என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
காரைக்கால்:
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், மகளிர் தின விழா காரைக்கால் வணிகர் சங்க மையத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு, சத்தான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும், சிறந்த மகளிர் குழுக்களுக்கு கேடயமும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத் திட்டங்களையும், மக்களுக்கான உதவிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு விரைவில் உருவாக்கி செயல்படுத்தும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற விடா முயற்சி அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், மகளிர் தின விழா காரைக்கால் வணிகர் சங்க மையத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு, சத்தான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும், சிறந்த மகளிர் குழுக்களுக்கு கேடயமும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத் திட்டங்களையும், மக்களுக்கான உதவிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு விரைவில் உருவாக்கி செயல்படுத்தும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற விடா முயற்சி அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ஓட்டலில் தவறவிட்ட செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் பெரமசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 41). வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நாகை மாவட்டம் பொறையாருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் கோட்டுச்சேரி பூவம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார்.
அப்போது அவர் தனது செல்போனை ஓட்டலில் மறந்து வைத்துவிட்டு பொறையார் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், செல்போன் இல்லாததை அறிந்து, அவர் மீண்டும் ஓட்டலுக்கு வந்து பார்த்தபோது அங்கு செல்போன் இல்லை.
இது குறித்த சிவகுருநாதன் அளித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாரின் இரவு ரோந்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், பூவம் ஓட்டலில் சிவகுருநாதன் தவறவிட்ட செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நாளையும் (சனிக்கிழமை) சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. மேலும் வருகிற 29-ந் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக வருகிற 29-ந் தேதி அன்று தெற்கு அந்தமான் கடற்பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
எனவே வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரைப்படி இந்த நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நாளையும் (சனிக்கிழமை) சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. மேலும் வருகிற 29-ந் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக வருகிற 29-ந் தேதி அன்று தெற்கு அந்தமான் கடற்பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
எனவே வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரைப்படி இந்த நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி எட்டப்படவில்லை. 3½ லட்சம் பேர் முதல் தவணையே போடாத நிலை இருந்து வருவதால் மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பரவத்தொடங்கியது. இந்த தாக்கம் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு 2,200 அளவுக்கு அதிகரித்தது. பலி எண்ணிக்கையும் சராசரியாக 35 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
இந்தநிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். எனவே மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் குழு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தது இல்லை. தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை முதலில் குறைவாக இருந்தது.
விழிப்புணர்வு பிரசாரம், சிறப்பு முகாம்கள், 24 மணி நேர முகாம்கள், நிறுவனங்களில் முகாம்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடுவது என தொடர்ச்சியாக அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்தது.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார். ஆனாலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அதாவது, ஆரம்ப சுகாதார நிலையம் வரை வந்து விட்டு கட்டாய பரிசோதனைக்கு பயந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதெல்லாம் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
புதுவையில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் வரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 40 ஆயிரத்து 655 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 45 ஆயிரத்து 659 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த வகையில் பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களே 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக இருப்பது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
புதுவையில் 18 வயது நிரம்பிய சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை கணக்கில்கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம். கிட்டத்திட்ட 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி போட்டு வருகிறோம். கவர்னர், முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இந்த பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். வருகிற 30-ந்தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கினை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பரவத்தொடங்கியது. இந்த தாக்கம் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு 2,200 அளவுக்கு அதிகரித்தது. பலி எண்ணிக்கையும் சராசரியாக 35 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
இந்தநிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். எனவே மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் குழு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தது இல்லை. தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை முதலில் குறைவாக இருந்தது.
விழிப்புணர்வு பிரசாரம், சிறப்பு முகாம்கள், 24 மணி நேர முகாம்கள், நிறுவனங்களில் முகாம்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடுவது என தொடர்ச்சியாக அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்தது.
100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலம் என்ற இலக்கை தொட சுகாதாரத்துறை அவ்வப்போது தடுப்பூசி திருவிழா நடத்தி வருகிறது. அக்டோபர் 2-ந் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி போட முயற்சி எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த இலக்கினை எட்ட முடியவில்லை.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார். ஆனாலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அதாவது, ஆரம்ப சுகாதார நிலையம் வரை வந்து விட்டு கட்டாய பரிசோதனைக்கு பயந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதெல்லாம் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
புதுவையில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் வரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 40 ஆயிரத்து 655 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 45 ஆயிரத்து 659 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த வகையில் பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களே 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக இருப்பது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
புதுவையில் 18 வயது நிரம்பிய சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை கணக்கில்கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம். கிட்டத்திட்ட 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி போட்டு வருகிறோம். கவர்னர், முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இந்த பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். வருகிற 30-ந்தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கினை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...13-15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு புகையிலை பழக்கம்- கணக்கெடுப்பில் தகவல்
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இந்தநிலையில் நேற்று 2-வது தவணை தடுப்பூசியை ரங்கசாமி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதன்பின் சிறிது நேரம் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். இதனால் நேற்று காலை அலுவலகத்துக்கும் வரவில்லை. பிற்பகலில் வழக்கம்போல் தனது பணிகளை ரங்கசாமி தொடர்ந்தார்.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இந்தநிலையில் நேற்று 2-வது தவணை தடுப்பூசியை ரங்கசாமி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதன்பின் சிறிது நேரம் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். இதனால் நேற்று காலை அலுவலகத்துக்கும் வரவில்லை. பிற்பகலில் வழக்கம்போல் தனது பணிகளை ரங்கசாமி தொடர்ந்தார்.
59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு தகவல் இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் புகையிலை நிறுவனங்களில் குறுக்கீடு தொடர்பான பயிலரங்கு அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின்படி, ‘புதுவையில் 13-15 வயதிற்குப்பட்ட மாணவர்களில் 4.3 சதவீதத்தினர் புகைக்கும் அல்லது மெல்லும் வகையிலான புகையிலையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இது தேசிய சராசரியான 8.5 சதவீதத்தை ஒப்பிடும்போது பாதியளவு குறைவானது.
புகையிலை இல்லா வழிகாட்டு நெறிமுறைகளை 63.6 சதவீதம் பள்ளிகள் பின்பற்றுகின்றன. 45.5 சதவீதம் பள்ளிகள் புகையிலை இல்லா பள்ளிக்கூடம் என்ற தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற நெறிமுறை பற்றி அறிந்துள்ளன. 52.6 சதவீதம் பேர் மூடப்பட்ட பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும், 59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்’.
புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு தகவல் இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் புகையிலை நிறுவனங்களில் குறுக்கீடு தொடர்பான பயிலரங்கு அக்கார்டு ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு தகவல் இதழை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின்படி, ‘புதுவையில் 13-15 வயதிற்குப்பட்ட மாணவர்களில் 4.3 சதவீதத்தினர் புகைக்கும் அல்லது மெல்லும் வகையிலான புகையிலையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இது தேசிய சராசரியான 8.5 சதவீதத்தை ஒப்பிடும்போது பாதியளவு குறைவானது.
புகையிலை இல்லா வழிகாட்டு நெறிமுறைகளை 63.6 சதவீதம் பள்ளிகள் பின்பற்றுகின்றன. 45.5 சதவீதம் பள்ளிகள் புகையிலை இல்லா பள்ளிக்கூடம் என்ற தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற நெறிமுறை பற்றி அறிந்துள்ளன. 52.6 சதவீதம் பேர் மூடப்பட்ட பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும், 59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?: ஜெ.தீபா
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்ப்பணம், நகை திருடிய டி.வி. மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
வானூர்:
