என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார்.
    • சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார். சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.

    இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்மித் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    35 வயதான ஸ்டீவ் சுமித் 170 போட்டிகளில் விளையாடி 5,800 ரன் எடுத்துள்ளார். சராசரி 43.28 ஆகும். 12 சதமும், 35 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சம் 164 ரன் குவித்துள்ளார். தனது கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 73 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    • முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி போட்டி அமைந்தது.

    சமபலம் வாய்ந்த அணிகள் மோதியது, இந்திய அணி நாக்-அவுட் சுற்று போட்டிகளில் கடந்து வந்த தோல்விகள் என பல்வேறு காரணங்களால் நேற்றைய போட்டி இந்திய அணி மற்றும் ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக மாறியது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

    இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் நான்கு வகை கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    ஏற்கனவே டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி பெற்றிருந்தார். இவர் தலைமையில் இந்திய அணி 2007, 2009 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஐ.சி.சி. கோப்பையை வென்று அசத்தியது.

    எனினும், எம்.எஸ். தோனி ஓய்வு பெறும் வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கப்படவில்லை. அந்த வகையில் இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இதையடுத்து, எம்.எஸ். தோனி இதுவரை எட்டாத சாதனையை ரோகித் சர்மா தற்போது படைத்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐந்து முறை முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதுவரை வேறு எந்த அணியும் மூன்று முறைகளுக்கு மேல் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை.

    கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இத்தகைய சாதனையை படைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த கேப்டனும் பெறாத பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    • ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.
    • வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.

     

    இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை, பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்திய அணியின் அபார வெற்றி பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், திறமை மற்றும் மனவுறுதியுடனான மிக சிறந்த ஆட்டம். முழக்கத்துடன் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.

    நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள். இறுதி போட்டியில் சிறப்பாக விளையாட வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

    இதேபோன்று மத்திய மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், பாராட்டத்தக்க வெற்றியை பெற்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்.

    இந்திய அணி மீண்டும் ஒரு முறை தனித்துவம் வாய்ந்த குழுப்பணி, மனவுறுதி மற்றும் சிறந்த தரம் ஆகியவற்றை வெளிப்படுத்தி உள்ளது. இந்த வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    • இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கிடைத்த தோல்விக்கு ஆஸ்திரேலியாவை இந்தியா பழி தீர்த்தது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு

    முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கிடைத்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியை இந்தியா பழி தீர்த்துள்ளது. அரை சதம் கடந்து 84 ரன் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 267 ரன்கள் எடுத்து வென்றது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இறங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.

    ரோகித் சர்மா 28 ரன்னிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் அவுட்டாகினர்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 91 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் 27 ரன்னிலும்

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் விராட் கோலி அரை சதம் கடந்தார். அவர் 84 ரன்னில் வெளியேறினார். பாண்ட்யா

    இறுதியில், இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. கே.எல்.ராகுல் 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இந்திய அணி வெற்றி பெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
    • பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார்.

    புதுடெல்லி:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி 46-வது ரன்னை கடக்கும்போது சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இதில் ஷிகர் தவான் 701 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
    • இந்திய அணி முதல் 16 ஓவரில் 82 ரன்களை எடுத்துள்ளது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இறங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.

    அணியின் எண்ணிக்கை 30 ஆக இருந்தபோது சுப்மன் கில் 8 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 28 ரன்னில் வெளியேறினார்.

    விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து பொறுப்புடன் ஆடினார்.

    இந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடக்கிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்குன் பாகிஸ்தான் அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. இதில் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணி கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணை கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் தொடருக்கான அணியில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்கள் எடுத்தது.
    • ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    டிராவிஸ் ஹெட் 39 ரன்னும், லபுசேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாஸ் இங்கிலீஸ் கேட்சை விராட் கோலி பிடித்தார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேட்சுகள் பிடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    45.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் அடித்து ஆடி வருகிறது. இப்போட்டியில் ஜாஸ் இங்கிலீஸ் கேட்சை விராட் கோலி பிடித்தார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    விராட் கோலிக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் 334 கேட்சுகளும் அசாருதின் 261 கேட்சுகளும் சச்சின் 256 கேட்சுகளும் பிடித்துள்ளனர்.

    மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் ஜெயவர்த்தனே (440), ராஸ் டெய்லர் (351), ரிக்கி பாண்டிங் (364) ஆகியோருக்கு அடுத்து 4 ஆவது இடத்தில விராட் கோலி உள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணி 28 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.
    • ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் அடித்து 73 ரன்னில் அவுட்டானார்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனோலி களமிறங்கினர். கோனோலி ஷமி பந்து வீச்சில் டக் அவுட்டானார்.

    அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து லபுசேன் களமிறங்கினார். ஸ்மித்-லபுசேன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

    3வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் 29 ரன்னில் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இங்கிலீஸ் 11 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

    5வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித்-அலெக்ஸ் கேரி ஜோடி 54 ரன்கள் சேர்த்த நிலையில், சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 7 ரன்னில் அவுட்டானார்.

    ஆஸ்திரேலியா 40 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஷமி 2 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தது.
    • ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்து ஆடி வருகிறார்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனோலி களமிறங்கினர். கோனோலி ஷமி பந்து வீச்சில் டக் அவுட்டானார்.

    அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து லபுசேன் களமிறங்கினார். ஸ்மித்-லபுசேன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

    3வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் 29 ரன்னில் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இங்கிலீஸ் 11 ரன்னில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

    ×