என் மலர்
புதுச்சேரி
சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் செல்லிப்பட்டு படுகை அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருக்கனூர்:
திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த படுகை அணை உள்ளது. இந்த அணையில் நடுப் பகுதி சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். இருப்பினும் தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது.
இதனை சரிசெய்ய வேண்டும் எனவும், அணையை பாதுகாக்க வேண்டும் என்றும் பலமுறை அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் கற்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அணை உடைந்தால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. எனவே அணையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த படுகை அணை உள்ளது. இந்த அணையில் நடுப் பகுதி சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். இருப்பினும் தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது.
இதனை சரிசெய்ய வேண்டும் எனவும், அணையை பாதுகாக்க வேண்டும் என்றும் பலமுறை அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் கற்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அணை உடைந்தால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. எனவே அணையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
வில்லியனூர்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவை மற்றும் தமிழக பகுதியில் கனமழை பெய்தது.
புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை வடிய வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரி, வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் நீரும் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது.
நேற்று பாகூர் அருகே உள்ள கிராமப்புறங்களில் தான் வெள்ளம் புகுந்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
பாகூரில் மாட வீதி தவிர மற்ற பகுதிகளான பங்களா வீதி, புதிய காமராஜ் நகர், குட்டை, பாகூர்பேட், மகா கணபதி நகர், கூட்டுறவு குடியிருப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பாகூர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மக்கள் வெளியில் வர முடியாமலும், தங்களது உடமைகளை எடுத்து செல்ல முடியாமலும் தவித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும் தங்களது உடமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண் விழித்தபடி இருந்தனர்.
பாகூர் புதிய நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
வெள்ளம் காரணமாக பாகூர் பகுதியில் 15 குடும்பத்தினர் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பாகூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கன்னியக்கோவில் பகுதியிலும் வெள்ளம் புகுந்தது.
மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேரிடர் மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தென்பெண்ணையாற்றில் மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தகவலால் பாகூர் பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவை மற்றும் தமிழக பகுதியில் கனமழை பெய்தது.
புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை வடிய வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரி, வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் நீரும் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது.
நேற்று பாகூர் அருகே உள்ள கிராமப்புறங்களில் தான் வெள்ளம் புகுந்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
பாகூரில் மாட வீதி தவிர மற்ற பகுதிகளான பங்களா வீதி, புதிய காமராஜ் நகர், குட்டை, பாகூர்பேட், மகா கணபதி நகர், கூட்டுறவு குடியிருப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பாகூர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மக்கள் வெளியில் வர முடியாமலும், தங்களது உடமைகளை எடுத்து செல்ல முடியாமலும் தவித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும் தங்களது உடமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண் விழித்தபடி இருந்தனர்.
பாகூர் புதிய நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
வெள்ளம் காரணமாக பாகூர் பகுதியில் 15 குடும்பத்தினர் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பாகூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கன்னியக்கோவில் பகுதியிலும் வெள்ளம் புகுந்தது.
மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேரிடர் மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தென்பெண்ணையாற்றில் மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தகவலால் பாகூர் பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
மழை சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை மறுநாள் புதுச்சேரி வர உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
புதுவையில் பெய்த மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் மழையினாலும், கடல் அரிப்பினாலும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறினார்கள். அரசு உரிய நடவடிக்கையும், நிவாரணமும் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
கடல் அரிப்பினை பார்வையிட்ட கவர்னர் அங்கிருந்தபடியே மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அறிவியல் மந்திரி ஜிதேந்திர சிங்கை செல்போனில் தொடர்பு கொண்டு கடல் அரிப்பால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை விளக்கி கூறினார். மத்திய மந்திரியும் உடனடியாக குழுவினை அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் காணொளி வாயிலாக புதுச்சேரி அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இப்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்து பேசியதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார். கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் புதுவை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.
மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) புதுவை வர உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மணவெளி தொகுதி நோணாங்குப்பம் கிராமத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட என்.ஆர்.நகரை பார்வையிட்டார். அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். அங்கு 184 பெரியவர்கள், 54 சிறுவர்-சிறுமியர், 5 குழந்தைகள் உள்பட 243 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண முகாமில் பணியில் இருந்த மருத்துவக்குழுவிடம் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். அப்போது சபாநாயகர் செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதுவையில் பெய்த மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் மழையினாலும், கடல் அரிப்பினாலும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறினார்கள். அரசு உரிய நடவடிக்கையும், நிவாரணமும் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
கடல் அரிப்பினை பார்வையிட்ட கவர்னர் அங்கிருந்தபடியே மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அறிவியல் மந்திரி ஜிதேந்திர சிங்கை செல்போனில் தொடர்பு கொண்டு கடல் அரிப்பால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை விளக்கி கூறினார். மத்திய மந்திரியும் உடனடியாக குழுவினை அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் காணொளி வாயிலாக புதுச்சேரி அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இப்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்து பேசியதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார். கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் புதுவை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்.
மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) புதுவை வர உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மணவெளி தொகுதி நோணாங்குப்பம் கிராமத்தில் வெள்ளத்தால் சூழப்பட்ட என்.ஆர்.நகரை பார்வையிட்டார். அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். அங்கு 184 பெரியவர்கள், 54 சிறுவர்-சிறுமியர், 5 குழந்தைகள் உள்பட 243 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண முகாமில் பணியில் இருந்த மருத்துவக்குழுவிடம் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். அப்போது சபாநாயகர் செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதுவை, காரைக்காலில் இயல்பை விட சுமார் 2 மடங்கு அளவுக்கு அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரை 109.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 103.9 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதேகால கட்டத்தில் இயல்பாக புதுச்சேரியில் 49.2 செ.மீ. மழையும், காரைக்காலில் 60 செ.மீ. மழையும் பெய்யும். இந்த முறை சுமார் 2 மடங்கு அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரை 109.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 103.9 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதேகால கட்டத்தில் இயல்பாக புதுச்சேரியில் 49.2 செ.மீ. மழையும், காரைக்காலில் 60 செ.மீ. மழையும் பெய்யும். இந்த முறை சுமார் 2 மடங்கு அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. இந்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பெய்த கனமழையால் இதுவரை 78 குடிசைகள், 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை 610 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் 26.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதுவரை மொத்தம் 87 செ.மீ. மழை பெய்துள்ளது. 18-ந் தேதி காலை 9 மணி முதல் 19-ந் தேதி காலை 9 மணி வரை புதுச்சேரியில் 18.8 செ.மீ. திருக்கனூரில் 25.3 செ.மீ. பத்துக்கண்ணில் 19 செ.மீ. பாகூரில் 13.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தண்ணீர் தேங்குதல், மரங்கள் முறிந்து விழுந்தது, மின்கம்பங்கள் சேதம் என 80 புகார்கள் பெறப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி வருகிறது.
புதுச்சேரியில் பெய்த கனமழையால் இதுவரை 78 குடிசைகள், 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை 610 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் 26.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதுவரை மொத்தம் 87 செ.மீ. மழை பெய்துள்ளது. 18-ந் தேதி காலை 9 மணி முதல் 19-ந் தேதி காலை 9 மணி வரை புதுச்சேரியில் 18.8 செ.மீ. திருக்கனூரில் 25.3 செ.மீ. பத்துக்கண்ணில் 19 செ.மீ. பாகூரில் 13.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள பாகூர், ஊசுடு ஏரிகள் நிரம்பி உபரி நீர் கால்வாய்கள் மூலமாக திறந்து விடப்பட்டுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆரியபாளையம், என்.ஆர். நகர், நோணாங்குப்பம், கொம்பந்தான்மேடு, போன்ற தாழ்வான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் பெய்த கனமழையால் இதுவரை 78 குடிசைகள், 31 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக இதுவரை 610 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அசம்பாவிதங்களை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு ஏதாவது அவசர நிலை உதவி தேவைப்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மழை காரணமாக புதுவையில் இதுவரை 62 குடிசைகள், 27 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
அன்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் பெரிய ஏரிகளான பாகூர், ஊசுடு உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது.
