என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஹாக்கி இந்தியா ஒடிசா மாநில முதல் நிவாரண நிதிக்கு 21 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
    கொரோனா வைரஸ் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன. அடுத்த இரண்டு வாரங்கள் மிகக்கவனகமாக இருக்க வேண்டிய வாரங்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு தாராளமான நிதி வழங்கலாம் என பாரத பிரதமர் தெரிவித்திருந்தார். அதேபோல் ஒவ்வொரு மாநில அரசுகளும் தெரிவித்திருந்தன.

    இதனால் முக்கியமான விளையாட்டு அமைப்புகள் பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி வருகிறார்கள். ஹாக்கி இந்தியா பிரதமர் மோடி நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தது.

    இந்நிலையில் ஒடிசா மாநில மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது ஹாக்கி இந்தியா.

    ஹாக்கி இந்தியா நிர்வாகக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக கூறும் ஹாக்கி இந்தியா இதுகுறித்து கூறுகையில் ‘‘இக்கட்டான நிலையில் தற்போது நாங்கள் அளித்துள்ள இந்த 21 லட்சம் ரூபாய் கொரோனாவுக்கு எதிராக போரிட சிறிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.

    ஒடிசா மாநிலம் கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான வகையில் போரிட்டு வருகிறது. எங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருக்கும் ஒடிசா மக்களுக்கு இந்த தொகை கூடுதலாக உதவும் என்று நம்புகிறோம்.’’ என்று தெரிவித்துள்ளது. 

    ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங் கூறுகையில் ‘‘ஹாக்கி இந்தியா ஒடிசா மக்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் ஆதரவையும், உத்வேகத்தையும் பெற்றுள்ளது. ஹாக்கி இந்தியாவின் நிர்வாக போர்டு ஒடிசா முதல்வர் நிவார நிதிக்கு 21 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என ஒருமனதாக முடிவு எடுத்ததற்கு பெருமையடைகிறேன்’’ என்றார்.

    சர்வதேச அளவிலான ஹாக்கி தொடர்களில் ஒடிசாவில் உள்ள புவனேஷ்வரில்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரின்போது ஒடிசா அரசு ஸ்பான்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தயா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தி நிதி திரட்டலாம் என்ற சோயிப் அக்தர் கருத்துக்கு கபில்தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    ஆட்கொல்லி நோயானா கொரோனா வைரசுக்கு ஆசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள இந்த கடினமான காலக்கட்டத்தில், நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இதனால் இரு நாட்டினருமே கவலைப்படமாட்டார்கள். விராட் கோலி (இந்திய கேப்டன்) சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் (பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன்) சதம் கண்டால் நீங்கள் உற்சாகமடையுங்கள். களத்தில் எந்த முடிவு கிடைத்தாலும் இரு அணிகளுமே வெற்றியாளர்கள்தான். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம்.

    இவ்வாறு சோயிப் அக்தர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் அக்தரின் கோரிக்கை கபில்தேவ் முற்றிலும் நிராகரித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் ஏழைமக்களின் உயிரை காப்பாற்றுவதுதான் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு பணம் தேவையில்லை. சோயிப் அக்தர் அவரது கருத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால், நமக்கு (இந்தியா) பணம் தேவையில்லை. அதுபோதுமான அளவு உள்ளது. எங்களை பொறுத்தவரைக்கும் தற்போது அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதுதான் முக்கியம். தொலைக்காட்சியில் அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை வீசுவதை பார்த்து வருகிறேன். தை நிறுத்துவது அவசியம்.

    ஏற்கனவே பிசிசிஐ 51 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. தேவை அதிகரித்தால் இன்னும் அதிகமாக வழங்கும். இது நிதியை பெறுக்குவதற்கான நிலை அல்ல. நிலைமை தற்போது நல்ல நிலைமைக்கு திரும்ப வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வீரர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் நிலைக்கு ஆளாகக்கூடாது.

    நிலைமை சரியான பின்னர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும். நாட்டை விட கிரிக்கெட் மிகப்பெரியது அல்ல. ஏழை மக்கள், மருத்துவமனை ஊழியர்ள், போலீஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மக்கள்தான் இந்த போரில் முன்னிலை வகிக்கிறார்கள்.’’ என்றார்.
    கொரோனா வைரசால் கால்பந்து கிளப்புகள் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்ததால் ரியல் மாட்ரிட் அணி வீரர்களும் 20 சதவீத ஊதிய குறைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. போட்டிகள் இனிமேல் எப்போது தொடங்கும் என்பதை உறுதியாக கூறு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கிளப்புகளிலும் விளையாடும் முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள். போட்டி நடைபெறவில்லை என்றாலும் அவர்களுடைய ஒப்பந்தத்தின்படி சம்பளம் கொடுக்க வேண்டும். இதனால் கிளப்புகள்  மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் வீரர்களின ஊதியத்தில் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது, ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா லீக்கில் பார்சிலோனா கிளப்புக்காக விளையாடும் நட்சத்திர வீரர் மெஸ்சி ஊதிய குறைப்பு முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணியின் வீரர்கள் 20 சதவீத ஊதிய குறைப்பு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    ஏற்கனவே லா லிகாவில் விளையாடும் நான்கு அணி வீரர்கள் ஊதிய குறைப்பை ஏற்றுக் கொண்ட நிலையில் ஐந்தாவது ரியல் மாட்ரிட் வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    லீக்குகள் இத்துடன் முடிவடைந்தால் 20 சதவீத ஊதியமும், சூழ்நிலை நன்றாகிய பின் போட்டிகள் நடைபெற்றால் 10 சதவீத ஊதியமும் பிடித்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டதால் போட்டி அமைப்பாளர்களுக்கு 100 மில்லியன் பவுண்டு காப்பீடு மூலம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
    உலகின் மிகப்பெரிய டென்னிஸ் தொடராக கருதப்படுவது கிராண்ட் ஸ்லாம். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் என நான்கு தொடர்கள் நடைபெறும்.

    இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்த ஆண்டு நடைபெற இருந்த விம்பிள்டன் டென்னிஸ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் முதன்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதேபோல் போட்டி அமைப்பாளர்களுக்கும் கிடைக்கும் வருவாய் மிகப்பெரிய அளவில் பாதித்தது. என்றாலும் சார்ஸ் வைரஸ் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியபோது வைரஸ் போன்ற தொற்றுக்களால் போட்டி தடைபட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு வருகிறதாம்.

    இந்த வருடத்திற்கான தொடரையும் இன்சூரன்ஸ் செய்திருந்தார்களாம். இதன்மூலம் 100 மில்லியன் பவுண்டு காப்பீடு மூலம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    இங்கிலிஷ் பிரிமீயர் லீக் ரத்து செய்யப்பட்டு சாம்பியன் கோப்பை இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என லிவர்பூல் வீர்ர சாடினோ மானே தெரிவித்துள்ளார்.
    உலக அளவில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்களில் மிகவும் பிரபலமான லீக்குகளில் ஒன்று இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமீயர் லீக். 2019-2020 சீசனில் லிபர்பூல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

    அதனடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் 38 போட்டிகளில் விளையாட வேண்டும். தற்போது வரை ஏறக்குறைய 29 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் லிவர்பூல் அணி அதிக புள்ளிகள் பெற்றதோடு 2-வது அணிக்கும் லிவர்பூலுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனால் இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிடும்.

    30 வருடத்திற்குப் பிறகு லிபர்பூல் கோப்பையை வெல்ல இருப்பது குறித்து அந்த அணியின் வீரர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    இதனால் இங்கிலிஷ் பிரிமீயர் லீக் இத்துடன் முடிவடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை அப்படி முடிவடைந்தால் எந்த அணிக்கும் சாம்பியன் பட்டம் வழங்கப்படாது எனத் தெரிகிறது.

    இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் சாடியோ மானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சாடியோ மானே கூறுகையில் ‘‘போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று விரும்புகிறேன். இதை கட்டாயம் நான் விரும்புவேன்.

    இந்த சூழ்நிலையில் எது நடந்தாலும் அதை புரிந்துகொள்வேன். இது லிவர்பூல் அணிக்கு மிகவும் கடினமானது. ஆனால், உலகில் கோடிக்கணக்கான மக்கள் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். சில மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். பலருக்கு சிக்கலான சூழ்நிலை உள்ளது. ஆனால், கோப்பையை வெல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவு. தற்போதைய சூழ்நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்றால், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். வாழ்வின் ஒரு பகுதி இது. அடுத்த வருடம் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’என்றார்.

