என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க வேண்டும் என கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
‘கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் 30-ந்தேதி வரை தங்கள் நாட்டில் வெளிநாட்டினர் நுழைய ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் அது கடினம் என்றே தோன்றுகிறது. அதே சமயம் அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டால், அத்துடன் இந்தியாவில் கொரோனா தாக்கம் சீரடையும் பட்சத்தில் இவ்விரு உலக கோப்பை போட்டிகளையும் மாற்றிக் கொள்ளலாம்.
அதாவது இந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக போட்டி இந்தியாவிலும், அடுத்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட வேண்டும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவும் வாய்ப்பு உண்டு. இது உலக கோப்பை போட்டிக்கு வீரர்களுக்கு போதுமான பயிற்சியாக அமையும். இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை டிசம்பர் மாதத்தில் நடத்திக் கொள்ளலாம்’. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
‘கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் 30-ந்தேதி வரை தங்கள் நாட்டில் வெளிநாட்டினர் நுழைய ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் அது கடினம் என்றே தோன்றுகிறது. அதே சமயம் அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டால், அத்துடன் இந்தியாவில் கொரோனா தாக்கம் சீரடையும் பட்சத்தில் இவ்விரு உலக கோப்பை போட்டிகளையும் மாற்றிக் கொள்ளலாம்.
அதாவது இந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக போட்டி இந்தியாவிலும், அடுத்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட வேண்டும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவும் வாய்ப்பு உண்டு. இது உலக கோப்பை போட்டிக்கு வீரர்களுக்கு போதுமான பயிற்சியாக அமையும். இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை டிசம்பர் மாதத்தில் நடத்திக் கொள்ளலாம்’. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
கொரோனா வைரஸ் நம்மை மேலும் இரக்கம் உள்ளவர்களாக்கியுள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்த தொற்றில் இருந்து எப்போது மீள்வது என்பதே எல்லோருடைய கேள்விக்குறியும்.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்துவருகிறார்கள். அதேபோல் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னின்று எதிர்கொண்டு வருகிறார்கள். இவர் இல்லை என்றால் கொரோனாவை தடுப்பது மிகவும் சிரமமே...
விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கியுள்ளனர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி ஆகியோர் அகாடமி அல்லாத அமைப்பு ஒன்று ஆன்லைன் மூலம் கிளாஸ் எடுத்து வருகிறது. இதில் விராட் கோலி கலந்து கோண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த இக்கட்டான நிலையிலும் ஒரு நேர்மறையான விஷயம் என்வென்றால், சமூகமாகிய நாம் மேலும் இரக்கம் உள்ளவர்களாகி உள்ளோம். கொரோனாவுக்கு எதிராக போரை முன்னின்று எதிர்கொண்டு வரும் டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார்கள் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை முடிந்த பின்னரும் இது தொடரும் என்று நம்புகிறேன்.
வாழ்க்கை கணிக்க முடியாதது. ஆகவே, உங்களுக்கு மகிழ்ச்சி தருவதை செய்யுங்கள். எல்லா நேரங்களிலும் ஒப்பிடுகையில் ஈடுபடாதீர்கள். இந்தக் கட்டத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்து மக்கள் தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கப் போகிறது.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
‘‘இவை அனைத்திலும் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் உள்ளது. காரணம் இல்லாமல் ஏதும் நடக்காது. முன்னின்று செயல்படும் நபர்கள் இல்லையென்றால், நாம் எதையும் அணுக முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
யாரையும் விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பது இந்த கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. ஒரு சமூகமாக நாம் தற்போது அதிக அளவில் இணைந்துள்ளோம்’’ அனுஷ்கா சர்மா தெரிவித்தார்.
ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து அணியான பார்சிலோனா, கொரோனா தடுப்புக்கு நிதி திரட்ட தனது மைதானத்தின் பெயரை விற்க முடிவு செய்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்த லீக் லா லிகா. இந்த லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று பார்சிலோனா. இந்த அணியில்தான் உலகின் தலைசிறந்த வீரரான மெஸ்சி விளையாடி வருகிறார்.
கேட்டலானில் பார்சிலோனாவுக்கு சொந்தமான கேம்ப் நௌ மைதானம் உள்ளது. இந்த மைதானம் 1957-ல் கட்டப்பட்டது. அந்த நாளில் இருந்து தற்போது வரை டைட்டில் ஸ்பான்சருக்கு விட்டதில்லை. கேம்ப் நவ் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயின் அதிக அளவில் பாதித்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்புக்கு நிதி திரட்டுவதற்காக கேம்ப் நௌ பெயரை ஸ்பான்சருக்கு விற்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு கேம்ப் நொள என்பதற்கு பதிலாக தங்களது நிறுவனங்களின் பெயரை ஸ்பன்சர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘‘டைட்டில் உரிமம் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும்’’ என பார்சிலோனா கிளப்பின் தலைமை நிர்வாகி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 99 ஆயிரம் ரசிகர்கள் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பது குறிப்படத்தக்கது.
