என் மலர்
விழுப்புரம்
- ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
- பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம்:
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வீசினர்.
- மேலும் அவர்களை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம்:
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. எனவே ஆளும் கட்சி மற்றும் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வுசெய்து, ஆறுதல் கூறியும், நிவாரணங்கள் அளித்தும் வருகின்றனர்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது சேற்றை வாரி இறைத்து, சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:
இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். அதேநேரம், சென்னை மாநகரில் மிகக் குறைந்த மழையே பெய்தது.
சென்னையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தேவையில்லை என அவர்கள் எண்ணிவிட்டனர். திமுகவின் ஊடகப் பிரிவாக டிஐபிