search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிவர்பூல்"

    ஒரு புள்ளி வித்தியாசத்தில் லிவர்பூலை பின்னுக்குத் தள்ளி 2-வது முறையாக பிரிமீயர் லீக்கை கோப்பையை தட்டிச் சென்றது மான்செஸ்டர் சிட்டி.
    உலகளவில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த வருடம் மே மாதம் வரை நடைபெறும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மான்செஸ்டர் சிட்டி அணிக்கும், யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணிக்கும் இடையே புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல கடும் போட்டி நிலவியது.



    37 போட்டிகள் முடிவில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது புரியாத புதிராக இருந்தது. மான்செஸ்டர் சிட்டி 95 புள்ளிகளும், லிவர்பூல் 94 புள்ளிகளும் பெற்றிருந்தது. மான்செஸ்டர் தோல்வி அல்லது டிரா செய்து, லிவர்பூல் வெற்றி பெற்றால், லிவர்பூல் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தது.

    இந்நிலையில் இன்று இரு அணிகளும் கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில், பிரைட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என எளிதில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 98 புள்ளிகள் பெற்றது. அதேவேளையில் லிவர்பூல் வோல்வர்ஹாம்ப்டன் அணியை 2-0 என வீழ்த்தியது. இதனால் லிவர்பூல் 97 புள்ளிகள் பெற்றது.



    ஒரு புள்ளி வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இங்கிலீஷ் பிரிமீயர் தொடரை அடுத்தடுத்து கடைசி 10 வருடத்தில் வென்ற ஒரே அணி மான்செஸ்டர் சிட்டியாகும்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியைச் சேர்ந்த பின்கள வீரரான விர்ஜில் வான் டிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள தலைசிறந்த லீக்கில் இதுவும் ஒன்று.

    கடந்த 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடத்திற்கான 2018-19 சீசனில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்றிரவு நடைபெறும் போட்டிகள் முடிவில் யார் சாம்பியன் என்பது தெரியவரும்.



    மேலும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி இந்த சீசனின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் பின்கள (Defender) வீரரான விர்ஜில் வான் டிஜ்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-13 சீசனில் பின்கள வீரர் ஒருவர் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். அதன்பின் தற்போது விர்ஜில் வான் இந்த விருதை பெற்றுள்ளார்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி 2-வது லெக்கில் பார்சிலோனாவை 4-0 என துவம்சம் செய்து வெளியேற்றி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல். #UCL
    ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லிவர்பூல் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் அஜாக்ஸ் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

    முதல் லெக்கில் லிவர்பூல் அணிக்கெதிராக பார்சிலோனா, அதன் சொந்த மைதானத்தில் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இதனால் லிவர்பூல் அணி 2-வது லெக்கில் 4 கோல்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.



    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது லெக் லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே சொந்த மைதான ரசிகர்கள் ஆரவாரத்தோடு லிவர்பூல் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா பின்கள வீரர்களை ஏமாற்றி டிவோக் ஒரிஜி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். தொடர்ந்து லிவர்பூல் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திக் கொண்டே இருந்தனர். பெரும்பாலான வாய்ப்புகளை லிவர்பூல் கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.



    அதேபோல் லிவர்பூல் வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பார்சிலோனா கோல் எல்லைக்குள்ளும் பந்துகள் சென்ற வண்ணம் இருந்தனர். பார்சிலோனா கோல் கீப்பர் படாதபாடு பட்டு பந்துகளை தடுத்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. ஆகவே, 1-0 என லிவர்பூல் முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் லிவர்பூல் வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். 54-வது நிமிடத்தில் விஜ்னால்டம் கோல் அடித்தானர். அடுத்த 2-வது நிமிடத்தில் சூப்பரான ஹெட்டர் கோல் அடித்தார். மூன்று நிமிடத்திற்குள் இரண்டு கோல்கள் அடித்து பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

    இதனால் லிவர்பூல் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த ஸ்கோருடன் ஆட்டம் முடிந்தால் போட்டி வெற்றித் தோல்வியின்று முடியும் என்பதால் லிவர்பூல் வீரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    சுமார் 23 நிமிடங்கள் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 79-வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் பகுதியில் பந்தை வைத்த வீரர் அதை அடிக்காமல் நகர்ந்து வந்தார். இதனால் அவர் பந்தை அடிக்கமாட்டார் என்று பார்சிலோனா வீரர்கள் சற்று கவனத்தை சிதறவிட, மின்னல் வேகத்தில் திரும்பி வந்து பந்தை உதைத்தார்.



