என் மலர்
விளையாட்டு
- இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது.
- காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஜனிக் சின்னர் ஆகியோர் மோதினர். இதில் ஸ்வெரெவ் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட்டை சின்னர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனையடுத்து நடந்த 3 செட்டை அலெக்சாண்டர் 6-2 என்ற கணக்கிலும் 4-வது செட்டை சின்னர் 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினர். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை அலெக்சாண்டர் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதன்மூலம் 6-3, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 41 நிமிடம் நடந்தது. இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
காலிறுதியில் அலெக்சாண்டர் நம்பர் ஒன் வீரரான அல்காரஸை எதிர் கொள்கிறார்.
- மெட்வதேவ் கால்இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் சக நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவை சந்திக்கிறார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷபலென்கா 4-வது சுற்று ஆட்டத்தில் டாரியா கசட்கினாவை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனான அல்காரஸ் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் மேட்டோ அர்னால்டியை (இத்தாலி) எதிர் கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 57 நிமிட நேரம் மட்டுமே தேவைப்பட்டது.
3-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்று ஆட்டத்தில் 2-6, 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 13-வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாவூரை தோற்கடித்தார்.
மெட்வதேவ் கால்இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் சக நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவை சந்திக்கிறார். அவர் 4-வது சுற்று ஆட்டத்தில் 6-3. 3-6. 6-3. 6-4 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர் டிராப்பரை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த டாரியா கசட்கினாவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
அவர் கால் இறுதியில் சீனாவை சேர்ந்த செங்கை சந்திக்கிறார். செங் 4-வது சுற்றில் 5-வது வரிசையில் உள்ள ஜபேரை (துனிசியா), 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.
இதேபோல 3-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவும் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். மற்றொரு அமெரிக்க வீராங்கனையான மேடிசன் கெய்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தினார்.
இன்னொரு ஆட்டத்தில் வான்ட்ரோ சோவா (செக் குடியரசு) 6-7 (3-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பைடன் ஸ்டென்சை (அமெரிக்கா), தோற்கடித்தார். வான்ட்ரோ சோவா கால்இறுதியில் சேடிசன் கெய்சை எதிர்கொள்கிறார்.
- மைதானத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் கோலி கோலி என்று வேகமாக கூச்சலிட்டு முழங்கினார்கள்.
- விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதையும் களத்தில் சண்டை போடுவதையும் கௌதம் கம்பீர் வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதிய போட்டியில் நட்சத்திர முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வர்னணையாளராக செயல்பட்டார். அப்போது மாலை நேரத்தில் மழை வந்து போட்டி நிறுத்தப்பட்டதால் பெவிலியன் நோக்கி போனில் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்த அவருடைய காதில் கேட்கும் அளவுக்கு மைதானத்தில் இருந்த ஒரு தரப்பு ரசிகர்கள் கோலி கோலி என்று வேகமாக கூச்சலிட்டு முழங்கினார்கள்.
அதற்கு அந்த ரசிகர்களுக்கு எதிராக தம்முடைய நடுவிரலை காட்டி கௌதம் கம்பீர் கூலாக நடந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது.
விராட் கோலியை அடிக்கடி விமர்சிப்பதையும் களத்தில் சண்டை போடுவதையும் கௌதம் கம்பீர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதனால் டோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை பிடிக்காதவராகவே அறியப்படும் கம்பீர் அவர்களுடைய ரசிகர்களுக்கு எதிராக அப்படி செய்ததில் ஆச்சரியமில்லை என்று நினைத்து அனைவருமே அந்த வீடியோவை உண்மை என்று நம்பி நீங்கள் எல்லாம் ஒரு ஜாம்பவானா? என்று சரமாரியாக திட்டி தீர்த்தார்கள்.
