என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் உலகக் கோப்பை"
- 18 வயதான ஆர்யன் இடக்கை பேட்ஸ்மேன்.
- ஜான் ஜேம்ஸ் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆவார்.
மெல்போர்ன்:
16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன. 5 முறை சாம்பியனான இந்தியா 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. அயர்லாந்து, ஜப்பான், இலங்கை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆலிவர் பீக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் ஆர்யன் ஷர்மா, ஜான் ஜேம்ஸ் ஆகிய இரு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
18 வயதான ஆர்யன் இடக்கை பேட்ஸ்மேன். சுழற்பந்தும் வீசுவார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்தவர்கள். 2005-ம் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். ஆர்யன் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். ஜான் ஜேம்ஸ் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆவார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் வயநாடு ஆகும்.
ஆர்யன், ஜேம்ஸ் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி இலங்கையை பூர்விகமாக கொண்ட நடேன் கூரே, நிதேஷ் சாமுவேல், சீனா வம்சாவளியான அலெக்ஸ் லீ யங் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆலிவர் பீக் (கேப்டன்), கேசி பார்டன், நடேன் கூரே, ெஜய்டன் டிராப்பர், பென் கார்டன், ஸ்டீவன் ஹோகன், தாமஸ் ஹோகன், ஜான் ஜேம்ஸ், சார்லஸ் லச்முன்ட், வில் மலாஜ்சுக், நிதேஷ் சாமுவேல், ஹைடன் ஷில்லர், ஆர்யன் ஷர்மா, வில்லியம் டெய்லர், அலெக்ஸ் லீ யங்.
- முதலில் ஆடிய இந்தியா 297 ரன்கள் குவித்தது.
- இதில் இந்திய வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர்.
புளோம்பாண்டீன்:
15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 214 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. சச்சின் தாஸ் 116 ரன்னும், உதய் சஹாரன் 100 ரன்னும் குவித்தனர்.
நேபாள அணி சார்பில் குல்சன் ஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து, 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நேபாளம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்தியா சார்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






