என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் சிட்சிபாஸ் 6-3 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 97 ரன்கள் எடுத்துள்ளது.

    கயானா:

    தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    டிரினிடாடில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேன் பிட் அதிகபட்சமாக 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பெடிங்காம் 28 ரன்னும், ஸ்டப்ஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமாரி ஜோசப் 5 விக்கெட்டும், ஜேய்டன் சீலஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முல்டர் 4 விக்கெட்டும், பர்கர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.
    • இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பதக்கம் நிராகரிக்கப்பட்ட பின் வினேஷ் போகத் முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார். இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் வினேஷ். தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கும் அவரது படம் அது. வேறு எந்த குறிப்புகள் அன்றி, இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் வினேஷ் போகத். வேறு எந்த வார்த்தைகளும் அந்த படத்திற்கு மேல் வினேஷ் போகத்துக்கு தேவையும் பட்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும். 

    • மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கல பத்தக்கம் வென்றார்.
    • வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப்பத்தக்கத்தை வென்றார்.

    இந்த நிலையில் அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    வடக்கு ரெயில்வே தலை மையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெரா வத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் அவருக்கு பதவி உயர்வு வழங்கி அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறும்போது, அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்கு மகத்தான பெருமையையும் புகழையும் கொண்டு வந்துள்ளார்.

    அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவருக்கு வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேவுக்கு இந்திய ரெயில்வேயின் பயணச் சீட்டு பரிசோதகரில் இருந்து சிறப்புப் பணி அதிகாரியாக இரட்டைப் பதவி உயர்வு அளிக்கப் பட்டது.

    • இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார்.
    • இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    அவரது மனுவை நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] ஆம் தேதி நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அடியாக அமைந்தது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் பதக்கம் கிடைக்க வேறு எந்த வழியும் இல்லையா என்று பலருக்குக் கேள்வி எழுவது இயல்பே.

    அந்த வகையில் வினேஷ் போகத் பதக்கம் பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார். அதாவது, நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இன்னும் 30 நாட்களுக்குள் இந்த மேல் முறையீட்டினை செய்ய வேண்டும். ஆனால் தற்போது 'வினேஷ் போகத் மனு தள்ளுபடி' என்று ஒற்றை வரியில் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேறு எந்த விளக்கமும் தற்போதுவரை தரப்படவில்லை. இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே முழுமையான விளக்கம் கிடைத்தவுடன், ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல்முறையீடு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது சுற்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் தியாபோ 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீரர் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    கடந்த மாதம் நடைபெற்ற குரோசியா ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முசெட்டி தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் டெண்டுல்கர்.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார்.

    சிட்னி:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 143 போட்டிகளில் விளையாடி 12,027 ரன்கள் குவித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார். 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் குவித்துள்ள அலிஸ்டர் குக் அவருக்கு முன் உள்ளார்.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நிச்சயம் முறியடிப்பார் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

    டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் எடுத்துள்ள ரன்களை ஜோ ரூட் கடந்து செல்லக்கூடும். ரூட் ஆண்டுக்கு 800 முதல் 1000 ரன்கள் எடுத்தால் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்.

    ஜோ ரூட்டுக்கு 33 வயது. சுமார் 3,000 ரன்கள் அவர் பின்தங்கியுள்ளார். அவர் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து அமையும்.

    அவர் ஆண்டுக்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், ஆண்டுக்கு 800 முதல் 1,000 ரன்கள் எடுத்தால் ஜோ ரூட் அங்கு வருவதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மட்டுமே இருக்கும்.

    அதுவரை ஜோ ரூட் ரன்களை எடுப்பதற்கான பசியுடன் இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இலக்காகக் கொண்டுள்ள அவருக்கு அதற்கான வயதும் உள்ளது என தெரிவித்தார்.

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 100-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அப்போது ஒவ்வொரு வீரரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என 2 வெண்கலம் வென்ற மனு பாக்கர், பிரதமர் மோடிக்கு ஏர் பிஸ்டலை பரிசாக அளித்தார்.


    மேலும், வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஹாக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.