    அப்போது கோல் எல்லை அருகில் நின்றிருந்த ஒரிஜி அதை கோலாக்கினார். இதனால் லிவர்பூல் 4-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 11 நிமிடங்கள் போராடியும் பார்சிலோனாவால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டு லெக்கையும் கணக்கிட்டு லிவர்பூல் 4-3 என பார்சிலோனாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான முதல் லெக்கில் அஜாக்ஸ் 1-0 என வெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் இன்று நள்ளிரவு நடக்கிறது.
    2018-19 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு அறிவிக்கப்படும் பிரிமீயர் லீக் கால்பந்து அணியில் பால் போக்போவிற்கு இடம் கிடைத்துள்ளது. #PremierLeague
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு நடைபெறும் உலகின் மிகப்பெரிய தொடர்களில் ஒன்று இங்கிலீஷ் பிரிமீயர் லீக். இதில் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் உள்பட பல முன்னணி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கொண்டு பிரிமீயர் லீக் அணி அறிவிக்கப்படும். இந்த அணியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரரான பால் போக்பா இடம் பிடித்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணியைத் தவிர்த்து இடம் பிடித்த ஒரே வீரர் இவர்தான்.

    பிரிமீயர் லீக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), 2. டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு (லிவர்பூல்), 3. விர்ஜில் வான் திஜ்க் (லிபர்பூல்), 4. அய்மெரிக் லபோர்ட் (மான்செஸ்டர் சிட்டி), 5. ஆண்டி ராபர்ட்சன் (லிபர்பூல்), 6. பால் போக்பா (மான்செஸ்டர் யுனைடெட்). 7. பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), 8. பெர்னாண்டினோ (மான்செஸ்டர் சிட்டி), 9. செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி). 10. ரஹீம் ஸ்டெர்லிங் (மான்செஸ்டர் சிட்டி), 11. சாடியோ மானே (லிவர்பூல்).
    ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதியின் முதல் லெக்கில் பார்சிலோனா, டோட்டன்ஹாம், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #UCL
    ஐரோப்பா நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெறும். 2018-19 சீசனில் பார்சிலோனா, யுவான்டஸ், அஜாக்ஸ், போர்ட்டோ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹாம், லிவர்பூல் காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதியின் முதல் லெக் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் இடையிலான ஆட்டத்தில் டோட்டன்ஹாம் 1-0 என வெற்றி பெற்றது.



    லிவர்பூல் - போர்ட்டோ இடையிலான ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் - அஜாக்ஸ் இடையிலான ஆட்டம் 1-1 என டிரா ஆனது. பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் இடையிலான ஆட்டத்தில் பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் எவர்டனை 2-0 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. #EPL
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி எவர்டன் அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேரத்தின் கூடுதல் நேரத்தில் (45+2) மான்செஸ்டர் சிட்டி அணியின் லபோர்ட்டே கோல் அடித்தார். இதனால் 1-0 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்தில் 90 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்தின் 7-வது நிமிடத்தில் கேப்ரியல் ஜீசஸ் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-0 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 26 போட்டிகளில் 20 வெற்றி, நான்கு தோல்விகள் மூலம் 62 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. லிவர்பூல் 25 போட்டிகளில் 19 வெற்றி, ஒரு தோல்வியுடன் 62 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

    டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 57 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செல்சி 50 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 48 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
    எகிப்து நாட்டைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரரான முகமது சாலா, தொடர்ந்து 2-வது முறையாக தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    எகிப்து நாட்டின் கால்பந்து வீரர் முகமது சாலா. இவரின் அபார ஆட்டத்தால் எகிப்து அணி ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதனால் 2017-ம் ஆண்டுக்கான தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை முதன்முறையாக தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் தற்போது 2-வது முறையாக தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார். விருது பெற்ற முகமது சாலா கூறுகையில் ‘‘நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த விருதை பெற வேண்டும் என்பது கனவாக இருந்தது. தற்போது இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளேன். இந்த விருதை எகிப்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    கால்பந்து லீக் கோப்பை தொடரில் ஈடன் ஹசார்டின் அபார கோலால் லிவர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது செல்சி. #LiverPool #Chelsea
    கால்பந்து லீக் கோப்பை 3-வது சுற்றில் லிவர்பூல் - செல்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

    ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் கோல் அடித்தார். 79-வது நிமிடத்தில் செல்சி அணியின் எமர்சன் பால்மியெரி கோல் அடிக்க 1-1 ஸ்கோர் சமநிலைப் பெற்றது. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் ஈடன் ஹசார்டு கோல் அடிக்க செல்சி 2-1 என வெற்றி வெற்றி பெற்றது.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் டிசர்ட் விளம்பரங்கள் மூலம் இந்த சீசனில் 625 மில்லியன் பவுண்டு வருவாய் ஈட்டியுள்ளன. #EPL
    ஐரோப்பா நாடுகளில் கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் கால்பந்து தொடர்கள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ, பண்டேஸ்லிகா போன்ற தொடர்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளன.



