search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irfan"

    • யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) கார் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர், காவல் நிலையத்தில் இருந்து இர்பானின் வாகனம் விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி இரவு புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்த 55 வயதாகும் பத்மாவதி அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.


    உயிரிழந்த பத்மாவதி - இர்பான்

    உயிரிழந்த பத்மாவதி - இர்பான்

    அப்போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த இர்பானின் சொகுசு கார் பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதில், காரை ஓட்டி வந்த இர்ஃபானின் உறவினர் அசாரூதின் மீது போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், விபத்தின் போது யூடியூபர் இர்ஃபானும், அவரது மனைவியும் காரில் இருந்தது தெரியவந்தது. இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட இர்பானின் சொகுசு காரை, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டது.


    இர்பான்

    இர்பான்

    இந்நிலையில், முறையான ஆவணங்களை போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஒப்படைக்காததால், இர்பானின் சொகுசு கார் மீண்டும் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) கார் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் பரிசோதனை முடிந்த பின்னர், காவல் நிலையத்தில் இருந்து இர்பானின் வாகனம் விடுவிக்கப்படும் என கூறப்படுகிறது.

    • யூடியூபரான இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியானார்.
    • இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு கோனாதியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பும் போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.


    பத்மாவதி -இர்பான்

    இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது.

    மேலும், இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக 304 (ஏ) என்ற பிரிவின் கீழ் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் இர்பானின் மைத்துனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், இர்பானின் காரை பறிமுதல் செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கூடுவாஞ்சேரி போலீசார் உரிய ஆவணங்களை ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்காததால் அதிகாரிகள் காரை திருப்பியனுப்பியுள்ளனர். தற்போது காரானது மீண்டும் போலீஸ் நிலையத்திற்கே வந்துள்ளது.

    • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
    • இர்பான் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் பலியானார்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு கோனாதியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பும் போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.


    பத்மாவதி -இர்பான்

    இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது.

    தொடந்து இந்த காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த காரில் யூ டியூபர் இர்பான் பயணம் செய்து வந்ததாக கூறப்பட்டதையடுத்து தற்போது இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 304 (ஏ) என்ற பிரிவின் கீழ் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இர்பானின் மைத்துனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
    • இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.


    பத்மாவதி -இர்பான்

    இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்றிரவு யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று மோதி 55 வயதான பத்மாவதி என்ற மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    இயக்குநர் சேரன் சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், அவர் நடித்துள்ள புதிய படமொன்றில் 3 நாயகிகள் சேரனுக்கு செக் வைக்கின்றனர். #RajavukkuCheck #Cheran
    இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என திரையுலகுக்கு திரும்பியிருக்கிறார். ஒருபக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் ஏற்கனவே ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கியவர். ‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகை சேர்ந்த சராயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.



    சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். #RajavukkuCheck #Cheran

    ×