என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் கனிகா கன்வால், சமியா இமாத் பரூகி ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
    லக்னோ:

    சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி வரும் 23-ம்  தேதி வரை நடக்கிறது.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.

    27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21 - 9, 21 - 9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நெருக்கடியாக கடைசிகட்டத்தில் கடுமையாக போராடிய ஷர்துல் தாக்கூர் 43 பந்துகளில், 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன்கள் குவித்தார்.
    பார்ல்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 296 ரன்கள் குவித்தது. கேப்டன் டெம்பா பவுமா 110 ரன்களும், ராசி வான் டெர் டுசன் 129 ரன்களும் விளாசினர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும்  வீழ்த்தினர். 

    இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, முதலில் கவனமாக ஆடி ரன் சேர்த்தது. துவக்க வீரர் கே.எல்.ராகுல் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தபோதும், ஷிகர் தவான்- விராட் கோலி இருவரும் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். தவான் அரை சதம் கடந்து, தனது ஆட்டத்தை தொடர்ந்தார். 

    அரை சதம் அடித்த விராட் கோலி

    அணியின் ஸ்கோர் 138 ஆக இருந்த நிலையில் இந்த ஜோடியை மகராஜ் பிரித்தார். அவரது ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் மொத்தம் 84 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 152.

    அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிரடியாக ஆடத் தவறியதால் ரன்ரேட் வெகுவாக சரிந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன. நெருக்கடியாக கடைசிகட்டத்தில் கடுமையாக போராடிய ஷர்துல் தாக்கூர் பவுண்டரியாக விளாசினார். எனினும், இந்திய அணியால், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 265 ரன்களே எடுக்க முடிந்தது. ஷர்துல் தாக்கூர் 43 பந்துகளில், 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன்கள் (அவுட் இல்லை) குவித்தார். பும்ரா 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து உள்ளூர் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் தென் ஆப்பிரிக்க அணி ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. 
    2021ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா மட்டும் இடம்பெற்றுள்ளார்.
    துபாய்:

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அடிப்படையில், 2021ம் ஆண்டின் சிறந்த டி20 அணியின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், 11 பேர் கொண்ட ஆடவர் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் வீர‌ர் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அந்த அணியில் இருந்து பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகீன் அப்ரிடி ஆகிய 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ரிஸ்வான் 1326 ரன்களும், பாபர் அசாம் 939 ரன்களும் சேர்த்துள்ளனர்.

    தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் 4ம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஐசிசி அணியின் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீர‌ர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.

    ஐசிசி ஆடவர் அணி:

    பாபர் அசாம் (கேப்டன்), ஜோஸ் பட்லர், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்சி, ஜோஷ் ஹேசில்வுட், வனிது ஹசரங்கா, முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஷாகீன் அப்ரிடி

    இதேபோல் ஐசிசி பெண்கள் டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மட்டுமே இந்தியர் ஆவார். அவர் 9 போட்டிகளில் 255 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் டாப்-5 பட்டியலில் இடம் பிடித்தார். பெண்கள் அணிக்கு நாட் ஸ்கிவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    பெண்கள் அணி:

    நாட் ஸ்கிவர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, டாமி பியூமண்ட், டேனி வியாட், கேபி லூயிஸ், எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), லாரா வால்வார்ட், மேரிசான் கேப், சோஃபி எக்லெஸ்டோன், லோரின் ஃபிரி, ஷப்னிம் இஸ்மாயில்.
    கேப்டன் டெம்பா பவுமா- ராசி வான் டெர் டுசன் ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
    பார்ல்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    காயம் காரணமாக ரோகித் சர்மா இடம்பெறாததால் அவருக்கு பதில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்கினார். 

    மார்க்ராம் ரன்அவுட்

    தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் மலன் 6 ரன்களிலும், குயின்டன் டி காக் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ராம் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால், கேப்டன் டெம்பா பவுமா- ராசி வான் டெர் டுசன் ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

    அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. டெம்பா பவுமா 110 ரன்கள் சேர்த்தார். ராசி வான் டெர் டுசன் 129 ரன்களுடனும், டேவிட் மில்லர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும்  வீழ்த்தினர். 

    இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2022 டென்னிஸ் சீசன் முடிவில் அவர் டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து விடைபெற உள்ளதாக  கூறியிருக்கிறார்.

    டென்னிஸ் விளையாட்டின் முன்னணி வீராங்கனையாக வலம் வந்த சானியா மிர்சா, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றுடன் வெளியேறினார். முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு தனது ஓய்வு திட்டம் பற்றி அறிவித்தார். 