தென்பெண்ணை, மலட்டாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே கடந்த சில நாட்களாக மழை விட்டு இருந்தது. நேற்று காலை மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
காலை 9 மணி அளவில் கனமழை கொட்ட தொடங்கியது. இந்த மழை மாலை 4 மணி வரை நீடித்தது.
தொடர்ந்து 7 மணி நேரம் பெய்த மழையால் புதுவை வெள்ளக்காடானது. புதுவையில் தாழ்வான பகுதிகளான பாவாணர் நகர், ரெயின்போ நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
கிழக்கு கடற்கரை சாலை, புஸ்சி வீதி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, மறைமலை அடிகள் சாலை, புதுவை-கடலூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தும் முடங்கியது.
மழை காரணமாக புதுவை பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக புதுவையில் இதுவரை 62 குடிசைகள், 27 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க 194 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மீட்பு, நிவாரண பணிகளில் உதவுவதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலை லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
அன்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் பெரிய ஏரிகளான பாகூர், ஊசுடு உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது.
தென்பெண்ணை, மலட்டாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே கடந்த சில நாட்களாக மழை விட்டு இருந்தது. நேற்று காலை மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
காலை 9 மணி அளவில் கனமழை கொட்ட தொடங்கியது. இந்த மழை மாலை 4 மணி வரை நீடித்தது.
தொடர்ந்து 7 மணி நேரம் பெய்த மழையால் புதுவை வெள்ளக்காடானது. புதுவையில் தாழ்வான பகுதிகளான பாவாணர் நகர், ரெயின்போ நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
கிழக்கு கடற்கரை சாலை, புஸ்சி வீதி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, மறைமலை அடிகள் சாலை, புதுவை-கடலூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தும் முடங்கியது.
புதுவை ரெயில் நிலையம் அருகே பழமையான மரம் மற்றும் தவளக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே இருந்த மரம் முறிந்து விழுந்தது. பொதுப்பணித்துறையினர் மரத்தை அகற்றினர். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டு மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மழை காரணமாக புதுவை பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக புதுவையில் இதுவரை 62 குடிசைகள், 27 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க 194 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மீட்பு, நிவாரண பணிகளில் உதவுவதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலை லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
வில்லியனூரில் பணியாற்றிய ஜோதி கணேசன் மார்க்கெட்டிங் பிரிவுக்கும், தட்டாஞ்சாவடியில் பணியாற்றிய பிரியதர்ஷிணி தாவரவியல் பூங்காவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறையில் பணியாற்றி வரும் வேளாண் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பணியாற்றும் தமிழ்செல்வன், திருக்கனூருக்கும், விதை சான்றளிப்பு அதிகாரி பார்த்திபன் மதகடிப்பட்டு உழவர் உதவியகத்துக்கும், திருக்கனூர் உழவர் உதவியகத்தில் பணியாற்றிய தனசேகரன் கரிக்கலாம்பாக்கத்துக்கும், பூச்சி மருந்து சோதனை ஆய்வகத்தில் பணியாற்றும் பிரேமானந்தன் பாகூர் உழவர் உதவியகத்துக்கும், பாகூரில் பணியாற்றிய மாசிலாமணி கரையாம்புத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலியமேட்டில் பணியாற்றிய கோகுலலட்சுமி தாவரவியல் பூங்காவிற்கும், கரையாம்புத்தூரில் பணியாற்றிய இளந்திரையன் தட்டாஞ்சாவடிக்கும் (தொழில்நுட்பம்), கரிக்கலாம்பாக்கத்தில் பணியாற்றிய ராஜவேல் விதை சான்றளிப்பு அதிகாரியாகவும், தாவரவியல் பூங்காவில் பணியாற்றிய கலைசெல்வன் பூச்சி மருந்து சோதனை ஆய்வகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒதியம்பட்டில் பணியாற்றிய வேலுமணி, தட்டாஞ்சாவடிக்கும் (தொழில்நுட்பம்), அங்கு பணியாற்றிய தினகரன், ஒதியம்பட்டு உழவர் உதவியகத்துக்கும், பிரபாகரன் வனத்துறைக்கும், வனத்துறையில் பணியாற்றிய சிவக்குமார் கரியமாணிக்கம் பண்ணைக்கும், அங்கு பணியாற்றிய செல்வகணபதி தட்டாஞ்சாவடிக்கும் (தொழில்நுட்பம்), வில்லியனூரில் பணியாற்றிய ஜோதி கணேசன் மார்க்கெட்டிங் பிரிவுக்கும், தட்டாஞ்சாவடியில் பணியாற்றிய பிரியதர்ஷிணி தாவரவியல் பூங்காவுக்கும், அங்கு பணியாற்றிய உமாராணி வில்லியனூர் உழவர் உதவியகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவினை சார்பு செயலாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இதுவரை கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல ஆய்வு மையத்தின் தற்போதைய தகவல்படி மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிகிறது.
