என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி நடைபெறுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 9ம் தேதி நடக்கிறது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    டெஸ்ட் தொடர் முடிந்த உடன் இவ்விரு அணிகள் இடையே ஒருநாள் போட்டிகளும், இறுதியாக டி20 தொடரும் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக பவுமாவும், டி20 போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:

    ஒருநாள் அணி:

    டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், நான்ட்ரே பர்கர், குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ரூபின் ஹெர்மன், கேசவ் மகராஜ், மார்கோ ஜான்சன், ஐடன் மார்க்ரம், லுங்கி நிகிடி, ரியான் ரிக்கல்டன், பிரெனெலன் சுப்ரயன்.

    டி20 அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டோனி டி சோர்ஜி, டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆன்ரிச் நோர்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான் - பிக்ரி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதனால் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • முதல் அரையிறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
    • சூப்பர் ஓவரில் வென்ற வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தோகா:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சோகன் 65 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சூர்யவன்ஷி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 15 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஜிதேஷ் சர்மா போல்டானார். அடுத்து வந்த அசுதோஷ் சர்மா 2-வது பந்தில் கேட்ச் ஆனார். இதன்மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.

    சூப்பர் ஓவரில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியும் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. 2-வது பந்து வைடாக சென்றது. இதனால் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    • வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது.
    • இந்த டெஸ்டில் தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரை இழக்கும்.

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன் னிலையில் உள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முதல் டெஸ்டில் சந்தித்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

    இந்த டெஸ்டில் தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரை இழக்கும். எனவே இந்தியா வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பாதியில் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

    பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோரும் ஆல்-ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் உள்ளனர்.

    பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளனர். எத்தனை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும். முதல் டெஸ்டில் பேட்டிங்கில் சொதப்பியதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அந்த அணியில் மார்க்ராம், டோனி டி ஜோர்ஜி, ரிக்கல்டன், மார்கோ ஜான்சன், முல்டர்,ஸ்டெப்ஸ், ஹார்மர், கேசவ் மகராஜ் ஆகியோர் உள்ளனர்.

    நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது. டிரா செய்தாலே தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி விடும். எனவே இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி உள்ளது. இதை தடுக்க இந்தியா முயற்சிக்கும். எனவே கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்நிலையில் 100 ஆண்டுகால ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல் நாள் ஆட்டத்தில் (Eng 10, Aus 9) 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் (Eng 10, Aus 7) 17 விக்கெட்டுகள் இழந்தது அதிகபட்சமாக இருந்தது.

    மேலும் பெர்த் மைதானத்தில் முதல் நாளில் 19 விக்கெட்டுகளை இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் 17 விக்கெட்டுகளை இழந்ததே அதிகபட்சமாக இருந்தது.

    • ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    அந்த அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். பென் டக்கெட் 21, ஒலி போப் 46, ஹார் ப்ரூக் 52, ஸ்மித் 33 ஆகியோர் ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் ஓவரின் 2-வது பந்தில் ஆர்ச்சர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதனையடுத்து லெபுசென் -ஸ்மித் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 14 ஓவர்கள் தாக்குபிடித்த இந்த ஜோடியை ஆர்ச்சர் பிரித்தார். லெபுசெனை (9) கிளின் போல்ட் ஆக்கினார். அடுத்த ஓவரில் ஸ்மித் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த கவாஜா (2) வந்த வேகத்தில் வெளியேறினார்.

    இந்த நிலையில் ஹெட் மற்றும் கிரீன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த ஜோடியை பிரித்தார்.

    ஹெட் 21 ரன்னிலும் கிரீன் 24 ரன்னிலும் இவரது பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து அலெக்ஸ் ஹேரி 26 ரன்னிலும் ஸ்டார்க் 12 ரன்னிலும் போலண்ட் 0 ரன்னிலும் வெளியேறினர்.