இந்த நிலையில் அந்த வீடியோ வைரலானதை பார்த்த கெளதம் கம்பீர் அது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் பிரச்சனையை இணைத்து பேசியதற்காக அவ்வாறு நடுவிரலை காண்பித்ததாக நேரடியாக உண்மையை விளக்கினார். குறிப்பாக தம்முடைய நாட்டுக்கு எதிராக யார் பேசினாலும் அவ்வாறுதான் ரியாக்சன் கொடுப்பேன் என்று தைரியமாக சொன்ன அவர் சமூக வலைதளங்களில் வந்தது உண்மையல்ல என தெளிவுபடுத்தினார்.
ஆரம்பத்தில் வைரலான வீடியோவில் கௌதம் கம்பீர் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். ஆனால் இந்தியா மற்றும் நேபால் அணிகள் மோதிய போட்டியில் அவர் கருப்பு சட்டை அணிந்து வர்ணனை செய்தார். இங்கே உண்மை என்னவெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது வெள்ளை சட்டை அணிந்து பெவிலியன் நோக்கி சென்ற அவரிடம் பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் சம்பந்தமாக ஏதோ கூச்சலிட்டதாக தெரிகிறது.
அதற்கு தான் கம்பீர் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எதிராக இப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ஆரம்பத்தில் வைரலான வீடியோவில் உண்மையான ஆடியோவை நீக்கிய பாகிஸ்தான் ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மைதானத்தில் கௌதம் கம்பீருக்கு எதிராக கோலி, கோலி என கூச்சலிட்ட இந்திய ரசிகர்களின் ஆடியோவை சேர்த்து எடிட்டிங் செய்து அவரை விராட் கோலி ரசிகர்களிடம் வில்லனாக காட்டியதும் அம்பலமாகியுள்ளது.
- இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
- ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும்.
லாகூர்:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கையும், ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.
இந்த பிரிவில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வங்காளதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்வாகும்.
தற்போதைய சூழலில் இலங்கையின் ரன்ரேட் (+.0.951) வலுவாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் மோசமாக (-1.780) உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்4 சுற்று அதிர்ஷ்டம் கிட்ட வேண்டும் என்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் சேர்க்கிறது என்றால், எதிரணியை குறைந்தது 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும். இதே போல் இலக்கை விரட்டிப் பிடிக்கும் (சேசிங்) நிலை ஏற்பட்டால் 35 ஓவருக்குள் எட்ட வேண்டும். அப்போது தான் ரன்ரேட்டில் முன்னிலை பெற முடியும். லாகூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் இலங்கையும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
- உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- மழையால் தடைபட்ட ஆட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது.
- இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.
அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.
போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்நிலையில், இந்திய அணி 2.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அசத்தலாக விளையாடினர். அவ்வபோது 6, 4-களை அள்ளி வீசினர்.
இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேபாளம் அணிக்கு துவக்க வீரரான ஆசிப் ஷேக் 58 ரன்களை குவித்தார்.
- இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார்.
- வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி விளையாடுகிறது.
ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.
இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்காத நிலையில், அவருக்கு மாற்றாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்திய அணி இந்த போட்டியில் வெற்ற பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
- சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.
பல்லேகலே:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்று வருகிறது.
ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளாம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.
தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது லீக் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
நேற்று நடந்த 4-வது போட்டியில் வங்காளதேசம் 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 5-வது லீக் ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவருடைய மனைவிக்கு குழந்தை பிறப்பதையொட்டி அவர் நேற்று நாடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அவர் நாடு திரும்பினார்.
இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.
காயம் காரணமாக பும்ரா கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடினார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றினார்.
இதற்கிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடைபெற இருக்கும் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூப்பர் 4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி அங்கு நடக்கிறது.
கொழும்பில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடைபெற இருக்கும். போட்டிகள் தமுல்லா அல்லது ஹம்பன் டோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு செய்யப்படுகிறது.
- பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் கோலிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே என ரசிகையிடம் கேள்வி கேட்டனர்.
