என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 108 ரன்கள் விளாசினார்.
    • கேன் வில்லியம்சன் 91 பந்தில் 102 ரன்கள் அடித்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் "ஏ" பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், "பி" பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.

    என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடினர். கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் கடக்க, ரச்சின் ரவீந்திரா 93 பந்தில் சதம் அடித்தார். நியூசிலாந்து 32 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.

    நியூசிலாந்தின் ஸ்கோர் 33.3 ஓவரில் 212 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்ஸ் உடன் 108 ரன்கள் விளாசி ரபடா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.

    3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். ரச்சின் ரவீந்திராவை தொடர்ந்து கேன் வில்லியம்சனும் சதம் விளாசினார். அவர் 91 பந்தில் சதம் அடித்தார். சதம் அடித்த அவர் 94 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 39.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த டாம் லாதம் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. இதனால் நியூசிலாந்து 45.3 ஓவரில் 300 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 28 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது.

    37 பந்தில் 49 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் ஆட்டமிழந்தார். இதற்கிடையே யான்சன் வீசிய ஆட்டத்தின் 46-வது ஓவரில் கிளென் பிலிபஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகள் விளாசினார்.

    48-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் பிலிப்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச நியூசிலாந்து 19 ரன்கள் சேர்த்தது. இதனால் நியூசிலாந்து 48 ஓவரில் 343 ரன்கள் சேர்த்தது.

    49-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் நியூசிலாந்து 49 ஓவரில் 349 ரன்கள் எடுத்தது.

    கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன் அடிக்க நியூசிலாந்து 350 ரன்னைக் கடந்தது. இந்த ஓவரின் 5-வது பந்தில் பிரேஸ்வெல் 12 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை சான்ட்னெர் எதிர்கொண்டார். இந்த பந்தில் 2 ரன் அடிக்க நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்துள்ளது. கிளென் பிலிப்ஸ் 27 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 363 என்ற இமாலய ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் யான்சன் 79 ரன்களும், நிகிடி 72 ரன்களும், ரபாடா 70 ரன்களும், மகாராஜ் 65 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    • ஐசிசி தொடரில் கேன் வில்லியம்சன் 4 சதங்கள் அடித்துள்ளார்.
    • சர்வதேச ஒருநாள் போட்டியில் 15-வது சதம் இதுவாகும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி 91 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 94 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 39.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்திருந்தது.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சனின் 15-வது சதம் இதுவாகும். மேலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதங்கள் அடித்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக 48 சதங்கள் விளாசியுள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் விராட் கோலி 82 சதங்களும், ஜோ ரூட் 53 சதங்களும், ரோகித் சர்மா 49 சதங்களும், ஸ்டீவ் ஸ்மித் 48 சதங்களும் அடித்துள்ளார்.

    ஐசிசி தொடரில் கேன் வில்லியம்சன் 4 சதங்கள் அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

    நாதன் ஆஸ்லே இந்தியாவுக்கு எதிராக 5 சதமும், ராஸ் டெய்லர் இங்கிலாந்துக்கு எதிராக 5 சதமும் அடித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேன் வில்லியம்சன் 4 சதங்கள் அடித்துள்ளார்.

    • கடந்த வருட ஐபிஎல் இன் போது டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுபெற்றார்.
    • இந்த ஆண்டு நான் அணியை வழிநடந்த போவதில்லை - நீதான் கேப்டன்

    ஐபிஎல் போட்டிகளில் களமாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர முகம் எம்.எஸ். டோனி. கடந்த வருட ஐபிஎல் இன் போது டோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுபெற்றார்.

    இந்நிலையில் கேப்டன்சி கைமாறியது குறித்து ருதுராஜ் சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது,

    கடந்த ஆண்டு ஐபில் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எம்.எஸ். டோனி என்னிடம் வந்து, 'இந்த ஆண்டு நான் அணியை வழிநடந்த போவதில்லை - நீதான் கேப்டன்' என்றார்.

    முதல் ஆட்டத்தில் இருந்தே நான்தான் வழிநடத்த வேண்டுமா? என கேட்டதற்கு 'இது உன்னுடைய அணி, நீதான் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும், நான் இதில் தலையிட மாட்டேன்.

    ஃபீல்டிங்கில் 50% நீயும் 50% நானும் பார்த்து கொள்ளலாம். இருந்தாலும் என் அறிவுரையை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என்றார். அந்த நம்பிக்கை மிகப்பெரியது என்று நெகிழ்ச்சியுடன் ருதுராஜ் பகிர்ந்துள்ளார்.

    • 'HALF TIME' என்ற வாசகத்துடன் கோகோ கோலா விளம்பரம் செய்து வருகிறது.
    • மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    பிரபல குளிர்பானங்களான பெப்சி மற்றும் கோகோ கோலா இடையே பல தசாப்தங்களாக போட்டி நிலவி வருகிறது. விளம்பரங்கள் மூலம் இரு நிறுவனங்களும் முந்தைய காலங்களில் மோதிக்கொண்டன.