எனவே மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரையின்படி இன்று (வியாழக்கிழமை) கடலுக்குள் செல்லாமலும், அவர்களுடைய மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல ஆய்வு மையத்தின் தற்போதைய தகவல்படி மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிகிறது.
எனவே மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரையின்படி இன்று (வியாழக்கிழமை) கடலுக்குள் செல்லாமலும், அவர்களுடைய மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொண்டு மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பல தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இளஞ்சிறார்களை கண்டறிந்து அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியில் நடைபெற்ற தென்மண்டல முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து மாநில வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
ஆனால் அதனை மத்திய உள்துறை மந்திரி கேட்டதாக தெரியவில்லை. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி கட்சி புதுவையில் ஆட்சிக்கு வந்து 6 மாதம் முடிவடைந்து விட்டது.
இந்த காலகட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து புதுவைக்கு நிதி வந்ததா? சுற்றுலாவை வளர்க்க பிரதமர் அதிக நிதி கொடுத்தாரா?
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து தனியாக மனு கொடுக்கிறார். முதல்-அமைச்சருக்கும், உள்துறை அமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? தனித்தனியாக மத்திய உள்துறை மந்திரியிடம் மனு கொடுப்பது புரியாத புதிராக உள்ளது.
புதுச்சேரியில் மழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எந்த பகுதிக்கும் செல்லவில்லை. வீட்டின் அருகில் உள்ள ஊசுடு ஏரியை மட்டும் பார்த்து விட்டு வந்துள்ளார். மழையால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, சர்க்கரை, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ரங்கசாமி அறிவித்தார். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சிவப்பு ரேஷன்கார்டு வைக்க தகுதி உள்ளவர்கள் பலருக்கு மஞ்சள் ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கும் அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
முதல்-அமைச்சர் அறிவித்த பணம் எப்போது கொடுக்கப்படும் என்று மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அறிவிப்போடு இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது.
மத்திய அரசு தற்போது எந்த மாநிலத்திற்கும் நிதி கொடுப்பது இல்லை. மக்களை பற்றி கவலைப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் தற்போது அறிவித்த நிதி எல்லாம் பட்ஜெட்டில் வராதது. இதனை அவர் எவ்வாறு பெறுவார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி பெற 5 ஆண்டுகள் போராடியும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.
புதுச்சேரியில் பல தொழிற்சாலைகளில் இளஞ்சிறார்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதனை புதுவை அரசு கண்டறிந்து அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதம் அடைந்த சாலைகளை அரசு சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியில் நடைபெற்ற தென்மண்டல முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து மாநில வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
ஆனால் அதனை மத்திய உள்துறை மந்திரி கேட்டதாக தெரியவில்லை. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி கட்சி புதுவையில் ஆட்சிக்கு வந்து 6 மாதம் முடிவடைந்து விட்டது.
இந்த காலகட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து புதுவைக்கு நிதி வந்ததா? சுற்றுலாவை வளர்க்க பிரதமர் அதிக நிதி கொடுத்தாரா?
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து தனியாக மனு கொடுக்கிறார். முதல்-அமைச்சருக்கும், உள்துறை அமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? தனித்தனியாக மத்திய உள்துறை மந்திரியிடம் மனு கொடுப்பது புரியாத புதிராக உள்ளது.
