search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல் மாட்ரிட்"

    • பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
    • தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் கால்பந்து வீரர் ஷினேடின் ஷிடேன் அறிவித்துள்ளார். #ZinedineZidane #RealMadrid
    உலகின் மிகச்சிறந்த கால்பந்து அணியாக ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணி திகழ்ந்து வருகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கால்பந்து வீரர் ஷினேடின் ஷிடேன் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக மூன்று சாம்பியன்ஸ் கோப்பைகளை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியது. லா லிகா தொடரிலும் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. இதற்கு ஷிடேன் முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்நிலையில், ஷிடேன் தனது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய ஷிடேன், பதவியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் விலகுவது தான் அனைவருக்கும் நல்லது.


    இது என்னுடைய முடிவு. நான் தலைமை பயிற்சியாளர் பதவியை மேலும் நீட்டிக்க இருந்தது உண்மை தான். அது என்னுடைய தவறு. அணியில் மாற்றம் தேவைப்படுகிறது. இது தான் சரியான நேரம். ஷிடேயின் முடிவு பலருகு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிடேன் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. #ZinedineZidane #RealMadrid
    ×