    இரு நிறுவனங்களின் மோதலை பலரும் ஆர்வத்துடன் கவனித்து வருவர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருவதை ஒட்டி மீண்டும் பெப்சி மற்றும் கோகோ கோலா விளம்பர போரை தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு 'HALF TIME' என்ற வாசகத்துடன் கோகோ கோலா விளம்பரம் செய்து வருகிறது.

    அதாவது இடைவேளைகளில் கோகோ கோலா அருந்துங்கள் என்பதே அதன் அர்த்தம். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டுள்ள பெப்சி, 'Anytime is Pepsi Time' என்ற விளம்பர யுக்தியை முன்னெடுத்துள்ளது.

    அதாவது இடைவேளை வரை எதற்கு காத்திருக்கிறீர்கள், எந்த நேரமும் பெப்சி குடிக்கும் நேரம்தான் என்று இந்த விளம்பரம் உணர்த்துகிறது. மீண்டும் தொடங்கிய இந்த விளம்பர யுத்தம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 

     

    • 47 பந்தில் அரைசதம் அடித்த ரச்சின் ரவிந்திரா, 93 பந்தில் சதம் அடித்தார்.
    • கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் அடித்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், பி பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.

    என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்த 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடினர். கேன் வில்லியம்சன் 61 பந்தில் அரைசதம் கடக்க, ரச்சின் ரவீந்திரா 93 பந்தில் சதம் அடித்தார். நியூசிலாந்து 32 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.

    நியூசிலாந்தின் ஸ்கோர் 33.3 ஓவரில் 212 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்ஸ் உடன் 108 ரன்கள் விளாசி ரபடா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது.

    3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்துள்ளார். கேன் வில்லியம்சன் 80 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிராக 41 ரன்கள் எடுத்ததுடன், ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.

    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா (மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது) ஆகியவற்றின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    என்றாலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 325 ரன்கள் குவித்து 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதற்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்சாய் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 31 பந்தில் 41 ரன்கள் விளாசினார். மேலும், 9.5 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட் சாய்த்தார்.

    அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கைவிடப்பட்ட போட்டியில் 63 பந்தில் 67 ரன்கள் விளாசினார். மேலும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்மதுல்லா ஓமர்சாய் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    3-வது இடத்தில் இருந்து தற்போது 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஜிம்பாப்வே வீரர் சிகந்தர் ரசா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னெர் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேக்ஸ்வெல் 7-வது இடத்திலும், ஸ்காட்லாந்து வீரர் பிராண்டன் மெக்முலன் 8-வது இடத்திலும் ஜடேஜா 9-வது இடத்திலும், நமீபியா வீரர் எராமஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றன்ர்.

    இந்தியாவின் மற்றொரு வீரர் அக்சார் படேல் 17 இடங்களில் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா 3 இடங்களில் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • ரச்சின் ரவீந்திரா 47 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • நியூசிலாந்து 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்தும், பி பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாக, அதேநேரம் பந்து பந்துக்கு ரன் என்ற அடிப்படையில் விளையாடினர்.

    என்றாலும் வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முயடிவில்லை. நியூசிலாந்து ஸ்கோர் 7.5 ஓவரில் 48 ரன்னாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா தனது வழக்கமான பாணியில் விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 47 பந்தில் அரைசதம் விளாசினார். ரச்சின் ரவீந்திரா- கேன் வில்லியம்சன் ஜோடி 56 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்த 17.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    25 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 80 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 39 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 

    • ரோகித் சர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் ஓய்வு பெறுவார் என தகவல் வெளியானது.

    இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். அவருடைய ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாக ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் விமர்சிக்கப்பட்டது.

    இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் அவரது எதிர்காலம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் கேட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அபாரமாக செயல்பட்டு வருகிறது. நேற்றைய அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    நேற்றைய போட்டிக்குப்பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது செய்தியாளர் ஒருவர் "ரோகித் சர்மாவின் ஃபார்ம், அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லுங்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கவுதம் கம்பீர் பதில் கூறியதாவது:-

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக நான் என்ன சொல்ல முடியும்?. நாங்கள் முற்றிலும் பயமில்லாத மற்றும் தைரியமான அணுகுமுறையை விரும்புகிறோம்.

    கேப்டன் இதுபோன்ற துடிப்புடன் பேட்டிங் செய்யும்போது, டிரெஸ்ஸில் ரூமில் சிறந்த சிக்னலை கொடுக்கிறது. நீங்கள் ரன்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் விளையாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் இடையிலான வேறுபாடு.

