என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய வங்காளதேசம் 80 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 81 ரன்களை எடுத்து வென்றது.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் ரேணுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடினர். ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
ஸ்மிரிதி மந்தனா 55 ரன்னும், ஷபாலி வர்மா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் இன்று நடைபெறுகிறது.
- ஒலிம்பிக் தொடரின் மகளிர் கால்பந்து போட்டியில் பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவை வென்றன.
பாரீஸ்:
ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் பிரமாண்ட தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் மகளிர் கால்பந்து போட்டி இன்று தொடங்கியது.
குரூப் ஏ பிரிவில் நடந்த போட்டியில் பிரான்ஸ், கொலம்பியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.
இதேபோல், குரூப் பி பிரிவில் ஒலிம்பிக்கில் 4 முறை தங்கம் வென்ற அமெரிக்க அணி ஜாம்பிய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஸ்வாசன் மலோரி 24 மற்றும் 25வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல் அடித்து அசத்தினார்.
- வங்காளதேசம் தரப்பில் நிகர் சுல்தானா 32 ரன்கள் எடுத்தார்.
- இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று 2 அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.
முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீராங்கனைகளாக திலாரா அக்டர்- முர்ஷிதா காதுன் களமிறங்கினர். முதல் ஓவரில் அக்டர் 6 ரன்னிலும் 3-வது ஓவரில் முர்ஷிதா 4 ரன்னிலும் அடுத்து வந்த இஷ்மா தன்ஜிம் 8 ரன்னிலும் ரேணுகா சிங் பந்து வீச்சில் வெளியேறினர்.
இதனை தொடர்ந்து ருமானா அகமது 1, ரபேயா கான் 1, ரிது மோனி 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோர் 50 கடக்க உதவினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்களாதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் பட்டியலில் 4-வது இடத்தில் மந்தனா உள்ளார்.
- இந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்தால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறுவார்.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன.
இதன் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் மந்தனா (3378) 27 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனையான எம் லெனிங்கை (3405) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடிப்பார்.
மேலும் 37 ரன்கள் எடுத்தால் சக அணி வீராங்கனையாக கவூரை (3415) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை மந்தனா பிடிப்பார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் எஸ்டபிள்யூ பேட்ஸ் உள்ளார். அவர் 162 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்து யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.
- இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது.
புதுடெல்லி:
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்டு தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது. இதனால் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.
இந்நிலையில், ரோகித் சர்மா ஒரு தலைவராக இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேப்டன்சி பற்றி, குறிப்பாக ரோகித் சர்மாவிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
- குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று நடந்தது.
- இதில் இத்தாலி வீரர் முசெட்டி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுகள் நேற்று நடைபெற்றன.
இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, செர்பிய வீரர் டுசன் லஜோவிக் உடன் மோதினார்.
இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 5-7, 6-3, 6-0 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் முசெட்டி, செக் வீரர் ஜாகுப் மென்சிக்கை சந்திக்கிறார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை சந்தித்தார்.
இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 5-7, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை சந்திக்கிறார்.
- நாளை முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
பாரிஸ்:
ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டி நாளை (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 12 நாடுகள் விளையாடுகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
ஏ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், போட்டியை நடத்தும் பிரான்ஸ் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை நாளை எதிர் கொள்கிறது. இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றது. பாரீஸ் ஒலிம்பிக்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 2-வது பதக்கத்தை பெற்றுக் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்.
- டிஎன்பிஎல் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிசிசிஐ தன்னை புறக்கணிக்கிறதா, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "பிசிசிஐ-இல் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அதனால் தான் நான் இங்கு நடராஜனாக அமர்ந்து இருக்கிறேன். காயத்தால் என்னால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. நான் நல்ல முறையில் தயாராகி வருகிறேன். கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்."
"பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்கள் ஒத்துழைப்பு இருந்ததால், தான் என்னால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, பலரும் டிஎன்பிஎல் போட்டிகளை பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎல் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது."
"அதிகளவு இளம் வீரர்கள் ஒவ்வொரு முறையும் டிஎன்பிஎல்-இல் சிறப்பாக செயல்படுகின்றனர். டிஎன்பிஎல் மூலம் கிராமப்புற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. கஷ்டப்பட்டால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். கடின உழைப்புடன், எப்போதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
- திண்டுக்கல் அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
- மதுரை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னை:
8-வது தமிழ்நாடு பிரீமி யர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (டி.என்.பி.எல்.) தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியின் லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நடந்தன.
4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோது கின்றன.
திண்டுக்கல் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2: தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.
அந்தஅணியில் அஸ்வின், ஷிவம்சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் உள்ளனர்.
மதுரை அணி 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மதுரை அணியில் ஹரி நிசாந்த், கவுசிக், சதுர்வேத், முருகன் அஸ்வின், மணி கண்டன், அஜய் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் உள்ளனர்.
- அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக். இன்னிங்ஸில் தான் எதிர்கொள்ளும் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசுவதில் பெயர்பெற்றவர் சேவாக். உலகின் எந்த அணியை எதிர்கொண்டாலும், பேட்டிங்கில் இவர் சந்திக்கும் முதல் பந்து எப்போதும் பவுண்டரியை தொட்டு விடும்.
