என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டலில் தவறவிட்ட செல்போனை திருடியவர் கைது
Byமாலை மலர்26 Nov 2021 12:05 PM GMT (Updated: 26 Nov 2021 12:05 PM GMT)
ஓட்டலில் தவறவிட்ட செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் பெரமசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 41). வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நாகை மாவட்டம் பொறையாருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் கோட்டுச்சேரி பூவம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார்.
அப்போது அவர் தனது செல்போனை ஓட்டலில் மறந்து வைத்துவிட்டு பொறையார் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், செல்போன் இல்லாததை அறிந்து, அவர் மீண்டும் ஓட்டலுக்கு வந்து பார்த்தபோது அங்கு செல்போன் இல்லை.
இது குறித்த சிவகுருநாதன் அளித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாரின் இரவு ரோந்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், பூவம் ஓட்டலில் சிவகுருநாதன் தவறவிட்ட செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X