என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நம்மை மேலும் இரக்கம் உள்ளவர்களாக ஆக்கியுள்ளது: விராட் கோலி
Byமாலை மலர்21 April 2020 4:44 PM GMT (Updated: 21 April 2020 4:44 PM GMT)
கொரோனா வைரஸ் நம்மை மேலும் இரக்கம் உள்ளவர்களாக்கியுள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்த தொற்றில் இருந்து எப்போது மீள்வது என்பதே எல்லோருடைய கேள்விக்குறியும்.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்துவருகிறார்கள். அதேபோல் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னின்று எதிர்கொண்டு வருகிறார்கள். இவர் இல்லை என்றால் கொரோனாவை தடுப்பது மிகவும் சிரமமே...
விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கியுள்ளனர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி ஆகியோர் அகாடமி அல்லாத அமைப்பு ஒன்று ஆன்லைன் மூலம் கிளாஸ் எடுத்து வருகிறது. இதில் விராட் கோலி கலந்து கோண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த இக்கட்டான நிலையிலும் ஒரு நேர்மறையான விஷயம் என்வென்றால், சமூகமாகிய நாம் மேலும் இரக்கம் உள்ளவர்களாகி உள்ளோம். கொரோனாவுக்கு எதிராக போரை முன்னின்று எதிர்கொண்டு வரும் டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார்கள் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை முடிந்த பின்னரும் இது தொடரும் என்று நம்புகிறேன்.
வாழ்க்கை கணிக்க முடியாதது. ஆகவே, உங்களுக்கு மகிழ்ச்சி தருவதை செய்யுங்கள். எல்லா நேரங்களிலும் ஒப்பிடுகையில் ஈடுபடாதீர்கள். இந்தக் கட்டத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்து மக்கள் தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கப் போகிறது.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
‘‘இவை அனைத்திலும் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் உள்ளது. காரணம் இல்லாமல் ஏதும் நடக்காது. முன்னின்று செயல்படும் நபர்கள் இல்லையென்றால், நாம் எதையும் அணுக முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
யாரையும் விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பது இந்த கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. ஒரு சமூகமாக நாம் தற்போது அதிக அளவில் இணைந்துள்ளோம்’’ அனுஷ்கா சர்மா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X