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த டாக்டர் மணிமாறனுக்கும், வாழைக்குளம் பகுதியை சேர்ந்த டாக்டர் ஹேமலதாவுக்கும் கடந்த 15-ந் தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதற்கு அடுத்த நாள் மாலை வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பெறப்பட்ட மொய்ப்பணம் மற்றும் நகைகள் அடங்கிய ஒரு பையை செல்வக்குமார் என்பவர் வைத்திருந்தார். அவரை புகைப்படம் எடுக்க உறவினர்கள் அழைத்ததால் கையில் இருந்த பையை ஓரமாக வைத்துவிட்டு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் பையை காணவில்லை. மண்டபத்தின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து செல்வக்குமார் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி ஒருவர் மொய் பணம், நகைகள் இருந்த பையை நைசாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி விசாரித்தபோது, திருமண மண்டபத்தில் திருடியது வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பதும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் டி.வி. மெக்கானிக் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்து, வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரொக்கம், 7 மோதிரங்கள், 3 தங்க காசுகள் உள்பட 3¾ பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த டாக்டர் மணிமாறனுக்கும், வாழைக்குளம் பகுதியை சேர்ந்த டாக்டர் ஹேமலதாவுக்கும் கடந்த 15-ந் தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதற்கு அடுத்த நாள் மாலை வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பெறப்பட்ட மொய்ப்பணம் மற்றும் நகைகள் அடங்கிய ஒரு பையை செல்வக்குமார் என்பவர் வைத்திருந்தார். அவரை புகைப்படம் எடுக்க உறவினர்கள் அழைத்ததால் கையில் இருந்த பையை ஓரமாக வைத்துவிட்டு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் பையை காணவில்லை. மண்டபத்தின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து செல்வக்குமார் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி ஒருவர் மொய் பணம், நகைகள் இருந்த பையை நைசாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி விசாரித்தபோது, திருமண மண்டபத்தில் திருடியது வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பதும் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் டி.வி. மெக்கானிக் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்து, வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரொக்கம், 7 மோதிரங்கள், 3 தங்க காசுகள் உள்பட 3¾ பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெள்ள சேதத்தை பார்வையிட இன்று மத்திய குழுவினர், பாகூர் பகுதிக்கு வந்தனர். பரிக்கல்பட்டு சாலையில் வெள்ளத்தால் சேதமான விளைநிலங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
பாகூர்:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, பாகூர் பகுதியில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றின் கரைகள் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் மூழ்கடித்து வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.
இதனால், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவைகள் பலத்த சேதமடைந்தன.
இந்நிலையில், வெள்ள சேதத்தை பார்வையிட இன்று மத்திய குழுவினர், பாகூர் பகுதிக்கு வந்தனர். பரிக்கல்பட்டு சாலையில் வெள்ளத்தால் சேதமான விளைநிலங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, பாகூர் பகுதி விவசாயிகள், மத்திய குழுவினரிடம் பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை, மானியமும் வழங்கப்படவில்லை.
வடிகால் வாய்க்கால்களை உரிய காலத்திற்கு முன்னதாக தூர்வாரவில்லை. பல முறை கோரிக்கை வைத்தும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
அப்போது, வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றார். இதில், ஆத்திரமடைந்த விவசாயிகள், மழை வெள்ளத்தால் தத்தளித்த போது, எந்த அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் எங்களை பார்க்கவில்லை. இப்போது, மத்திய குழுவினருடன் வந்து நாடகம் நடத்த வந்துள்ளீர்களா? என கேட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலகாந்தியை, சட்டையை பிடித்து தள்ளி விரட்டியடித்தனர்.
சுதாரித்து கொண்ட இயக்குனர் பாலகாந்தி அருகில் இருந்த காரின் மீது சாய்ந்து சேற்றில் விழாமல் தப்பினார். இதனால், அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முள்ளோடை துணை மின் நிலையத்தை பார்வையிட்டு சென்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, பாகூர் பகுதியில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆற்றின் கரைகள் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் மூழ்கடித்து வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.
இதனால், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவைகள் பலத்த சேதமடைந்தன.
இந்நிலையில், வெள்ள சேதத்தை பார்வையிட இன்று மத்திய குழுவினர், பாகூர் பகுதிக்கு வந்தனர். பரிக்கல்பட்டு சாலையில் வெள்ளத்தால் சேதமான விளைநிலங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, பாகூர் பகுதி விவசாயிகள், மத்திய குழுவினரிடம் பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை, மானியமும் வழங்கப்படவில்லை.
வடிகால் வாய்க்கால்களை உரிய காலத்திற்கு முன்னதாக தூர்வாரவில்லை. பல முறை கோரிக்கை வைத்தும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
அப்போது, வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி விவசாயிகளை சமாதானப்படுத்த முயன்றார். இதில், ஆத்திரமடைந்த விவசாயிகள், மழை வெள்ளத்தால் தத்தளித்த போது, எந்த அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் எங்களை பார்க்கவில்லை. இப்போது, மத்திய குழுவினருடன் வந்து நாடகம் நடத்த வந்துள்ளீர்களா? என கேட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலகாந்தியை, சட்டையை பிடித்து தள்ளி விரட்டியடித்தனர்.
சுதாரித்து கொண்ட இயக்குனர் பாலகாந்தி அருகில் இருந்த காரின் மீது சாய்ந்து சேற்றில் விழாமல் தப்பினார். இதனால், அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
இதனையடுத்து, மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முள்ளோடை துணை மின் நிலையத்தை பார்வையிட்டு சென்றனர்.
