என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கப்போகிறது.
    • இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது.

    2023-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டிராவிஸ் ஹெட் பிரமாதமாக விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வறண்ட ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடுவது சவாலாக இருக்கப்போகிறது. வருண் சக்ரவர்த்தி மட்டுமல்ல மற்ற சுழற்பந்து வீச்சாளர்களும் திறமையானவர்கள் தான். அவர்களின் பந்து வீச்சை நாங்கள் அடித்து நொறுக்க வேண்டும். அதை சமாளிப்பதற்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

    பெரிய போட்டிகளில் ஆடும் போது நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் இது போன்ற ஆட்டங்களில் டிராவிஸ் ஹெட் பிரமாதமாக விளையாடி இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் (மழையால் பாதியில் ரத்து) அருமையாக பேட் செய்தார். இந்த ஆட்டத்திலும் அதே போல் ஆக்ரோஷமாக ஆடுவார் என்று நம்புகிறேன்.

    இந்தியா இங்கே எல்லா ஆட்டங்களிலும் விளையாடியது தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் பிட்ச் என்ன செய்கிறது என்பதைப் பார்த்திருக்கிறார்கள். அது ஒரு சாதகமா என்று எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு ஸ்மித் கூறினார்.

    • ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு லாரெஸ் உலக விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
    • சிறந்த ‘கம்பேக்’ வீரருக்கான விருது பிரிவில் 6 பேரில் ஒருவராக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.

    மாட்ரிட்:

    ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு லாரெஸ் உலக விளையாட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரருக்கான விருது பிரிவில் டென்னிஸ் வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), உலக போல்வால்ட் சாதனை வீரர் மோன்டோ டுப்பிளான்டிஸ் (சுவீடன்), நீச்சல் வீரர் லியோன் மார்சந்த் (பிரான்ஸ்), சைக்கிளிங் வீரர் தடேஜ் போகாகர் (சுலோவேனியா), பார்முலா1 கார்பந்தய சாம்பியன் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்), கால்பந்து வீராங்கனை போன்மதி (ஸ்பெயின்), ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை மங்கை சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா) உள்பட 6 பேர் அங்கம் வகிக்கிறார்கள்.

    இதே போல் காயம், நோய் தாக்கம், மனதளவில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் போராடி மீண்டெழுந்து மறுவேசம் செய்து சாதிக்கும் சிறந்த 'கம்பேக்' வீரருக்கான விருது பிரிவில் 6 பேரில் ஒருவராக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.

    கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய ரிஷப் பண்டுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டு ஓராண்டு முழுவதும் ஓய்வில் இருந்தார். 629 நாட்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியதோடு, வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்தார். அதனால் அவரது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருது விழா ஏப்ரல் 21-ந்தேதி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடக்கிறது. அன்றைய தினம் யார்-யாருக்கு விருது கிடைக்கும் என்பது தெரிய வரும்.

    • வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 60-வது நகர்த்தலில் டிரா கண்டார்.
    • 5-வது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் தலா 3½ புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்கள்.

    பிராக்:

    7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் நேருக்கு நேர் சந்தித்தார்கள்.

    வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 60-வது நகர்த்தலில் டிரா கண்டார். மற்றொரு ஆட்டத்தில் போட்டித்தரநிலையில் முதலிடம் வகிக்கும் சீனாவின் வெய் யி 27-வது நகர்த்தலில் அமெரிக்காவின் சாம் ஷன்லாந்தை தோற்கடித்தார். மற்ற 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

    5-வது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் தலா 3½ புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்கள். வெய் யி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்பட 4 வீரர்கள் தலா 2½ புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.

    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன.
    • இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

    இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தனது பிரிவில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து தடுமாற்றம் காணும் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இதேபோல் கோலியும் கைகொடுத்தால் இந்தியாவின் பேட்டிங் வலிமையடையும்.

    பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் கலக்குகிறார்கள். முந்தைய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடி நியூசிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா 4 சுழல் யுக்தியை தொடரும் என்று தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு இடம் கிடைக்காது.

    'பி' பிரிவில் அங்கம் வகித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. அதில் ஜோஷ் இங்லிஸ் சதம் விளாசினார். தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்கள் மழையால் ரத்தானது.

    அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இல்லை. அதனால் அவர்களின் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே தோன்றினாலும், பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.

    டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி சூப்பர் பார்மில் உள்ளனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியிலும் சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்.

    அதாவது இந்தியா என்றாலே அடிப்பேன் என்பது போல டிராவிஸ் ஹெட் விளையாடி வருகிறார். இது போன்ற பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட்டை சீக்கிரமாக வீழ்த்த இந்திய அணி தீவிரமாக போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கூபர் கனோலி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ் ஆகியோரைத் தான் அதிகம் நம்பி உள்ளது.

    பொதுவாக ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி. தொடர்களில் நெருக்கடியை சிறப்பாக கையாளக்கூடியது. அதனால் இந்தியாவுக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

    இவ்விரு அணிகள் இதுவரை 151 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 57-ல் இந்தியாவும், 84-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 10 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

    • குஜராத் அணியில் மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
    • உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    லக்னோ:

    5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இதையடுத்து, இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். தயாளன் ஹேமலதா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் களமிறங்கியது.

    இதில் கிரண் நவ்கிரே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா வோல்வும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

    இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 105 ரன்களில் ஆல் அவுட்டானது. குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காஷ்வி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டியான்டிரா டோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதன்மூலம் குஜராத் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து.

