search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Cup Cricket Tournament"

    • 13, 18, 23, மற்றும் 27 ஆகிய 5 நாட்கள் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • சிந்தாதிரிப் பேட்டையில் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரிக்கு சென்றடையும்.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நாளை வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுவதையொட்டி நாளை (8-ந் தேதி) 13, 18, 23, மற்றும் 27 ஆகிய 5 நாட்கள் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    வேளச்சேரியில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், கோட்டூர்புரம், கிரீன்வேஸ் ரோடு, மந்தைவெளி, திருமயிலை, முண்டகக்கன்னி அம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வழியாக சிந்தாதிரிப் பேட்டைக்கு இரவு 11.15 மணிக்கு வந்து சேரும்.

    இதேபோல சிந்தாதிரிப் பேட்டையில் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு வேளச்சேரிக்கு சென்றடையும். கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் வசதியை 5 நாட்களுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.

    ×