    லிவர்பூல் 29 போட்டிகளில் விளையாடி 82 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 28 போட்டிகளில் விளையாடி 57 புள்ளிகள் பெற்றுள்ளது.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனாக ரிக்கி பாண்டிங், 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர்தான் எல்லாக்காலங்களிலும் சிறந்த தொடர் எனத் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெறாமல் இருப்பதால் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர். சில வீரர்கள் லைவ் செசன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டியிடம் பிடித்த ஆஷஸ் தொடர் குறித்து விவரிக்குமாறு கேட்டார். அதற்கு 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர்தான் எல்லாக்காலக்கட்டங்களில் சிறந்த தொடர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    2005-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால், 2-வது மற்றும் நான்காவது டெஸ்டில் தோல்வியடைந்து தொடரை இழந்தது.

    ‘‘சில ஆஷஸ் தொடர்களில் விளையாட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. நான் எட்டு முதல் ஒன்பது ஆஷஸ் தொடரில் விளையாடி விட்டேன். ஆக, எனக்கு நினைவுக்கூறத்தக்க பல சம்பவங்கள் உண்டு. சில விஷயங்கள் நினைவில் இல்லாமல் போயிருக்கலாம்.

    மைக்கேல் வாகன் தலைமையிலான இங்கிலாந்து அணி எங்களை 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் எதிர்த்து விளையாடியது குறித்த நினைவுகள் உண்டு. அது எந்தக்காலக்கட்டத்திலும் சிறந்த தொடராக இருக்கும். வாகன் தலைமையிலானது சிறந்த அணியாக இருந்தது. நாங்கள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்றோம்.

    அதன்பின் நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் தோல்வியடைந்தோம். 3-வது டெஸ்டில் கடுமையாக போராடி டிரா செய்தோம். நான்காவது டெஸ்டில் தோல்வியடைந்தார். கடைசி டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடரை இழந்தோம். துரதிருஷ்டவசமாக எங்களுடைய ஆட்டம் போதுமான அளவிற்கு சிறந்ததாக இல்லாமல் போய்விட்டது. பிரெட் லீ, பிளின்டாப் ஆகியோரின் சந்தோச வெளிப்பாடு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பிளின்டாப் பிரரெட் லீயிடம் சென்று கைக்குலுக்கிய சம்பவம் இந்த தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை நினைவில் வைக்க முக்கிய காரணமாக இருந்தது. நாங்கள் ஆடுகளத்தில் மிகவும் கடினமாக விளையாடினோம். வாகனின் அணி வெற்றி பெற்றது ’’என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது காயத்தில் இருந்த குணமாக வழிவகுத்தது என சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகம்தான்.

    இந்த ஒத்திவைப்பால் காயத்தில் இருந்து மீண்டுவர முடிந்தது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

    கடந்த டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும்போது இவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை மேற்கொண்ட சாஹர், தற்போதுதான் குணமடைந்துள்ளார். ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியிருந்தால் சில போட்டிகளை தவற விட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிற்கும். ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அந்த நிலைமை ஏற்படவில்லை என்றார்.

    இதுகுறித்து தீபக் சாஹர் கூறுகையில் ‘‘மீண்டும் பந்து வீசுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். தற்போதைய எண்ணம் எல்லாம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதுதான். நினைத்த விஷயங்கள் எல்லாம் அப்படியே நடைபெறுவது நம்மிடம் இல்லை. இந்த நேரத்தில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதில் கவனம் செலுத்தினேன்.

    புதிய விஷங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். மேலும் எனது உடற்தகுதியில் கவனம் செலுத்தினேன். தற்போது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக காயத்தில் இருந்து மீண்டு வர எனக்கு கூடுதல் நேரம் கிடைத்தது. ஐபிஎல் மார்ச் 29-ந்தேதி தொடங்கியிருந்தால் நான் சில போட்டிகளை தவறவிட்டிருப்புன்’’ என்றார்.
    கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஆட் கொல்லி நோயானா கொரோனா வைரசுக்கு ஆசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள இந்த கடினமான காலக்கட்டத்தில், நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இதனால் இரு நாட்டினருமே கவலைப்படமாட்டார்கள். விராட் கோலி (இந்திய கேப்டன்) சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் (பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன்) சதம் கண்டால் நீங்கள் உற்சாகமடையுங்கள். களத்தில் எந்த முடிவு கிடைத்தாலும் இரு அணிகளுமே வெற்றியாளர்கள் தான். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம்.

    ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம். இப்போது ஒவ்வொருவரும் வீட்டிலேயே இருப்பதால் டி.வி.யின் மூலம் அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். ஆனால் தற்சமயம் இந்த போட்டியை நடத்த முடியாது. தற்போதைய நிலைமையில், முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும் போது, துபாய் போன்ற பொதுவான இடத்தில் இந்த தொடரை நடத்த ஏற்பாடு செய்யலாம். இந்த போட்டியால் இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவு துளிர்க்கவும், இரு நாட்டு உறவு மேம்படவும் வாய்ப்புள்ளது. சிக்கலான இந்த தருணத்தில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒத்தாசையாக இருக்க வேண்டும். நலநிதி போட்டி நடத்தலாம் என்று நாங்கள் சிபாரிசுதான் செய்ய முடியும். சம்பந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அக்தர் கூறினார்.

    எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே முழுமையான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன.
    உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போனது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் கொரோனா வைரசால் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்கு அங்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் ரூ.4½ கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நலநிதி திரட்டுவதற்காக கடந்த ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் போது தான் அணிந்திருந்த பனியனை (டி சர்ட்) ஏலம் விடுவதாக அறிவித்து இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் அரைசதம் விளாசினார். அத்துடன் ஆட்டம் சமன் ஆனதால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை ரன்அவுட் செய்து உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

    அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த அந்த பனியன் குறிப்பிட்ட நிறுவனம் மூலம் ஆன்-லைனில் ஏலம் விடப்பட்டது. இதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 82 பேர் ஏலம் கேட்டனர். இதனால் ஆயிரத்தில் ஆரம்பித்த தொகை லட்சத்தை தாண்டியது. இறுதியில் இந்த பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போனது. இதன் மூலம் கிடைக்கும் தொகை லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படுகிறது.
    நான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. அத்துடன் நமது நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் லேசான உடற்பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் நேரத்தை கழிக்க சக வீரர்களுடன் சமூக வலைதளம் மூலம் உரையாடி வருகிறார்கள்.

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங்குடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் உரையாடினார். இருவரும் கிரிக்கெட் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

    இந்த கலந்துரையாடலின் போது, யுவராஜ்சிங்கிடம் தற்போதைய இந்திய அணிக்கும், தாங்கள் விளையாடிய காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று ரோகித் சர்மா வினாவினார். அதற்கு பதிலளித்து யுவராஜ்சிங் கூறியதாவது:

    ‘நான் அணிக்குள் வந்த போதோ அல்லது நீ (ரோகித் சர்மா) அணிக்குள் வந்த போதோ நமது சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர். அப்போது சமூக ஊடகங்கள் கிடையாது. எனவே கவனச் சிதறல்களும் இல்லை. சீனியர் வீரர்களின் சில நடத்தை முறைகளை இளம் வீரர்கள் உறுதியாக பின்பற்ற வேண்டியதாக இருந்தது. அதாவது பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். மீடியாக்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதில் சீனியர் வீரர்களை பின்பற்ற வேண்டியது இருந்தது. ஏனெனில் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் தூதர்களாக விளங்கினார்கள்.

    ஆனால் தற்போதைய வீரர்கள் முந்தைய காலத்தை போல் கிடையாது. இந்திய அணிக்காக விளையாடிய பிறகு உங்களது செயல்பாடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானதாகும் என்பதை இளம் வீரர்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். தற்போதைய இந்திய அணியில் நீயும், விராட் கோலியும் தான் சீனியர்கள். எஞ்சிய வீரர்களை நிலையானவர்கள் என்று சொல்ல முடியாது. சீனியர் வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு சில வீரர்கள் தான் சரியான நிலையுடன் இருப்பதாக நான் உணருகிறேன். தற்போது சீனியர், ஜூனியர் வீரர்களுக்கு இடையே சிறிய இடைவெளி தான் உள்ளது. யாரும், யாரிடமும் எதுபற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை தான் இப்போதைய இந்திய அணியில் உள்ளது. தற்போது இளம் வீரர்கள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. ஆனால் எங்கள் காலத்தில் இதுபோன்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. நாம் ஏதாவது செய்ய அதனை சீனியர் வீரர்கள் தவறு என்று சுட்டிக்காட்டிவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து பயந்தோம். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேசியது போன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் எங்கள் காலத்தில் சாத்தியமே கிடையாது. அதுபோன்ற சமபவங்கள் எங்கள் காலத்தில் நடந்திருக்காது.

    இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

    அவர் மேலும் உரையாடுகையில், ‘தற்போதைய இளம் வீரர்கள் உண்மையான கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டியை விட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் தேசிய போட்டி இல்லாத காலங்களில் உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும். இந்தியாவில் உள்ள வெவ்வேறு வகையான தன்மை கொண்ட பிட்ச்களில் விளையாடும் போது நல்ல அனுபவத்தை பெற முடியும்‘ என்று குறிப்பிட்டார்.

    இந்திய அணியில் தான் அறிமுகம் ஆகும் போது இருந்தது குறித்தும், தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் ரோகித் சர்மா குறிப்பிடுகையில், ‘நான் இந்திய அணிக்கு வரும் போது நிறைய சீனியர் வீரர்கள் இருந்தனர். நான், பியூஷ் சாவ்லா, சுரேஷ்ரெய்னா ஆகியோர் தான் இளம் வீரர்கள். தற்போது இந்த சூழல் சற்று மாறி இருக்கிறது. நான் 5 முதல் 6 இளம் வீரர்களுடன் பேசுவதை தொடர்ந்து வருகிறேன். ரிஷாப் பண்டிடம் நிறைய பேசுகிறேன். கடினமாக உழைக்கும் அவர் குறித்து மீடியாக்கள் அதிகம் எழுதுகின்றன. அவரை பற்றி எழுதுவதற்கு முன்பு சற்று யோசிக்க வேண்டும். இருப்பினும் இந்திய அணிக்காக ஆடும் போது அதிக கவனம் இருக்கத்தான் செய்யும்‘ என்றார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே, தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்தது எது? என்பதை விவரித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினாலும் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 31 வயதாகும் இவர் இருபது டி20, 90 ஒருநாள் மற்றும் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இந்திய அணி இக்கட்டான நிலையில் தவிக்கும்போதெல்லாம் தனது சிறப்பான பேட்டிங்கால் அணியை காப்பாற்றியுள்ளார். பொதுவாக சுழற்பந்து வீச்சைவிட வேகப்பந்து வீச்சை சிறப்பாக விளையாடக் கூடியவர்.

    தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் கிரிக்கெட் வீரர்கள் உரையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் தன்னுடைய இன்னிங்சில் மிகவும் பிடித்த இன்னிங்ஸ் குறித்து விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் 103 ரன்கள் விளாசியது, 2015-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் அடித்தது சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.

    லார்ட்ஸ் டெஸ்டில் ரகானே 154 பந்தில் 103 ரன்கள் விளாசினார். இந்தியா ஒரு கட்டத்தில் திணறியபோது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புவனேஷ்வர் குமார் உடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தார். இதனால் அணி சரிவில் இருந்து மீண்டது. 2-வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீச இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது. தவான் 137 ரன்கள் அடித்த போதிலும், ரகானே 60 பந்தில் 79 ரன்கள் விளாசினார். தவான் - ரகானே ஜோடி 125 ரன்கள் குவித்தது. பின்னர் 308 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 177 ரன்னில் சுருண்டது.
    லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் புஜாரா பேட்மிண்டன் விளையாடுவதுடன் அவரது மனைவிக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார்.
    கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீட்டிற்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இளம் வீரர்கள் தங்களது தாயார்களுக்கு வீட்டு வேலை, தோட்ட வேலைகளில் உதவி செய்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு வீட்டிவேலை செய்வதில் உதவி செய்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.

    புஜாரா அவரது மனைவியுடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார். புஜாரா மனைவி பூஜாவிற்கு பேட்மிண்டன் விளையாட தெரியவில்லை என்றாலும், சேர்-ஐ நெட்டாக மாற்றி பயிற்சி கொடுத்து தேற்றியுள்ளார்.
    ×