ஆய்வின்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் பூர்வா கார்க், சப்- கலெக்டர் ரிஷிதா குப்தா, தாசில்தார் குப்பன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பொதுப்பணி மற்றும் மின்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படியுங்கள்... வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 6.14 லட்சம் பேர் மனு
புதுவையில் ஏற்பட்ட மழை பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்து எவ்வளவு பாதிப்பு என தெரிந்த பின் மத்திய அரசிடம் முழு நிவாரணம் கேட்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி வந்த மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
சந்திப்பு முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமாக ஆண்டுக்கு 130 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக 180 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன.
சங்கராபரணி ஆறு, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பாகூர் பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான நெற்பயிர், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
இதனால் கூலித்தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். வெள்ள சேத பகுதிகளை அவர்கள் நாளை (இன்று) பார்வையிட உள்ளனர்.
புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு புதுவைக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்த பொதுப்பணித்துறை அமைச்சரும், மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து இதை வலியுறுத்தியுள்ளார்.
தற்போது புதுவையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்து எவ்வளவு பாதிப்பு என தெரிந்த பின் மத்திய அரசிடம் முழு நிவாரணம் கேட்கப்படும். நாம் கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு புதுவைக்கு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட சிவப்புநிற ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளுக்கும் மழைநிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள்நிற ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் முதல் ரேஷன்கடைகளில் வினியோகம் செய்யப்படும். எங்கள் அரசு சொன்னதை செய்யும். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி வந்த மத்திய குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
சந்திப்பு முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் வழக்கமாக ஆண்டுக்கு 130 செ.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக 180 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன.
சங்கராபரணி ஆறு, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பாகூர் பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான நெற்பயிர், காய்கறி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
இதனால் கூலித்தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாய கூலி தொழிலாளிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மத்திய குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். வெள்ள சேத பகுதிகளை அவர்கள் நாளை (இன்று) பார்வையிட உள்ளனர்.
புதுச்சேரியில் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு புதுவைக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்த பொதுப்பணித்துறை அமைச்சரும், மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து இதை வலியுறுத்தியுள்ளார்.
தற்போது புதுவையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்து எவ்வளவு பாதிப்பு என தெரிந்த பின் மத்திய அரசிடம் முழு நிவாரணம் கேட்கப்படும். நாம் கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு புதுவைக்கு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட சிவப்புநிற ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளுக்கும் மழைநிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள்நிற ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் முதல் ரேஷன்கடைகளில் வினியோகம் செய்யப்படும். எங்கள் அரசு சொன்னதை செய்யும். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
காலாப்பட்டு:
புதுச்சேரி மாநில பா.ம.க. செயற்குழு கூட்டம் கோரிமேட்டில் உள்ள சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியின் பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகின்றனர். அவர்களை நான் குறை கூறவில்லை. தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது.
புதுச்சேரி சிறிய மாநிலம், ஆனால் ஏன் 4 அல்லது 5 தொகுதிகளில் நின்று வெற்றிபெறும் அளவிற்கு வேலை செய்யவில்லை. கடந்த கால புதுச்சேரி வரலாற்றை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

அதேபோல் புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன். அதனால் பயனில்லை. புதுச்சேரியில் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் பாதுகாவலர்களால் தப்பித்தேன்.
நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதெல்லாம் பா.ம.க. புத்துயிர் பெற்று புதுவையில் 3, காரைக்காலில் 2 என 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும். இதற்காக வீடு வீடாக சென்றும், சமூக ஊடகத்தின் மூலமாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். 10 நபர்களாக சென்று பிரசாரம் செய்யுங்கள். வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
புதுச்சேரி மாநில பா.ம.க. செயற்குழு கூட்டம் கோரிமேட்டில் உள்ள சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரியின் பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகின்றனர். அவர்களை நான் குறை கூறவில்லை. தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது.
புதுச்சேரி சிறிய மாநிலம், ஆனால் ஏன் 4 அல்லது 5 தொகுதிகளில் நின்று வெற்றிபெறும் அளவிற்கு வேலை செய்யவில்லை. கடந்த கால புதுச்சேரி வரலாற்றை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டப்பட்டேன்.