இதனாலேயே பல முன்னணி பந்துவீச்சாளர்கள் இப்போதும் சேவாக் பற்றி பேசும் போது, அவரின் அதிரடி ஆட்டத்தை நிச்சயம் குறிப்பிடுவர். எதிரணி வீரர்கள் இவரை கண்டால் அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் சேவாக் ஆடிய இன்னிங்ஸ் ஒன்றில் குறிப்பிட்ட ஓவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டி அது. நாங்கள் 320 அடிக்க வேண்டி இருந்தது. நான் கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தேன். சேவாக் எனக்கு பின்னால் இருந்தபடி வசில் அடித்தார். நான் அவரிடம் கடுமையாக திட்டி, நாம் 320-க்கும் அதிக ரன்களை அடிக்க வேண்டியுள்ளது, உனக்கு இது ஜோக் ஆக இருக்கிறதா என கேட்டேன்.

அவர் என்னிடம் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். பிறகு, போட்டி தொடங்கி நாங்கள் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை துரத்தி இருந்தோம். ரோனி இரானி பந்து வீச ஆயத்தமானார். நான் சேவாக்-இடம் சென்று நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுவோம். விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடுமாறு கூறினேன்.
அவரும் சரி என கூறிவிட்டு கிரீஸ்-க்கு சென்றார். ரோனி வீசிய முதல் பந்தை மிட் ஆஃப் மேல் அடித்தார் அது பவுண்டரியாக மாறியது. நான் அவரிடம் சென்று அருமையாக ஷாட் இந்த ஓவரில் நான்கு ரன்கள் வந்துவிட்டது ரன்களை மட்டும் ஸ்டிரைக் செய்தால் போதும் என்று சேவாக்-இடம் கூறினேன். அவர் அதற்கு சரி சரி... பிரச்சினை இல்லை என்று கூறி கிரீஸ்-க்கு சென்றார்.
அடுத்த பந்தை சேவாக் மிட் ஆன் மீது விளாசினார். அந்த பந்தும் பவுண்டரியை தொட்டது. நான் மீண்டும் அவரிடம் சென்று அருமையான ஷாட் 8 ரன்கள் கிடைத்துவிட்டது. இப்பவும் கூட சிங்கில் எடுக்கலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். அவர் மீண்டும் பிர்ச்சினை இல்லை, அப்படியே செய்யலாம் என கூறி அடுத்த பந்தை அடுக்க தரையில் உட்கார்ந்து ஸ்வீப் செய்தார். அந்த பந்து பின்புறம் பவுண்டரியை தொட்டது.
இந்த முறை நான் அவரிடம் செல்லவில்லை. அவருக்கும் புரிந்துவிட்டது, அவர் என்னை பார்க்கவே இல்லை. அடுத்த பந்தை அவர் கவர்களின் மீது விளாசினார். அது சிக்சராக மாறியது. அந்த ஓவரின் ஐந்து பந்துகளையும் அவர் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிங்கில் எடுத்தார். அப்போது என்னை கடக்கும் போது, நான் சிங்கில் எடுத்துவிட்டேன் என்று கங்குலி கூறினார்.
- சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.
- பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.
பல்லகெலே:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை பல்லகெலேயில் நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன்கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரிங்குசிங், ஷிவம் துபே ஆகிய பேட்ஸ்மேன்களும், ஆல்-ரவுண்டர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் உள்ளனர்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்ற பிறகு ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதன்பின் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று 20 ஓவர் போட்டி தொடரை வென்றது.
தற்போது பலம் வாய்ந்த இலங்கையை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி சந்திக்கிறது. புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாட உள்ளது. இதில் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.
அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், சண்டி மால், நிசாங்கா, குசால் பெரைரா, பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஹசரங்கா, ஷனகா, பந்து வீச்சில் மதுஷனகா, பினுரா பெர்னாண்டோ, தீக்ஷனா, பதிரனா ஆகியோரும் உள்ளனர்.
இந்தியா-சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரிங்குசிங், ரியான் பராக், ஷிவம் துபே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், கலில் அகமது, ரவிபிஷ்னோய்.
இலங்கை-அசலங்கா (கேப்டன்), நிசாங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரைரா, சண்டிமால், அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், ஷனகா, ஹசரங்கா, விக்ரமசிங்கே, பினுரா பெர்னாண்டோ, அஷிதா பெர்னாண்டோ, மதுஷனகா, பதிரனா, தீக்ஷனா, துனித் வெல்லலகே.
- ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது.
- இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென் நதியில் இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு அரங்கேறுகிறது. ஒலிம்பிக் திருவிழா அதிகாரபூர்வமாக தொடங்கும் முன்பே சில போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும்.
அந்த வகையில் வில்வித்தை தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் தீரஜ் , தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 2013 புள்ளிகளைப் பெற்றது. இதனால் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தென் கொரியா அணி 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும் , பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் , சீனா 1998 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.
மகளிர் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகளில் இந்திய அணியில் அங்கிதா பகத், பஜன் கவுர் தீபிகா குமாரி ஆகியோர் இடம் பெற்றனர். 12 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி 1983 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்த இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.