    நீங்கள் புள்ளி விவரங்களை வைத்து மதிப்பீடு செய்கிறீர்கள். நாங்கள் அப்படியில்லை. அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து மதிப்பீடு செய்கிறோம். நாங்கள் நம்பர் அல்லது சராசரியை பார்ப்பதில்லை. கேப்டன் முதன் நபராக தன்னுடைய கையை தூக்கும்போது (செயல்பாட்டில் முதன் நபராக இருக்கும்போது) டிரெஸ்ஸிங் ரூமில் அதைவிட சிறந்ததாக ஏதும் இருக்க முடியாது" என்றார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் நான்கு தொடர்களிலும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.
    • இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், இந்த மாதம் சென்னையில் நடைபெறும் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது.

    சென்னையை சேர்ந்த 42 வயதாகும் சரத் கமல் இந்தியாவுக்காக ஐந்து முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.

    ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் என காமன்வெல்த் போட்டிகளில் ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார். 2004-ம் அண்டு நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக சர்வதேச அளவில் பதக்கம் வென்றார்.

    ஆசிய போட்டிகளில் இரண்டு முறை வெண்கல பதக்கமும், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 4 பதக்கமும் வென்றுள்ளார்.

    42 வயது ஆனாலும் சரத் கமல் டேபிள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ளது. இளம் வீரரான மனவ் தக்காரை விட 18 இடங்கள் முன்னிலை பெற்றுள்ளார்.

    முதல் சர்வதேச தொடரை சென்னையில் தொடங்கிய சரத் கமல், சென்னையிலேயே தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கிறார்.

    • சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிப்பு.
    • ரோகித் சர்மா 2 இடங்கள் சரிவு.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதியில் அரைசதமும் விளாசினார். இதனால் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சுப்மன் கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இவர் வங்கதேச அணிக்கு எதிராக சதமும், பாகிஸ்தானுக்கு எதிராக 46 ரன்களும் சேர்த்தார்.

    3 லீக் ஆட்டங்கள், அரையிறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ரோகித் சர்மா 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக 41 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 15 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 28 ரனகளும் அடித்தார்.

    தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிராக 56 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 79 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 46 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2-வது இடத்திலும் (அதே இடத்தில் நீடிப்பு), அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 6-வது இடத்திலும் (ஒரு இடம் முன்னேற்றம்), நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 7-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), இலங்கை வீரர் அசலங்கா 9-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), ஆப்கானிஸ்தான் வீரர் ஜத்ரன் 10-வது இடத்திலும் (13 இடங்கள் முன்னேற்றம்) உள்ளனர்.

    • முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 2-வது அரைஇறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    9-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.

    நேற்று துபாயில் நடைபெற்ற முதல் அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று 2-வது அரைஇறுதி போட்டி நாளை லாகூரில் நடக்கிறது. இதில் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா-ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    • நேற்றைய போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்தார்.
    • க்ரிஸ் கெய்லுக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார்.

    36 வயதான விராட் கோலி 3-வது வீரராக களமிறங்கி 84 ரன்கள் (5 பவுண் டரி) எடுத்தார். விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அதிக ரன் எடுத்து இருந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவான் சாதனையை முறியடித்தார். தவான் 10 போட்டிகளில் 701 ரன்களை எடுத்துள்ளார். விராட் கோலி 16 இன்னிங்சில் விளையாடி 746 ரன்களை எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை எடுத்த சர்வதேச வீரர்களில் க்ரிஸ் கெய்லுக்கு (791 ரன்) அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் 7-வது முறையாக அரை சதம் அடித்துள்ளார். முன்னதாக சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், ஷிகர் தவான் ஆகியோர் தலா 6 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    நாக்-அவுட் போட்டியில் 5-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 6 முறை 50 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் சேசிங்கில் அதாவது 2-வது பேட்டிங்கில் 8 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி அசத்தியுள்ளார் இந்த மைல்கல்லை அவர் தனது 301-வது போட்டியில் 159 இன்னிங்சில் கடுந்துள்ளார்.

    டெண்டுல்கருக்கு அடுத்த படியாக அவர் உள்ளார். டெண்டுல்கர் சேசிங்கில் 8720 ரன் (232 இன்னிங்ஸ்) எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 24-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்து டெண்டுல்கரை முந்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 23-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் விராட் கோலி 2 கேட்ச் பிடித்தார். ஒருநாள் போட்டியில் இதன் மூலம் அதிக கேட்ச் பிடித்த வீரர்களில் அவர் 2-வது இடத்தில் உள்ள ரிக்கி பாண்டிங்கை (ஆஸ்திரேலியா) முந்தினார். கோலி 161 கேட்ச்களையும், ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்களையும் பிடித்துள்ளனர். ஜெயவர்தனே (இலங்கை) 218 கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.

    ×