புதுச்சேரியை அப்படியே விட்டு விட்டீர்களே என தொலைபேசியில் சிலர் தொடர்பு கொண்டு கேட்பார்கள். கூட்டணியில் இருந்தாலும் கூட நலினமாக தி.மு.க.வை விமர்சனம் செய்வேன். அதற்கு கலைஞர் தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என பதில் சொல்வார்.

அதேபோல் புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன். அதனால் பயனில்லை. புதுச்சேரியில் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் பாதுகாவலர்களால் தப்பித்தேன்.
நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதெல்லாம் பா.ம.க. புத்துயிர் பெற்று புதுவையில் 3, காரைக்காலில் 2 என 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும். இதற்காக வீடு வீடாக சென்றும், சமூக ஊடகத்தின் மூலமாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். 10 நபர்களாக சென்று பிரசாரம் செய்யுங்கள். வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பாகூர் நகரப்பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் தொடர்ந்து மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
பாகூர்:
தமிழகத்தில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாகூர் அருகிலுள்ள தமிழகப் பகுதியில் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் சித்தேரி அணைக்கட்டிலிருந்து வடிகால் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால் பாகூர் பகுதியிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
சாலைகள், வீடுகள், மரம், விவசாயம், கால்நடைகள் என பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பாகூர் நகரப்பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் தொடர்ந்து மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் வடிந்து வரும் நீர் மணப்பட்டு, காட்டுக்குப்பம், உச்சிமேடு ஆகிய ஏரிகளில் நிரம்பி பாக்கியலட்சுமி நகர், சப்தகிரி நகர், சீனிவாசா நகர், உச்சிமேடு, பள்ள கொரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்தது.
தற்பொழுது அப்பகுதியில் தண்ணீர் வடிந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் சுமார் 7½ அடி உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தோடுகிறது. கடும் வெள்ளப்பெருக்கால் தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கம் பாலத்தின் 2 கரைகளும் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பாலமும் சேதமடைந்து விட்டது. இந்த நிலையில் பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணையில் 2 கரையிலும் சுமார் 100 மீட்டருக்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆற்றின் நடுவிலும் உள்ள தடுப்பணை சேதமாகி இருக்கக்கூடுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அணை 3-வது முறையாக உடைந்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தடுப்பணையில் சேமித்து வைக்கவேண்டிய பல லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கும். கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாகூர் அருகிலுள்ள தமிழகப் பகுதியில் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் சித்தேரி அணைக்கட்டிலிருந்து வடிகால் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி வழிந்ததால் பாகூர் பகுதியிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
சாலைகள், வீடுகள், மரம், விவசாயம், கால்நடைகள் என பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பாகூர் நகரப்பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் தொடர்ந்து மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் வடிந்து வரும் நீர் மணப்பட்டு, காட்டுக்குப்பம், உச்சிமேடு ஆகிய ஏரிகளில் நிரம்பி பாக்கியலட்சுமி நகர், சப்தகிரி நகர், சீனிவாசா நகர், உச்சிமேடு, பள்ள கொரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ஊருக்குள் புகுந்தது.
தற்பொழுது அப்பகுதியில் தண்ணீர் வடிந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் சுமார் 7½ அடி உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தோடுகிறது. கடும் வெள்ளப்பெருக்கால் தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கம் பாலத்தின் 2 கரைகளும் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பாலமும் சேதமடைந்து விட்டது. இந்த நிலையில் பாகூர் அருகே உள்ள கொமந்தான்மேடு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணையில் 2 கரையிலும் சுமார் 100 மீட்டருக்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆற்றின் நடுவிலும் உள்ள தடுப்பணை சேதமாகி இருக்கக்கூடுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அணை 3-வது முறையாக உடைந்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தடுப்பணையில் சேமித்து வைக்கவேண்டிய பல லட்சம் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கும். கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கிய படுகை அணையில் உடைப்பு என்பது அந்த கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மக்கள் மனதிலும் வடுவை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செல்லிப்பட்டு படுகை அணையில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் படுகை அணையின் நடுப்பகுதி உடைந்துள்ளது.இதற்கு அந்த பகுதி மக்கள் சார்பில் நூதன முறையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது.
தோற்றம், மறைவு என குறிப்பிட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியின் புகைப்படத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் விமர்சனங்களுடன் கூடிய பல மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
50-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கிய படுகை அணையில் உடைப்பு என்பது அந்த கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மக்கள் மனதிலும் வடுவை ஏற்படுத்தி உள்ளது.






