என் மலர்
விளையாட்டு
- சென்னை அணி அதிரடி வீரர் பிராவோவை விடுவித்துள்ளது.
- ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.
மும்பை:
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)
மும்பை இந்தியன்ஸ்:
கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்:
மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதாம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்
குஜராத் டைட்டன்ஸ்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மணீஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜாஸ் பரோகா
டெல்லி கேபிட்டல்ஸ்:
ஷர்துல் தாக்கூர், டிம் சீபர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பாரத், மந்தீப் சிங்
- சி.எஸ்.கே, மும்பை உள்பட 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.
- டெல்லி, ஐதராபாத் உள்பட 10 அணிகள் விடுவித்துள்ள வீரர்களின் விவரம் வெளியானது.
மும்பை:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.
இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்றைக்குள் ( நவம்பர் 15) சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிந்ததால் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
எம்.எஸ்.தோனி , ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி
மீதமுள்ள தொகை: 20.45 கோடி மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2
மும்பை இந்தியன்ஸ்:
ரோகித் ஷர்மா , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்
டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரெண்டோர்ப்
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3 மீதமுள்ள தொகை: 20.55 கோடி
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா , ஹர்ப்ரீத் ப்ரார்
மீதமுள்ள தொகை: 32.2 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்
மீதமுள்ள தொகை: 42.25 கோடி ரூபாய். மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்
டிரேடிங் முறையில் வாங்கப்பட்டவர்கள்: ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன்
மீதமுள்ள தொகை: 7.05 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
குஜராத் டைட்டன்ஸ்:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் நங்வான், தர்ஷன் நங்வான், , ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது
மீதமுள்ள தொகை: 19.25 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்
மீதமுள்ள தொகை: 23.35 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால், மஹிபால், மஹிபால். சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்
மீதமுள்ள தொகை: 8.75 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், சாஹல், சாஹல். , கே.சி கரியப்பா
மீதமுள்ள தொகை: 13.2 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹ்மத், லுங்கி அகமது , முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்
மீதமுள்ள தொகை: 19.45 கோடி ரூபாய் மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் - 2
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் வெளியானது.
- சென்னை அணி கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார். ஜடேஜாவை அந்த அணி தக்கவைத்தது.
சென்னை:
டிசம்பர் 23ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.
இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-க்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பிராவோ, தமிழக வீரர் ஜெகதீசன், ராபின் உத்தப்பா (ஓய்வு), கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கே.எஸ்.ஆசிப் உள்ளிட்ட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார். அந்த அணி ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்துள்ளது.
- ஐந்து ஐ.பி.எல். டிராபி, இரண்டு சாம்பியன்ஸ் லீக்கை வென்ற அணியில் இடம் பிடித்தவர்
- 2010-ல் இருந்து தனது அதிரடி ஆட்டம் மூலம் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிரன் பொல்லார்டு. இவர் மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார்.
இந்த ஆண்டுடன் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து இடம் பிடித்தார். அடுத்த ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கும் வீரர்களை வெளியேற்றி, தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை 10 அணிகளும் சமர்பிக்க வேண்டும்.
அந்த வகையில், பொல்லார்டை ரிலீஸ் செய்வதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது. இதனால் அவர் மாற்று அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவித்தார். அவர் அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது. இதனால் வீரராக இல்லாமல், பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து கைக்கோர்க்கிறார் பொல்லார்டு.
இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ''நான் இன்னும் சில வருடங்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் நோக்கம் இருந்த நிலையில், இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடத்திய ஆலோசனையின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுதல் தேவைப்படுகிறது. ஆகையால் நான் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது தெரிவந்தது. அப்புறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக என்னாலேயே எதிரணியில் விளையாடுவதை பார்க்க முடியாது. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து உணர்வுபூர்வமாக குட்-பை சொல்லி விடைபெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் பயிற்சியாளராகவும், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் வீரராகவும் பணியாற்ற ஒப்புக் கொண்டேன்'' என்றார்.
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது முழங்காலில் காயம் ஏற்பட்டது
- ஏற்கனவே காலேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி. இவர் காலேயில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட போட்டியில் விளையாடும்போது, வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் ஆசிய கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் விளையாடவில்லை. நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். தொடக்கத்தில் அவருக்கு ரிதம் சரியான அளவில் கிடைக்கவில்லை. அதன்பின் சிறப்பாக பந்து வீச தொடங்கினார்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியபோது, கேட்ச் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு பந்து வீச வந்தார். ஆனால் அவரால் பந்து வீச முடியவில்லை. ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் ஜனவரி வரை இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. சொந்த மண்ணில் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாட முடியாத நிலை ஷாகீன் அப்ரிடிக்கு ஏற்பட்டுள்ளது.