அறிமுகம் ஆன காலத்தில் பேட்ஸ்மேன்கள்தான் விக்கெட்டுகளை கொடுப்பார்கள் என்று ஸ்ரீகாந்த் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார் இர்பான் பதான்.
இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இர்பான் பதான். 35 வயதாகும் இவர் 2003-ம் ஆண்டு 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2012-ம் ஆண்டு விளையாடிய பின், கடந்த வருடம் ஓய்வு பெற்றார்.
2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு டெஸ்டில் அறிமுகம் ஆனார். புதுப்பந்தை ஸ்விங் செய்யும் திறமையை பெற்றிருந்ததால் இளம் வயதிலேயே புகழ்பெற தொடங்கினார். பேட்டிங் திறமையும் பெற்றிருந்ததால், அடுத்த கபில்தேவ் என்று பேசப்பட்டார். ஆனால் காயம் மற்றும் சில காரணங்களால் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் 28 வயதிலேயே அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இவர் இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருக்கும்போது ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவில் இடம் பிடித்திருந்தார். அப்போது அவர் கூறிய கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘ஆதரவு தேவையில்லை. நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், ஏராளமானோர் போதுமான ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது என்பது குறித்து பேசுவார்கள். ஆனால், எனக்கு தகுதிக்கு உண்டான எல்லாவற்றையும் பெற்றேன்.
நான் கடைசியாக 2012-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விளையாடினேன். அந்த போட்டியில் நான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதன்பின் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
நான் விளையாடிய காலத்தை திரும்பிப் பார்க்கும்போது நான் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளதாக நினைக்கிறேன். உங்களுடைய கடைசி போட்டியை 27 வயதில் முடித்தீர்கள் என்றால், 35 வயதில் எந்த வகையில் சாதனைப்படைத்திருக்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதை நான் செய்ததாக நினைக்கிறேன்.

தேர்வாளர்கள் என்னை நீக்குவது குறித்து ஏதும் கூறவில்லை. நான் விளையாடும்போது தேர்வுக்குழுவில் இருந்த ஸ்ரீகாந்த சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன். இர்பான் பதான் விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை. பேட்ஸ்மேன்கள் அவர்களது விக்கெட்டுகளை கொடுக்கிறார்கள் என்றார். அவர் எதனடிப்படையில் அவர் அப்படி பேசினார் என்று என்னால் புரிந்து கொள்ளவில்லை.
வீரர்களை தேர்வு செய்யாததற்கான காரணத்தை கூறுவதற்கான கேலிக்கூத்தான கருத்து அது. தேர்வாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையில் உதவ எவ்வளவு கம்யூனிகேசன் தேவை என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்கும் முடிவில் இங்கிலாந்து உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான விளையாட்டு போட்டிளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வர நீண்ட காலமாகும் என அஞ்சப்படுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மாதம் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றிருந்தது. ஆனால் கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக பயிற்சி ஆட்டத்தை பாதிலேயே நிறுத்திக் கொண்டு சொந்த நாடு திரும்பியது.
இங்கிலாந்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ந்து விளையாட இருக்கிறது. ஆனால் கொரோனா வைரசால் இந்தத் தொடர்கள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கொண்ட ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர்கள் ஜூலை மாதம் 3-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில் நடைபெற சாத்தியமில்லை. ஒருவேளை குறிப்பிட்ட போட்டி அட்டவணைக்குள் நடைபெறாவிடில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை நடத்த முடியும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
ஆறு போட்டிகளையும் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடத்தும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு புதிய தேதியை முன்வைத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிருக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மிக்கி ஆர்தர் சொல்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். ஐசிசி-யின் சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.
கடந்த வருடம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முகமது அமிர் அவரது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால், முகமது அமிர் அவரது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முகமது அமிரை ஓரங்கட்ட ஆரம்பித்தது.
மிஸ்பா-உல்-ஹக் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் பதவி ஏற்றபின் முகமது அமிருக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்கவில்லை.
டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் - நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் முகமது அமிருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முகமது அமிர் இல்லாமல் பாகிஸ்தான் செல்வதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் அவரை அணியில் இருந்து தூக்கினால், உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை நீங்கள் தியாகம் செய்ய வேண்டிய சாத்தியக்கூறுகள் உள்ளது.
அமிர் டாப்-கிளாஸ் பந்து வீச்சாளர், மேட்ச் வின்னர். அவரது பந்து வீச்சை நாம் விரும்பி பார்ப்பேன். ஆனால், ஒயிட்-பால் கிரிக்கெட்டின் கேரியரை நீட்டிப்பதற்காகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
மேட்ச்-பிக்சிங் குறித்து வாசிம் அக்ரம் என்னிடம் பேசியிருந்தால், கொலைக்கூட செய்திருப்பேன் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணிகளில் ஒன்று பாகிஸ்தான். அந்த அணியின் வளர்ச்சி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மேட்ச்-பிக்சிங் விவகாரத்தாலும் அந்த அணியின் பெருமை குன்றியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த கேப்டன் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், முகமது ஆசிஃப் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்பட்டது.
ஐசிசி விசாரணை நடத்தி ஐந்து ஆண்டுகள் தடைவிதித்தது. முகமது அமிர் மட்டும் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச்-பிக்சிங் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் 1997 முதல் 2011 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.
இவர் நீண்ட காலம் வாசிம் அக்ரம் தலைமையின் கீழ்தான் விளையாடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் வாசிம் அக்ரம் மேட்ச்-பிக்சிங் குறித்து அணுகியிருந்தால் அவரை துவம்சம் செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘1990-களில் நான் சில போட்டிகளை பார்த்துள்ளேன் அதில் வாசிம் அக்ரம் தனது அற்புதமான பந்து வீச்சால் ஜெயிக்க முடியாது என்று நினைத்த போட்டியையும் பாகிஸ்தான் ஜெயிக்க உதவிகரமாக இருந்துள்ளார்.
ஒருவேளை வாசிம் அக்ரம் மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபடுமாறு என்னிடம் கூறியிருந்தால், அவரை துவம்சம் செய்திருப்பேன். அல்லது கொலைக்கூட செய்திருப்பேன். ஆனால் அவர் என்னிடம் ஒருபோதும் அதுகுறித்து பேசியது கிடையாது. இதை நான் எப்போதும் தெளிவாக கூறுவேன்.
நான் அவருடன் ஏழு முதல் எட்டு வருடங்கள் விளையாடியிருப்பேன். கடைநிலை வீரர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்த என்னிடம் விட்டபோதிலும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளையும் வீழ்த்தும் பொறுப்பிலும் என்னை சேர்த்துக் கொண்டார். அவருக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகள் இருந்தாலும் கூட என்னுடைய முதன்மை பந்து வீச்சை கருத்தில் கொண்டு பந்து வீச அனுமதித்தார்’’ என்றார்.
ஐபிஎல் தொடரின் தலைசிறந்த பந்து வீச்சாளர் யார் என்றால் அது மலிங்காதான் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் ஐபிஎல் 2020 சீசன் அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் சிறந்த நிகழ்வுகள் குறித்து பேசிவருகிறார்கள்.
ஸ்டார் போர்ட்ஸ் முன்னாள் வீரர்கள், வல்லூனர்களை கொண்டு நடத்திய கருத்துக் கணிப்பில் டோனி, ரோகித் சர்மா ஆகியோர் சிறந்த கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஐபிஎல்-லில் எல்லாக் காலக்கட்டத்திலும் சிறந்த பந்து வீச்சாளர் மலிங்காதான் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘என்னை பொறுத்த வரைக்கும் மலிங்காதான் சிறந்த பந்து வீச்சாளர். அவர் விளையாடிய போட்டிகளையும் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசியதையும் ஒவ்வொருவரும் கவனித்திருக்கலாம். மலிங்கா என்னுடைய பையன்.

நான் நரைன்-ஐத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில்தான் அவரால் விக்கெட் வீழ்த்த முடிந்தது. மேலும், அவரது பந்து வீச்சு குறித்து விமர்சனமும் எழுந்தது. அதனால் நரைன் பெயரை சொல்ல தயங்கினேன். மலிங்காவை தேர்வு செய்தேன்’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய அரசு மார்ச் மாதத்தில் இருந்து ஆறு மாதம் வரை நாட்டின் எல்லையை மூடிவிட்டது. இதனால் அந்த நாட்டில் செப்டம்பர் மாதத்திற்குப் பின்புதான் கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிந்து சகஜ நிலை எப்போது திரும்பும் என்று யாருக்கும் தெரியாது.
இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் கோடிக்கணக்கில் வருவாயை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் போட்டிகளை அடுத்தடுத்து வைத்து வருவாய்களை ஈட்ட திட்டமிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15 வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரும் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் 2020-21 சீசனின் கடைசி நேர போட்டிகளை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இந்தியா டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்கும் காலத்தில் இந்தத் தொடரை ஐந்து போட்டிகள் கொண்டதாக நடத்தினால் கூடுதலாக வருவாய் ஈட்டலாம் என ஆஸ்திரேலியா நினைக்கிறது. இதனால் தொடரை ஐந்து போட்டிள் கொண்டதாக நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ-யிடம் பேசி முடிவு எடுக்க இருக்கிறது.
இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1991-ல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என இந்திய நடைபந்தய வீரர் இர்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் நடைப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்று இருக்கும் 30 வயதான கேரளாவைச் சேர்ந்த தடகள வீரர் கே.டி. இர்பான் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
‘நடைப்பந்தயம் மிகவும் டெக்னிக்கலான போட்டியாகும். இதனை பார்க்க எளிதாக தெரியும். ஆனால் இந்த போட்டி மிகவும் கடினமானதாகும். உங்களது நுணுக்கம் தான் பதக்கம் வெல்ல உதவும். எனது பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்று இருப்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நம்பிக்கையான மனநிலையுடன் செல்வேன். கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஊரடங்கு உத்தரவு காலத்திலும் பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் உள்ளது. அதை சாதித்து காட்டுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.
அடுத்த ஆண்டு (2021) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் நடைப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்று இருக்கும் 30 வயதான கேரளாவைச் சேர்ந்த தடகள வீரர் கே.டி. இர்பான் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
‘நடைப்பந்தயம் மிகவும் டெக்னிக்கலான போட்டியாகும். இதனை பார்க்க எளிதாக தெரியும். ஆனால் இந்த போட்டி மிகவும் கடினமானதாகும். உங்களது நுணுக்கம் தான் பதக்கம் வெல்ல உதவும். எனது பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்று இருப்பதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நம்பிக்கையான மனநிலையுடன் செல்வேன். கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. ஊரடங்கு உத்தரவு காலத்திலும் பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் உள்ளது. அதை சாதித்து காட்டுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.
ஐபிஎல் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முரளீதரன் ஆபத்தாக முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த மாதம் 29-ந்தேதி முதல் மே மாதம் 24-ந்தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந்தேதிக்கு முதலில் ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்து இருந்தது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தப் போட்டியை நடத்த தயார் என்றும், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விரைவில் கடிதம் எழுதுவோம் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை இலங்கையில் நடத்துவது ஆபத்து என்று அந்நாட்டு முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முரளீதரன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐபிஎல் போட்டியை இலங்கையில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது. எனக்கு தெரிந்து இது ஒரு நிரந்தர தீர்வாகாது. முதலில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.
இலங்கையில் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இலங்கைக்கு வருவார்கள். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இது மிகப்பெரிய ஆபத்தை வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும்.
இவ்வாறு முரளீதரன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கும், ஐரோப்பிய கால்பந்து ஆட்டமும் ஒரு ஆண்டுக்கும் தள்ளி வைக்கப்பட்டது.
இதேப்போல பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸ் ரத்தானது. இதேபோல பல போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 30-ந்தேதி வரை வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா வர தடைவிதித்துள்ளது. இதனால் 20 ஓவர் உலக கோப்பையின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஆகஸ்ட் இறுதியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்கிறது. இது தொடர்பாக ஐ.சி.சி.யின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது;-
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் தற்போது இருண்ட நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது. மக்களின் உடல் நலமே எங்களுக்கு மிகவும் முக்கியம். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இப்போது எதுவும் சொல்ல முடியாது.
ஆகஸ்ட் இறுதியில் இது குறித்து ஐ.சி.சி. முடிவு செய்யும். ஆகஸ்ட் வரை எந்த முடிவும் எடுக்கமாட்டோம். திட்டமிட்ட தேதியில் போட்டியை நடத்துவதில்தான் நாங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசுக்கு 6612 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 71 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே தலைமை நிர்வாகக் குழுவினருடன் ஐ.சி.சி. வீடியோ கான்பரன்சிங் மூலம் வருகிற 23-ந்தேதி ஆலோசனை நடத்துகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் செயலாளர் ஜெய்ஷா காணொளியில் பங்கேற்பார். எதிர்கால போட்டிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.