    இதில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் ரசிகர்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முன்னணி வகிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் ஆகிய முக்கியமான அணிகளில் ஒன்று. ஒவ்வொரு அணி வீரர்களும் அணி டிசர்ட்டில் விளம்பரங்கள் இடம்பெறும். இதற்காக ஒவ்வொரு கம்பெனிகளும் கோடிக்கணக்கில் பணம் செலுத்துகின்றன.



    இதனடிப்படையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கிளப் அணிகள் 625 மில்லியன் பவுண்டுகள் வருமான ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இது 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.



    2015-16 சீசனில் 437.8 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. தற்போது 187 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 624.8 மில்லியனாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சட்டையின் விலை 49.45 பவுண்டுகளில் இருந்து 52.09 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

    அடிடாஸ் நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வருடத்திற்கு 75 மில்லியன் பவுண்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. செவ்ரோலெட் 47 மில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது.

    மான்செஸ்டர், அர்செனல், செல்சி அணிகள் டிசர்ட்டின் கைப்பகுதியில் விளம்பரங்களுக்கு தலா 10 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது. மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் 5 மில்லியன் பவுண்டுகள் வாங்குகிறது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 3-2 என வீழ்த்தியது லிவர்பூல். #ChampionsLeague #PSG #LiverPool
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது.

    இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.



    ஒரு ஆட்டத்தில் குரூப் ‘சி’யில் இடம்பிடித்துள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - லிவர்பூல் அணிகள் மோதின. இரண்டு முன்னணி அணிகள் மோதியதால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக அமைந்தது.

    ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஜேம்ஸ் மில்னர் கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    லிவர்பூல் அணிக்கு பதிலடியாக பிஎஸ்ஜி அணியின் தாமஸ் மெயுனியர் 40-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் கிலியான் மப்பே கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலை ஆனது.

    90 நிமிடம் வரை இதே ஸ்கோர் நிலவியதால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் ரொபெர்ட்டோ ஃபேர்மினோ கோல் அடிக்க லிவர்பூல் த்ரில் வெற்றி பெற்றது.
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் கிரிஸ்டல் பேலஸ் அணியை 2-0 என வீழ்த்தியது. மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்தது. #EPL #ManUtd #LFC
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பிரைட்டன் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-2 வீழ்த்தி பிரைட்டன் அதிர்ச்சி அளித்தது.

    ஆட்டத்தின் 25-வது மற்றம் 27-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தது பிரைட்டன். அதன்பின் 34-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லூகாகு ஒரு கோல் அடித்தார். என்றாலும் பிரைட்டன் அணி 44-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் பிரைட்டன் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் இரண்டாவது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி போக்பா கோல் அடித்தார். இதனால் பிரைட்டன் 3-2 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.



    நேற்றி நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஜேம்ஸ் மில்னர் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 93-வது நிமிடத்தில் (இன்ஜூரி நேரம்) சேடியோ மானே கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது. மான்செஸ்டர், லிவர்பூல் அணிகள் தாங்கள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரின் 2018-19 சீசன் முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #EPL
    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் 2018-19 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - லெய்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பால் போக்பா முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 83-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லூக் ஷா மற்றொரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் 90 நிமிடம் வரை லெய்செஸ்டர் சிட்டி அடிக்கவில்லை. இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் வார்டி ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.



    மற்றொரு ஆட்டத்தில் செல்சி - ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணிகள் மோதின. இதில் செல்சி 3-0 என வெற்றி பெற்றது. கான்டே 34-வது நிமிடத்திலும், ஜார்ஜினோ (பெனால்டி) 45-வது நிமிடத்திலும், பெட்ரோ 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    முன்னணி அணிகளான மான்செஸ்டர், செல்சி, லிவர்பூல் அணிகள் வெற்றியோடு தொடரை தொடங்கியுள்ளது.
    ×