங்கியது என்று கூறி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கம்பீர் கூறி வருகிறார். இப்படி டோனியை எதிர்த்து பல கருத்துக்களை அவர் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதை தவிர டோனிக்கு எதிராக களத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை சுற்றி 4 பீல்டர்களை அவர் சேட் செய்தார். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இப்படி எதையும் தயங்காமல் செய்யும் கம்பீர், வெற்றிக்காக தன் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நினைப்பவர்.
2007-இல் நடந்த டி20 உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்தது கெளதம் கம்பீர் தான். 2011-இல், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக சாம்பியனான போதும், அப்போட்டியில் கம்பீரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. 2011 சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பையில் கம்பீர், 9 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 43.66 சராசரி மற்றும் 85.06 ஸ்டிரைக் ரேட்டில் 393 ரன்கள் எடுத்தார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும்.

முதல் ஓவரில் இருந்து 42-வது ஓவர் வரை நின்று ஆடிய கம்பீர், 97 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், சிலர் இந்த வெற்றிக்கு கேப்டன் மகேந்திர சிங் டோனியை காரணம் காட்டியதும், கம்பீர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய இவரை கொல்கத்தா அணியின் கேப்டனாக அந்த அணியின் நிர்வாகம் நியமித்தது. கவுதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி முதன் முதலில் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு கொல்கத்தா இரண்டாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் ஆன போதும் கவுதம் தான் கேப்டனாக இருந்தார்.

அதனை தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவரது ஆட்டமும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஒரு ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் விளையாடிய அவர் அதற்கு அடுத்த போட்டிகளில் இருந்து விலகினார்.
இதனையடுத்து தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2018-ம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக கம்பீர் அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து விலகிய அவர் 2019 முதல் 2024 வரை 17-வது மக்களவை உறுப்பினராக இருந்தார். பிறகு அரசியலில் இருந்து முழுவதுமாக விலகி மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.
அதன் பிறகு லக்னோ அணியின் ஆலோசராக செயல்பட்டார். 2022, 2023-ம் ஆண்டுகளில் லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கும் மூன்றாவது இடத்திற்கும் அழைத்துச் சென்ற பெருமை கம்பீரையே சேரும். இதனையடுத்து அந்த அணியின் பிரச்சனையின் காரணமாக மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கபட்டார்.

இந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியனாகியுள்ளது. இந்த முறை கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்தார். மேலும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி மூன்று முறை பிளே-ஆஃப் சுற்றுகளை எட்டியது.

2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் சுருண்டது.
- இந்தியாவின் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை:
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பான ஆடினர். ஸ்மிர்தி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னும், ஷபாலி 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில், இந்திய மகளிர் அணி 10.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.
- டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருச்சி அணி 193 ரன்கள் குவித்தது.
சேலம்:
டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற
மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார்.
வசீம் அகமதுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.
இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் ஆல் அவுட்டானது.
சென்னை:
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 2வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்கா இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
- இந்த புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஷா பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. கவுதம் கம்பீர் வளர்ச்சியடைந்து வரும் கிரிக்கெட்டை அருகிலிருந்து பார்த்தவர்.
தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை எதிர்கொண்டு, சிறந்து விளங்கியதால் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவு அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் காலிறுதியில் குரோசிய வீராங்கனை வெற்றி பெற்றார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் குரோசிய வீராங்கனையான டோனா வெகிக், நியூசிலாந்து வீராங்கனை லுலு சுன்னுடன் மோதினார்.
இதில் வெகிக் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதையடுத்து சுதாரித்த அவர் 6-4, 6-1 என கைப்பற்றினார். இதையடுத்து, வெகிக் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
- தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
டி20 உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பார்படாஸ் மைதானத்தில் இந்தியக் கொடியை நட்டு வைப்பது போன்ற படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ப்ரொபைல் படமாக வைத்தார்.
தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ரோகித் சர்மா மூவர்ணக் கொடியை அவமதித்து விட்டதாக கூறி அவரின் ப்ரொபைல் படத்தை பகிர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2-இன்படி, தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. ஆனால் ரோகித் மண் தரையில் தேசிய கோடியை நட்டு வைத்து அவமதித்து விட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று அசத்தியது.
- டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது சிராஜூ இடம் பிடித்தார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று அசத்தியது. இதனையடுத்து அணியில் இடம் பிடித்த வீரர்கள், பயிற்சியாளர் என அனைவருக்கும் சேர்த்து ரூ. கோடியை பிசிசிஐ வழங்கியது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜூக்கு தெலுங்கானா முதலமைச்சர் அவரை பாராட்டி பரிசுகளை அறிவித்துள்ளார்.
அந்த வகையில் தெலுங்கான முதலமைச்சரான ரேவந்த் ரெட்டி இந்திய வீரரான சிராஜை நேரில் அழைத்துப் பாராட்டி, அவருக்கு மாநில அரசின் சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீடும், அரசாங்க வேலையும் தரப்படும் உறுதி அளித்துள்ளார்.






