என் மலர்
விளையாட்டு
- தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து உருக்கமாக அறிக்கை ஒன்றை வினேஷ் வெளியிட்டிருந்தார்.
- ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், "என்னுடைய எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் தற்போது கணிக்க முடியாது. ஆனால் நான் எதை நம்புகிறேனோ, அதற்காகவும் சரியான விஷயத்திற்காகவும் எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இன்று, வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வினேஷ் போகத்தை வரவேற்க அவரது சகோதரர் ஹரிந்தர் சிங் வந்திருந்தார்.
விமான நிலையத்திற்கு வந்திருந்த மல்யுத்த வீரர்களான ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.
- ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
- கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது.
2022 டிசம்பர் மாதம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், தொலைக்காட்சி தொடரான டாப் கியர் மோட்டாரிங் ஷோவில் நடித்தார். அப்போது 209 கிமீ வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பிபிசியிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "எனக்கு அப்போது உதவி தேவைப்பட்டது. ஆனால் என்னால் உதவி கெடக்கமுடியவில்லை. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
என்னைப் நினைத்து நான் வருத்தப்பட விரும்பவில்லை. எனக்கு அனுதாபம் வேண்டாம். நான் என் கவலையுடன் போராட வேண்டியிருந்தது. கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது. அதை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
79 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளிப் பதக்கம் கோரி வினேஷ் அளித்த மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து வினேஷ் போகத்தின் பயிற்சியாளரான ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் பேசியுள்ளார்.
"அரையிறுதிக்குப் பிறகு, வினேஷ் போகத்திற்கு 2.7 கிலோ எடை அதிகமாக இருந்தது. எடை குறைப்புக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.
வினேஷ் என்னிடம் பேசிய போது, "நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் உலகின் சிறந்த வீராங்கனையை (ஜப்பானின் யுகி சுசாகி) தோற்கடித்து உள்ளேன். நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். பதக்கம், பதக்க மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான். செயல் திறனை யாராலும் பறிக்க முடியாது" என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
- பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.
- பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது.
ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. ஆனாலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ப்ரீத்தி ஜிந்தா தான்.
ஒருகாலத்தில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக கோலோச்சிய ப்ரீத்தி ஜிந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தவறாமல் ப்ரீத்தி ஜிந்தா நேரில் வந்து விடுவார்.
பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவிடம் அந்த அணியின் 23% பங்குகள் உள்ளது. சக உரிமையாளர்களான மோஹித் பர்மனுக்கு 48% பங்குகளும் நெஸ் வாடியாவிற்கு 23% பங்குகளும் கரண் பாலுக்கு 6% பங்குகளும் உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளரான மோஹித் பர்மன் தனது பங்குகளில் ஒரு பகுதியை மூன்றாம் தரப்பினருக்கு விற்பதைத் தடுக்க கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை ப்ரீத்தி ஜிந்தா நாடியுள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
மோஹித் பர்மன் தனது பங்குகளில் 11.5 சதவீதத்தை விற்க உள்ளார் என்றும் இது ப்ரீத்தி ஜிந்தாவிற்கு சாதகமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை மோஹித் பர்மன் மறுத்துள்ளார்.
- வெள்ளிப் பதக்கம் கோரி வினேஷ் அளித்த மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- எனக்குள் சண்டையும் என்னுள் மல்யுத்தமும் எப்போதும் உயிருடன்தான் இருக்கும்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வினேஷ் போகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின் போது, இந்திய பெண்கள் மற்றும் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை அச்சுறுத்துகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் என்பதும், அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கொடியினை வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. அப்படி செய்வது, மல்யுத்தத்துக்கு நடந்தவற்றையும், தேசிய கொடிக்கு நடந்தவற்றையும் கண்டிக்கும் விதமாக இருக்கும் என்று நினைத்தேன்.
சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன்.
ஆகஸ்ட் 6-ந் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நடந்தது குறித்து நான் சொல்ல விரும்பவதெல்லாம் இதுதான். நாங்கள் பின்வாங்கவில்லை. எங்கள் முயற்சிகள் ஒருபோதும் நிற்கவில்லை. நாங்கள் சரணடையவில்லை. ஆனால் கடிகாரம் நின்று விட்டது, காலம் கைகொடுக்க வில்லை. என்னுடைய விதியும் அப்படிதான் இருந்தது.
என்னுடைய அணிக்கும், சக இந்தியர்களுக்கும், குடும்பத்துக்கும் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஒன்று, நிறைவடையாமல் போய் விட்டதாக உணர்கிறேன். ஒருவேளை சூழல்கள் வேறாக இருந்திருந்தால் 2032 வரைக்கும் நான் விளையாடியிருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும்.
எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் நான் நம்பும் விஷயத்துக்காக, சரியானவற்றுக்காக நான் தொடர்ந்து எப்போதும் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
- பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட [பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.
இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நாளை[ஆகஸ்ட் 17] காலை 6 மணி முதல் [ஆகஸ்ட்18] காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், "கொல்கத்தா பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், " கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக மருத்துவர்கள் ஒன்றிணைவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம், ஆனால் கிடைக்காமலே போய்விடக்கூடாது என்று கூறுவார்கள்.
அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என்றார்.
- லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது நிரோஷன் டிக்வெல்லா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தொடக்க வீரரான நிரோஷன் டிக்வெல்லா. இவர், இலங்கை அணிக்காக 2014-ம் ஆண்டு அறிமுகமான நிலையில் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31.45 சராசரியில் 1,604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30.98 சராசரியில் 2,757 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு 28 டி20 போட்டிகளில் 480 ரன்களைச் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நிரோஷன் டிக்வெல்லாவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் கொக்கெய்ன் உட்கொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்தும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்லாமல் பயிற்சி உட்பட விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் இனி கிரிக்கெட் விளையாடமுடியாமல் போவதுடன், எந்தவொரு போட்டியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாது என்பதால் அவரது கிரிக்கெட் கெரியர் இத்துடன் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கோவிட்-19 நெறிமுறையை மீறியதால் அவருக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த எல்பிஎல் தொடரில் கலே மார்வெல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய டிக்வெல்லா, அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்த சீசனில், அவர் 10 இன்னிங்ஸ்களில் 153.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 184 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் அரை சதம் விளாசினார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கயானா:
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
முதல் இன்னிங்சில் வெறும் 54 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வேட் 3 ரன், கீசி கார்டி 26 ரன், அலிக் அத்தானாஸ் 1 ரன், கவேம் ஹாட்ஜ் 4 ரன், ஜோசுவா டா சில்வா 4 ரன், குடாகேஷ் மோதி 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 28.2 ஒவர்களில் 7 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஜேசன் ஹோல்டர் 33 ரன்னுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாரிக்கன் 0, ஜெய்டன் சீல்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனையடுத்து ஹோல்டருடன் சமர் ஜோசப் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹோல்டர் அரை சதம் விளாசினார். இறுதியில் சமர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 144 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை.
- நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2016-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் விளையாடியிருந்தாலும் 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தனது கிரிக்கெட் கரியரில் அதிக வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கு காரணமே முன்னாள் கேப்டன்களான டோனி மற்றும் விராட் கோலி போன்ற கேப்டன்கள் செய்த செயல் தான் என அமித் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணிகள் நான் தொடர்ந்து விளையாட முடியாதது ஏன் என்று டோனியிடம் கேட்டபோது : அவர் அணியின் காம்பினேஷனில் நான் பொருந்தவில்லை என்று கூறினார். மேலும் நான் விளையாட வாய்ப்பு கேட்டபோது காம்பினேஷனுக்கு செட் ஆகவில்லை என்றால் ஓய்வு வழங்கப்படும் என்றுதான் கூறினார். டோனியின் முடிவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியவில்லை. நிர்வாகத்திடம் பேசினால் கூட டோனியிடமே வாய்ப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அதேபோன்று 2016-ம் ஆண்டு நான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த போது கோலி தான் என்னை ஆதரித்தார். ஆனாலும் நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அவரும் என்னை அணியில் இருந்து நீக்கினார். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அவருடன் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் நான் அதிக எடையை தூக்கி பயிற்சி செய்ய முடியாது என்று கூறினேன்.
அதன் பின்னர் கோலியும் என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டு எனக்கு தெளிவான பதிலை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நானே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாய்ப்பு கேட்டேன். ஆனாலும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை.
இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
- ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார்.
- தங்கம் வென்ற நதீமுக்கு எருமை மாட்டை மாமனார் பரிசாக வழங்கினார்.
லாகூர்:
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அவரை தொடர்ந்து, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62-ம் இடத்தை பாகிஸ்தான் பிடித்தது.
தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்தார். நதீமின் சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.
நவாசின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், எருமை மாட்டிற்கு பதிலாக 5 அல்லது 6 ஏக்கர் நிலத்தையே பரிசாக கொடுக்கலாம். சரி, எருமை மாடும் பரவாயில்லை தான். கடவுள் அருளால் அவர் சற்று வசதி படைத்தவர். அதனால் எனக்கு எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். அது மதிக்கத் தக்கது என தெரிவித்தார்.
- இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.
- இலங்கை மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சமாரி அத்தபத்து மட்டுமே சதம் அடித்திருந்தார்.
பெல்பாஸ்ட்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவது ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 260 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன சதம் (101 ரன்) அடித்து அசத்தினார். அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 261 என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து ஆடி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் விஷ்மி குணரத்ன சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அதாவது இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரத்ன பெற்றுள்ளார்.
இதற்கு முன் இலங்கை மகளிர் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சமாரி அத்தபத்து மட்டுமே (9 சதம்) சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடைபெற்ற ரவுண்டு 16 போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ்- சிலியின் நிகோலஸ் ஜேரியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 4-6, 7-6 (7-5), 10-8 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.