புதுச்சேரியில் மழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எந்த பகுதிக்கும் செல்லவில்லை. வீட்டின் அருகில் உள்ள ஊசுடு ஏரியை மட்டும் பார்த்து விட்டு வந்துள்ளார். மழையால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, சர்க்கரை, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ரங்கசாமி அறிவித்தார். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தற்போது சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சிவப்பு ரேஷன்கார்டு வைக்க தகுதி உள்ளவர்கள் பலருக்கு மஞ்சள் ரேஷன்கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கும் அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
முதல்-அமைச்சர் அறிவித்த பணம் எப்போது கொடுக்கப்படும் என்று மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அறிவிப்போடு இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது.
மத்திய அரசு தற்போது எந்த மாநிலத்திற்கும் நிதி கொடுப்பது இல்லை. மக்களை பற்றி கவலைப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் தற்போது அறிவித்த நிதி எல்லாம் பட்ஜெட்டில் வராதது. இதனை அவர் எவ்வாறு பெறுவார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி பெற 5 ஆண்டுகள் போராடியும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.
புதுச்சேரியில் பல தொழிற்சாலைகளில் இளஞ்சிறார்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதனை புதுவை அரசு கண்டறிந்து அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதம் அடைந்த சாலைகளை அரசு சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மழை நிவாரணமாக சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த மாத (அக்டோபர்) இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகர சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பாகூர், திருக்கனூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்குள் தேங்கிய மழை நீர் வடியாததால் சுமார் 1,000 ஹெக்டேருக்கும் மேல் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி விவசாய விளைபொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு சார்பில் முழுமையான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
மேலும் மழை காரணமாக கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கிடையே மழையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் பெய்த கனமழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைப்புசாரா தொழிலாளர், கட்டுமான தொழிலாளர் அல்லாத சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் பயனடைவார்கள். அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகைகள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
பேட்டியின்போது சபாநாயகர் செல்வம் உடன் இருந்தார்.
புதுவையில் கடந்த மாத (அக்டோபர்) இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகர சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பாகூர், திருக்கனூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் விவசாய நிலங்களுக்குள் தேங்கிய மழை நீர் வடியாததால் சுமார் 1,000 ஹெக்டேருக்கும் மேல் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி விவசாய விளைபொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு சார்பில் முழுமையான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
மேலும் மழை காரணமாக கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கிடையே மழையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் பெய்த கனமழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைப்புசாரா தொழிலாளர், கட்டுமான தொழிலாளர் அல்லாத சிவப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் பயனடைவார்கள். அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகைகள் விரைவில் பட்டுவாடா செய்யப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
பேட்டியின்போது சபாநாயகர் செல்வம் உடன் இருந்தார்.
சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தவிர தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது பெய்து வரும் பருவமழையால் தமிழகம், கர்நாடகத்தில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
அதன்படி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
ஒரு கிலோ கத்தரிக்காய் -ரூ.120 முதல் ரூ.130 (ரூ.60)
பெரிய வெங்காயம் (பல்லாரி)-ரூ.40 (ரூ.35)
கேரட், பீன்ஸ் தலா ரூ.60 (ரூ.50)
இதுதவிர உருளைக்கிழங்கு ரூ.40, தக்காளி ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.22, சவ்சவ் ரூ.28 என விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்களுக்கு கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே தற்போதும் நீடித்தது.
சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.
கார்த்திகை மாதம் அய்யப்ப சாமி சீசன் தொடங்கி இருப்பதால் காய்கறிகளின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தவிர தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போது பெய்து வரும் பருவமழையால் தமிழகம், கர்நாடகத்தில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
அதன்படி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-
ஒரு கிலோ கத்தரிக்காய் -ரூ.120 முதல் ரூ.130 (ரூ.60)
பெரிய வெங்காயம் (பல்லாரி)-ரூ.40 (ரூ.35)
கேரட், பீன்ஸ் தலா ரூ.60 (ரூ.50)
இதுதவிர உருளைக்கிழங்கு ரூ.40, தக்காளி ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.22, சவ்சவ் ரூ.28 என விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்களுக்கு கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே தற்போதும் நீடித்தது.
சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.
கார்த்திகை மாதம் அய்யப்ப சாமி சீசன் தொடங்கி இருப்பதால் காய்கறிகளின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.