    அதன்பின், வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது ஒலிம்பிக் போட்டி அனுபவங்களை அவர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்தச் சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.

    • இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது.
    • முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே. இவர் பாரீஸ் சூப்பர் ஜெய்ன்ட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியில் இருந்து ப்ரீ டிரான்ஸ்பராக ரியல் மாட்ரிட் அணிக்கு வந்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணியுடன் ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல்முறையாக சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக அட்லாண்டா அணியை எதிர்த்து விளையாடினார்.

    இந்த போட்டியில் 2-0 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2-வது கோலை எம்பாப்வே அடித்தார். இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் எம்பாப்பே "நாங்கள் ரியல் மாட்ரிட். எங்களுக்கு எல்லை கிடையாது. எனக்கும் இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது. என்னால் 50 கோல்கள் அடிக்க முடியும் என்றால், அது 50 ஆக இருக்கும். ஆனால், முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான். ஏனென்றால் நாங்கள் ஒரு அணியாக வெற்றிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய இந்த இரவு (நேற்றிரவு இறுதிப்போட்டி) சிறந்த இரவாக அமைந்தது. ரியல் மாட்ரிட்டி ஜெர்சி அணிந்து விளையாடுவதற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சிறந்த தருணம்" என்றார்.

    • டி20 உலகக் கோப்பையில் 100 சதவீதம் வெற்றி பெற்ற முதல் கேப்டன் ரோகித் சர்மா.
    • அதிவேகமாக 3,500 ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளைப் பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

    டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெலுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார்.

    இதேபோல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ள விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

    இந்நிலையில், ஓய்வை அறிவித்த நிலையிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மவுசு இன்னும் குறையவில்லை.

    சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 45வது இடத்திலும், விராட் கோலி 52வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஓய்வு அறிவித்த வீரர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலையில், இவர்களது சாதனைகளால் தரவரிசையில் இன்றும் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பார்க்கிங் இடத்தில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
    • மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவரை தேடிவருகின்றனர்.

    17 வயதான இளம் கால்பந்து வீரர் லாமின் யமல். ஸ்பெயின் அணிக்காக யூரோ-2024 தொடரில் களம் இறங்கி அசத்தினார். பிரான்ஸ் அணிக்கெதிரான அரையிறுதியில் கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். அத்துடன் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது. இதில் ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்தார். தற்போது கால்பந்து பயிற்சியில் தீவிரமாக உள்ளார்.

    இவரது தந்தை மௌனிர் நஸ்ராயுய். இவர் நேற்று பார்சிலோனா அருகே கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார். மட்டாரோ நகர் அருகே இரவு நேரத்தில் பார்க்கிங் இடத்தில் சிலர் இவரை கைத்தியால் குத்தியுள்ளனர். கேன் ருட்டியில் உள்ள படாலோனாவின் புஜோல் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    கத்துக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். சந்தேகத்திற்குரிய நான்காவது நபரை போலீசார் தேடு வருகின்றனர். 

    • டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக இந்த முடிவு எடுத்துள்ளார்.
    • நியூசிலாந்து டெஸ்ட் அணிக்காக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் டேவன் கான்வே. இவர் நியூசிலாந்து அணியுடன் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்துள்ளார். உலகளவில் நடக்கும் பெரும்பாலான டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளார்.

    ஆனால் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டி மற்றும் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் இந்த நேரத்தில் சிறந்தது என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கேன் வில்லியம்சன், பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் இதே முடியை எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது கான்வே இணைந்துள்ளார்.

    மற்றொரு பேட்ஸ்மேனான பின் ஆலன் இதே முடிவை எடுத்து உள்ளார். ஆனால் நியூசிலாந்து இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்றால் நியூசிலாந்து அணிக்காக ஒரு வீரர் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வெளிநாட்டில் எந்த ஒரு லீக் போட்டிகளிலும் விளையாடலாம். லீக் போட்டியில் அதிக வருமானம் கிடைப்பதாலும், குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வெண்டியதில்லை என்பதாலும் பெரும்பாலான வீரர்கள் தற்போது இந்த முடிவை எடுத்து வருகிறார்கள்.

    டேவன் கான்வே ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ×