search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    ரங்கசாமிக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

    இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

    இந்தநிலையில் நேற்று 2-வது தவணை தடுப்பூசியை ரங்கசாமி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதன்பின் சிறிது நேரம் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். இதனால் நேற்று காலை அலுவலகத்துக்கும் வரவில்லை. பிற்பகலில் வழக்கம்போல் தனது பணிகளை ரங்கசாமி தொடர்ந்தார்.
    Next Story
    ×