- ரசிகையின் ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடி, மற்றொரு கன்னத்தில் இந்திய தேசிய கொடி வரையப்பட்டிருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் ரசிகை ஒருவர் பாராட்டு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் போட்டி ரத்தான நிலையில் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது இரு நாட்டு ரசிகர்களிடம் பேட்டி எடுத்தனர். பாகிஸ்தான் ரசிகை ஒருவர் கூறும் போது, விராட் கோலி என்னுடைய பேவரைட் பிளேயர். நான் அவரது தீவிரமான ரசிகை. அவரை பார்ப்பதற்காகதான் இங்கு வந்தேன். இந்த போட்டியில் அவர் சதம் அடிப்பார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் அவரை பார்த்தது மகிழ்ச்சியே என்றார்.
அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் கோலிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே என கேள்வி கேட்டனர். அதற்கு அந்த இளம்பெண் தனது கன்னத்தை காட்டினார். அதில் ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடி, மற்றொரு கன்னத்தில் இந்திய தேசிய கொடி வரையப்பட்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தலையை நீட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது அந்த இளம்பெண், அங்கிள் நாம் அண்டை நாட்டுகாரர்களை நேசிப்பது ஒன்றும் மோசமான விஷயம் இல்லை என பதிலடி கொடுத்தார்.
பின்னர் அந்த ரசிகையிடம் கோலி அல்லது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் உங்களின் விருப்பம் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு அவர் விராட் கோலி என பதில் அளித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நேபாளம் குட்டி அணி என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி அதிக அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள்.
- நேபாளத்தை பொறுத்தமட்டில் முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள்.
பல்லகெலே:
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 'ஏ' பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நேபாளமும் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது. பிறகு இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா சரிவில் இருந்து மீண்டு 266 ரன்கள் சேர்த்தது. அடுத்து பாகிஸ்தான் பேட் செய்வதற்குள் மழை புகுந்து விளையாடியதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதே சமயம் நேபாள அணி- பாகிஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் வெறும் 104 ரன்னில் சுருண்டு 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் ஆரிப் ஷேக் (26 ரன்), சோம்பால் காமி (28 ரன்), குல்சன் ஜா (13 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறும்.
நேபாளம் குட்டி அணி என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி அதிக அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் கணிசமான ரன் திரட்டுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதே போல் இந்திய பவுலர்களும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளனர்.
அதே சமயம் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணத்துக்காக மும்பை திரும்பியுள்ளதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார். சூப்பர்4 சுற்று தொடங்குவதற்கு முன்பாக அணியுடன் இணைவார்.
நேபாளத்தை பொறுத்தமட்டில் முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள். 40 ஓவருக்கு மேலாக தாக்குப்பிடித்து விளையாடினாலே அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும்.
இன்றைய ஆட்டத்தையும் மழை அச்சுறுத்துகிறது. பல்லகெலேயில் இன்று மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பிற்பகலில் மழை பெய்து போக போக அதன் தாக்கம் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே 'டாஸ்' போடுவதில் தாமதம் ஏற்படலாம்.
ஒரு வேளை வருணபகவான் வழிவிடாமல் ஆட்டம் ரத்தாகி இரு அணியும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவானால், ஏற்கனவே ஒரு புள்ளியை பெற்றுள்ள இந்தியா சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ். முகமது ஷமி அல்லது பிரசித் கிருஷ்ணா.
நேபாளம்: குஷல் புர்டெல், ஆசிப் ஷேக், ரோகித் பாடெல் (கேப்டன்), ஆரிப் ஷேக், குஷல் மல்லா, திபேந்திர சிங், குல்சன் ஜா, சோம்பால் காமி, கரண் கே.சி., சந்தீப் லமிச்சன்னே, லலித் ராஜ்பன்ஷி.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது
- இதில் அமெரிக்காவின் டியாபோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவுடன் மோதினார். இதில் டியாபோ 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் அமெரிக்காவின் கோகோ காப், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.