    • இப்போட்டியில் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருக்க முடியும்.
    • பிளேயிங் லெவனில் மாற்றங்கள் தேவையில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அடுத்த போட்டி இன்னும் 48 மணி நேரம் கழித்து, அதே லெவன் அதே நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆடுகளம் சற்று சோர்வாகத் தெரிகிறது. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். எனவே பிளேயிங் லெவனில் மாற்றங்கள் தேவையில்லை. இப்போது வருன் சக்ரவர்த்தி இருக்கும் ஃபார்மில் அவரைத் தடுப்பது கடினம், அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரது நம்பிக்கை அதிகமாக உள்ளது.

    மேற்கொண்டு எதிரணி வீரர்களும் அவரை அதிகம் எதிர்கொண்டது கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில், அவர் இப்போட்டியில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாகவும் இருக்க முடியும். மேற்கொண்டு இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 அல்லது 250 ரன்களுக்கு மேல் எடுத்தால், நிச்சயம் அரையிறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

    • குஜராத் அணியின் மூனி 96 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    லக்னோ:

    5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இதையடுத்து, இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். தயாளன் ஹேமலதா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    தியோல் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூனி அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • ஆஸ்திரேலியாவில் வலுவான ஸ்பின் அட்டாக் இருப்பதாக தெரியவில்லை.
    • ஆஸ்திரேலியா சேசிங் செய்வதை விட இந்தியா சேஸ் செய்வது வெற்றியைப் பெறுவதற்கான விஷயமாகும்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிந்துள்ளன. அதில் இந்தியா தங்களது 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. அதைத் தொடர்ந்து நாளை துபாயில் நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வலுவான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

    2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை 10 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா தோற்கடித்தது. எனவே இம்முறையும் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

    இந்நிலையில் துபாய் மைதானம் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா தவிர்த்து தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த பிட்ச்சில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வலுவான ஸ்பின் அட்டாக் இருப்பதாக தெரியவில்லை. அது போக ஜோஸ் ஹசில்வுட், மிட்சேல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகிய முக்கிய வீரர்களையும் அவர்கள் தவற விட்டுள்ளனர்.

    அவர்களுடைய பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியா சேசிங் செய்வதை விட இந்தியா சேஸ் செய்வது வெற்றியைப் பெறுவதற்கான விஷயமாகும். நியூசிலாந்துக்கு எதிரான கடந்தப் போட்டியில் ஆரம்பக்கட்ட ஓவர்களில் துபாய் பிட்ச்சில் நமது ஸ்பின்னர்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல அது நன்றாக மாறியது

    ரோலிங் செய்த பின் பனி ஓய்ந்த பின் ஸ்பின்னர்களுக்கு நிறையப் பிடிப்பு கிடைத்தது. ஆனால் அதற்காக துபாய் பிட்ச்சில் பேட்டிங் செய்வது அசாத்தியம் என்று அர்த்தமல்ல. கொஞ்சம் சுழல் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திய நமது ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவதை அசாத்தியமாக மாற்றினர்.

    என்று கவாஸ்கர் கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இந்தியா அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்தது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதாக முன்னாள் வீரர்கள் மற்றும் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் என பலர் விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில் இது துபாய் எனவும் இது எங்கள் ஹோம் பிட்ச் இல்லை எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு முறையும், ஆடுகளம் உங்களுக்கு வெவ்வேறு சவால்களைத் தருகிறது. நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும், ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. இது எங்கள் ஹோம் பிட்ச் கிடையாது. இது துபாய். அரையிறுதியில் எந்த பிட்சில் விளையாடப் போகிறோம் என எங்களுக்கே தெரியாது. இந்த மைதானம் எங்களுக்கும் புதிதுதான். நாங்கள் இங்கு நிறைய போட்டிகள் விளையாடியதில்லை.

    நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது, அது கொஞ்சம் ஸ்விங் ஆவதை நாங்கள் கண்டோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் அதை பார்க்கவில்லை. கடந்த ஆட்டத்தில், அவ்வளவு சுழற்சியை நாங்கள் பார்க்க முடியவில்லை. இன்று அது கொஞ்சம் இருந்தது. எனவே, ஒவ்வொரு மேற்பரப்பிலும் வெவ்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எனவே, இந்த மைதானத்தில் என்ன நடக்கப் போகிறது, என்ன நடக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியாது.

    என கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

    • 2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
    • இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    துபாய்:

    8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி இந்த போட்டி தொடரில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன்னிலும் தோற்கடித்தது. இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

    ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தவை என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் ஆடுகள தன்மையை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.

    நியூசிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். துருப்பு சீட்டாக கருதப்படும் அவர் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தாலும் தனது மந்திர பந்து வீச்சை வெளிப்படுத்துவார்.

    முதல் 3 நிலை பேட்ஸ்மேன்கள் (கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி) முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளது. அந்த அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பென் துவார்சுயிஸ், ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    லாகூரில் 5-ந் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    நாக்பூர்:

    90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விதர்பா - கேரளா அணிகள் ஆடின. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா 379 ரன்னும், கேரளா 342 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 37 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா 375 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்து கொள்ள இரு கேப்டன்களும் ஒப்புகொண்டனர்.

    விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது டேனிஷ் மலேவருக்கும், தொடரின் தொடர் நாயகன் விருது ஹார்ஷ் துபேவுக்கும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடிய விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

    மேலும், ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர் ஹார்ஷ் துபேவுக்கு ரூ.25 லட்சமும், இந்த தொடரில் ரன்கள் குவித்த யாஷ் ரதோட் (960 ரன்), கருண் நாயர் (863 ரன்) ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் உஸ்மான் கானிக்கு ரூ.15 லட்சமும், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி, கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களின் கேப்டன்களை அறிவித்து விட்டனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களை அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்தது. கேப்டனாக ரகானேவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளதாக கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளது. வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். போராடி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு ரகானே கூறினார்.

    ×