search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் உலகக் கோப்பை"

    • முதலில் ஆடிய இந்தியா 297 ரன்கள் குவித்தது.
    • இதில் இந்திய வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர்.

    புளோம்பாண்டீன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 214 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. சச்சின் தாஸ் 116 ரன்னும், உதய் சஹாரன் 100 ரன்னும் குவித்தனர்.

    நேபாள அணி சார்பில் குல்சன் ஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நேபாளம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்தியா சார்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×