search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Chandra Priyanka"

    புதுச்சேரியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார்.
    காரைக்கால்:

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், மகளிர் தின விழா காரைக்கால் வணிகர் சங்க மையத்தில் கொண்டாடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு, சத்தான உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளும், சிறந்த மகளிர் குழுக்களுக்கு கேடயமும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத் திட்டங்களையும், மக்களுக்கான உதவிகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய திட்டங்களை அரசு விரைவில் உருவாக்கி செயல்படுத்தும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற விடா முயற்சி அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.
    ×