    123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • வங்கதேசம்- அயர்லாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
    • 3-வது நாள் ஆட்டமான இன்று அயர்லாந்து பேட்டிங் செய்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது.

    வங்க தேசத்தில் இன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இதன் தாக்கம் வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் எதிரொலித்தது. இதனால் ஆட்டம் 3 நிமிடம் தடைபட்டது. அனைத்து வீரர்களுகளும் தரையில் அமர்ந்து கொண்டனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

    அயர்லாந்து அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய அயர்லாந்து அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டவரான ஆயுஸ் ஷெட்டியுடன் மோதினர்.
    • முதல் செட் 23-21 என்ற கணக்கில் பரபரப்பாக சென்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் சக நாட்டவரான ஆயுஸ் ஷெட்டியுடன் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 23-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார்.

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச்-ம், 70 கிலோ பிரிவில் ஹிதேஷ் குலியாவும் தங்கம் வென்றனர்.
    • பெண்களுக்கான குத்துசண்டை போட்டியில் 7 வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.

    டெல்லி:

    உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த பந்தயங்களில் இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டு அசத்தினர்.

    பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி, ஆசிய சாம்பியனான பார்சோனா போஜிலோவை (உஸ்பெகிஸ்தான்) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே எதிராளிக்கு சரமாரியாக குத்துகளை விட்டு மிரட்டிய மீனாட்சி 5-0 என்ற கணக்கில் போஜிலோவை துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

    54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி 5-0 என்ற கணக்கில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவரான சிரின் சராபியை (இத்தாலி) சாய்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    70 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் இளையோர் உலக சாம்பியனான இந்தியாவின் அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அஜிஜா ஜோகிரோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் இந்தியாவின் நுபுர் பரபரப்பான ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சோதிம்போவா ஒல்டினாயை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

    51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் குவா யி ஜியானை தெறிக்கவிட்டு தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.

    இதேபோல் நடப்பு உலக சாம்பியனான ஜாய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ) சீன தைபேயின் வு ஷி யியை பந்தாடி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

    60 கிலோ எடைப்பிரிவில் பர்வீன் ஹூடாவை தங்கப்பதக்கம் அலங்கரித்தது. அதே சமயம் பூஜா ராணி (80 கிலோ) இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஜதுமணி சிங் 1-4 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜாலிலோவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    இதே மாதிரி 55 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் பவன் பார்த்வால், உஸ்பெகிஸ்தானின் சமந்தர் ஆலிகோவிடம் தோல்வி கண்டார். 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அபினாஷ் ஜம்வால் 1-4 என்ற கணக்கில் ஜப்பானின் ஷின் நிஷியமாவிடம் வீழ்ந்தார்.

    80 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அங்குஷ் பன்ஹால், உலகக் கோப்பை சாம்பியனான ஷித்து ஒலாடிமிஜியிடம் (இங்கிலாந்து) பணிந்தார். மற்றொரு இந்தியர் நரேந்தர் பர்வாலும் (90 கிலோவுக்கு மேல்) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் செய்த்பிக் முனார்பெக்கையும், 70 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா 3-2 என்ற கணக்கில் முர்செல் நுர்பெக்கையும் (கஜகஸ்தான்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர்.

    • கில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
    • முதல் டெஸ்டில் இடம் பெற்ற அக்‌ஷர் படேல் 2-வது டெஸ்டில் கழற்றி விடப்பட உள்ளார்

    கவுகாத்தி:

    தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    கழுத்து வலியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அணிக்கு திரும்பியிருக்கும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் உடனடியாக களம் கண்டால், கழுத்து வலி பிரச்சினை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடமாட்டார் என்றும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கில்லுக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம் பெற வாய்ப்புள்ளது.

    அதேபோல அக்ஷர் படேலுக்கு பதிலாக நிதிஷ் குமார் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    அந்த அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். பென் டக்கெட் 21, ஒலி போப் 46, ஹார் ப்ரூக் 52, ஸ்மித் 33 ஆகியோர் ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    ×