search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி இந்தியா"

    • இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று தோல்வி பக்கமே செல்லாமல் வீறுநடை போட்ட இந்திய அணி கோப்பையை 2-வது முறையாக வென்று அசத்தியது. ஏற்கனவே 2016-ம் ஆண்டில் வென்றிருந்தது.

    சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளைப் பாராட்டிய ஹாக்கி இந்தியா அமைப்பு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் நெதர்லாந்து அணி உலகின் சிறந்த மகளிர் ஹாக்கி அணியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், அர்ஜெண்டினா அணி 3-வது இடத்திலும், பெல்ஜியம் அணி 4-ம் இடத்திலும், ஜெர்மனி மகளிர் ஹாக்கி அணி 5-ம் இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியுள்ளது. இதில் உலகத் தரவரிசையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 6-ம் இடம் பிடித்துள்ளது.

    இந்திய அணி இப்போது 83 தரவரிசைப் புள்ளிகளுடன், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு இந்திய மகளிர் அணி 8-வது இடத்தில் இருந்தது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது மட்டுமின்றி இறுதிவரை எந்த ஆட்டத்திலும் தோற்காமல் இருந்தது ஆகியவற்றின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளது.

    • இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
    • இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி 4-வது முறையாக பட்டம் வென்றுள்ளது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 2771.35 தரநிலைப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

    இந்த பட்டியலில் 3095.90 புள்ளிகளுடன் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் (2917.87) இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து, இங்கிலாந்து நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா ஆறாவது இடத்தில் உள்ளது. 7 முதல் 10வது இடங்களை ஸ்பெயின், அர்ஜென்டினா, மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன.

    • இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் திரில்லிங்கான ஆட்டத்தைப் பார்த்தேன்! இடைவேளை நேரத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மென் இன் ப்ளூ, 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-3 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. அது போட்டியின் கடைசி நேரம் வரை எங்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருந்தது. இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
    • இதன்மூலம் இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது இந்தியாவின் 4-வது வெற்றியாகும். இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • முதல் பாதியில் மலேசியா 3-1 என முன்னிலை வகித்தது.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 3 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 3 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.
    • ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் மலேசியாவை வீழ்த்தி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.

    இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளார் என்றும், அனுராக் தாகூர் இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது.

    ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 5 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது.

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
    • இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    முன்னதாக, மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமிளிக்கிறது என தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தொடர்ச்சியான வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. விளையாடும் போது கார்த்திக் கார்த்திக் என்று சொல்லும் போது உத்வேகமாக இருந்தது. அடுத்தடுத்து இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்தது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இதன் மூலம் 13 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 18-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 4 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    • முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    முதல் போட்டியில் மலேசியா சீனாவை 5-1 என வீழ்த்தியது. கொரியா, பாகிஸ்தான் இடையிலான 2வது போட்டி சமனில் முடிந்தது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில், 1-1 என போட்டி சமனில் முடிந்தது.

    ×