    சானியா மிர்சா

    அவர் கூறுகையில், “நான் ஓய்வு பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. இனி நான் விளையாடப் போவதில்லை என்பது போல் இது எளிமையானது அல்ல. நான் காயமடைந்தால் குணமடைந்து உடற்தகுதி பெற அதிக காலம் ஆகிறது. மேலும், எனது 3 வயது மகனுடன் அதிக நேரம் பயணம் செய்வதன் மூலம் அவனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அதையும் நான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். என் உடல் சோர்வாக இருக்கிறது. இன்று என் முழங்காலில் அதிக வலி இருக்கிறது. இன்று நாங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் வயதாகிவிட்டதால் குணமடைய அதிக காலம் ஆகிறது என நினைக்கிறேன்” என்றார்.

    நடப்பு ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா, அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுகிறார்.  முதல் சுற்று நாளை நடக்கிறது.

    சானியா மிர்சா இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவர் மகளிர் இரட்டையர் தரவரிசையின் உச்சநிலையை எட்டியுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். சானியாவின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட்டுக்கு 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி முதலில் 20 ஓவரில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவரது இந்த முடிவு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

    இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரி‌ஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக தேர்வு குழுவினர் கூறும்போது, இந்திய டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்வதற்கான காலம் இன்னும் இருக்கிறது என்று தெரிவித்தனர். முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் இந்திய டெஸ்ட் அணிக்கு ரி‌ஷப்பண்டை கேப்டனாக நியமிக்கலாம் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா அல்லது அஸ்வினை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது இருந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தேன். எல்லோரும் டோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தனர். குறுகிய காலத்துக்காக நாங்கள் கும்ப்ளேவை தேர்வு செய்தோம். அவரும் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.

    அதே மாதிரி தற்போது ரோகித் சர்மா அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒரு வரை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம்.

    கேப்டன் பதவியால் விராட் கோலியின் பேட்டிங் திறமை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை நான் ஏற்கவில்லை. கேப்டன் ஷிப்பால் அவரது பேட்டிங் பாதிக்கவில்லை. இதற்கான புள்ளி விவரங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தென் ஆப்பிரிக்க தொடரில் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அர்ப்பணிப்பு உணர்வோடு அவர் விளையாடினார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சதம் அடிக்காதது உண்மைதான். ஆனால் அவர் சிறப்பான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தி வந்தார்.

    இவ்வாறு திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

    வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார்.
    பார்ல்:

    இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    காயம் காரணமாக ரோகித் சர்மா இடம்பெறாததால் அவருக்கு பதில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

    இன்றைய அணியில் கே.எல் ராகுல், தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவிசந்திரன் அஸ்வின், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளார்.
    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துடன் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டி கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறும் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 24-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

    முதல் போட்டி 30-ந் தேதி பெர்த்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ந் தேதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5-ந் தேதி சிட்னியிலும், 20 ஓவர் ஆட்டம் பிப்ரவரி 8-ந் தேதி கான்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் விவாதித்து, முடிவெடுத்து இந்த தகவலை இன்று தெரிவித்தன.

    இந்த போட்டி தொடர் எப்போது நடைபெறும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஆஸ்திரேலிய அணி இலங்கையுடன் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 11-ந் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இந்த 20 ஓவர் தொடரும் ஒத்தி வைக்கப்படுமா? என்பது பின்னர் தெரியவரும்.

    குரூப் பி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    தரவுபா:

    14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

    இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இந்தியா, அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா, உகாண்டா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

    கடந்த ஜனவரி 15-ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் யாஷ் தல் தலைமையிலான இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.

    குரூப் பி தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    பார்ல்:

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் இன்று நடக்கிறது.

    லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    ஒயிட் பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாததால் கே.எல்.ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி எல்லாவகையிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    டெஸ்ட் தொடரை வென்றதுபோல் ஒருநாள் தொடரையும் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.

    இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்டி முர்ரே நீண்ட போராட்டத்துக்குப் பிறகே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவ் 6-1, 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் ஹென்றி லாக்சோனெனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை 6-1, 3-6, 6-4, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெளியேற்றினார். சுமார் 3 மணி 52 நிமிடங்கள் நீடித்த போராட்டத்தில் ஆன்டி முர்ரே வெற்றி பெற்றார்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் மெண்டிஸ், ஷனகா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 118 ரன்களை சேர்த்தது.
    பல்லெகலே:

    ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லெகலேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்தது. எர்வின் 91 ரன்னும், சிக்கந்தர் ரசா 56 ரன்னும் எடுத்தனர். சீன் வில்லியம்ஸ் 48 ரன்னும், சகாப்வா 47 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இலங்கை சார்பில் ஜெப்ரி வாண்டர்சே 3 விக்கெட்டும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 63 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அடுத்து இறங்கிய தாசன் ஷனகா நிதானமாக ஆடி சதமடித்தார். மெண்டிஸ் அரை சதமடித்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. மெண்டிஸ் 57 ரன்னில் அவுட்டானார். தாசன் ஷனகா சதமடித்து 102 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

    ஜிம்பாப்வே சார்பில் சதாரா, முசாபராபானி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜிம்பாப்வே வீரர் கிரெய்க் எர்வினுக்கு வழங்கப்பட்டது.

    ×