search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்த படம்.
    X
    புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியபோது எடுத்த படம்.

    இனி வரும் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி- ராமதாஸ்

    வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    காலாப்பட்டு:

    புதுச்சேரி மாநில பா.ம.க. செயற்குழு கூட்டம் கோரிமேட்டில் உள்ள சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியின் பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகின்றனர். அவர்களை நான் குறை கூறவில்லை. தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    புதுச்சேரி சிறிய மாநிலம், ஆனால் ஏன் 4 அல்லது 5 தொகுதிகளில் நின்று வெற்றிபெறும் அளவிற்கு வேலை செய்யவில்லை. கடந்த கால புதுச்சேரி வரலாற்றை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

    புதுச்சேரியை அப்படியே விட்டு விட்டீர்களே என தொலைபேசியில் சிலர் தொடர்பு கொண்டு கேட்பார்கள். கூட்டணியில் இருந்தாலும் கூட நலினமாக தி.மு.க.வை விமர்சனம் செய்வேன். அதற்கு கலைஞர் தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என பதில் சொல்வார்.

    பாமக

    அதேபோல் புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன். அதனால் பயனில்லை. புதுச்சேரியில் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் பாதுகாவலர்களால் தப்பித்தேன்.

    நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதெல்லாம் பா.ம.க. புத்துயிர் பெற்று புதுவையில் 3, காரைக்காலில் 2 என 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும். இதற்காக வீடு வீடாக சென்றும், சமூக ஊடகத்தின் மூலமாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். 10 நபர்களாக சென்று பிரசாரம் செய்யுங்கள். வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×