காயம் குறித்து முழுமையாக மதிப்பிட்டு அணியில் சேர்ப்பதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஒருவேளை ஷாகீன் அப்ரிடி அணியில் இடம் பிடிக்கவில்லை என்றால், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இடம்பிடித்தால், ராஃப் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவார்.
- இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், தொடக்க வீரர் மார்டின் குப்தில் ஆகியோர் இடம் பெறவில்லை.
வெலிங்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் ரோகித் சர்மா, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந் தேதியும், 3-வது போட்டி 22-ந் தேதியும் நடக்கிறது.
3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 25-ந் தேதி தொடங்குகிறது.
இந்தநிலையில் இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், தொடக்க வீரர் மார்டின் குப்தில் ஆகியோர் இடம் பெறவில்லை.
குப்தில் சமீப காலமாக ரன் குவிக்க திணறி வருகிறார். போல்ட் கடந்த ஆகஸ்டு மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.
3-வது ஒருநாள் போட்டியில் மட்டும் ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீசம் இடம்பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணத்துக்காக அப்போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஹென்றி நிக்கோலஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
20 ஓவர் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே, டேரிஸ் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், ஜிம்மி நீசம், மிச்செல் சான்ட்னெர், பெர்குசன், சோதி, டிம் சவுதி, டிக்னெர், ஆடம் மில்னே.
ஒருநாள் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், டாம் லாதம், டேவன் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், டேரிஸ் மிட்செல், ஜிம்மி நீசம், பிலிப்ஸ், சான்ட்னெர், டிம் சவுதி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, பெர்குசன்.
- ஆஸ்திரேலியாவின் ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார் கம்மின்ஸ்
- அடுத்த 12 மாதங்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இவர் டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக உள்ளார். தற்போது பிஞ்ச் ஓய்வு கேட்டுள்ளதால் வரவிருக்கும் தொடர்களில் ஒயிட் பால் அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கவனம் செலுத்த முன்னணி அணிகள் தொடங்கிவிட்டன.
இதற்கிடையில் அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் இன்றுடன் 10 அணிகளும், தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும், ரிலீஸ் செய்யும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ், 2023 ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்த வருட ஐ.பி.எல். தொடரை தவற விடுகிறேன் என்ற கடினமான முடிவை அறிவிக்கிறேன். அடுத்த வருடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வர இருக்கிறது. ஆஷஸ் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட இருப்பதால் அதற்கு போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ''கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எனது சுமை குறித்து புரிந்து கொண்டதற்கு நன்றி. திறமையான வீரர்கள், ஸ்டாஃப்களை கொண்ட அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
1. ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 17-ந்தேதி முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
2. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
3. பிப்ரவரி- மார்ச்சில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில விளையாடுகிறது.
4. மார்ச்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
5. ஜூன்-ஜூலையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது.
6. அதன்பின் தென்ஆப்பிரிக்கா சென்று ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
7. அதன்பின் இந்தியாவில் மூன்று ஒருநாள், ஐந்து டி20 களில் விளையாடுகிறது.
8. அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
- உலக கோப்பை தொடர்களுக்காக, இந்திய அணியை இப்போதே தயார்படுத்த வேண்டும்.
- டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டயாவை நியமிக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து, தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை இப்போதிருந்தே தயார் படுத்த வேண்டும். இதை தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களே இப்போதைய தேவை. மேலும் ஆல்-ரவுண்டர்களும் அவசியமாகும். அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், இதை நேரடியாக சொல்லி இருப்பேன்.
1983-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள். அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
- இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும்.
- இந்த இளைஞர்கள் குழு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் குறித்து பெருமைப்படுவதாக அந்த அணியின் ஆலோசகர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் ட்விட்டரில் பதிவேற்றிய வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் தங்களால் இயன்றதை முயற்சித்தனர். அது கைதட்டலுக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, நீங்கள் காயப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அது வலிக்கிறது, ஆனால் உண்மை என்னவென்றால் நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.
உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தொடரில் 100% உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியதற்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி செல்லும் நேரத்தில், முடிவுகள் மிகவும் சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இளைஞர்கள் குழு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
- செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோல், அர்ஜூனா விருதுக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன், பேட்மிண்டன் வீரர் லக்ஷயாசென், எச்.எஸ்.பிரனோய் உள்பட 25 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருது, புரஸ்கார் விருது உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது வழங்கும் விழா இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.
- இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.
பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது.
பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா'' எனப் பதில் அளித்திருந்தார். அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார்.பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.
இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது.
இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்" என்றார்.
- 2023-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 அணிகள் விளையாடும் என்று கூறப்படுகிறது
2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த பிரபல வீரர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2023-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 அணிகள் விளையாடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ், 2023-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
இவரை கொல்கத்தா அணி ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பதும், இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் 169 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது
டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதனால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் சாம் பில்லிங்ஸ் அறிவித்துள்ளார்






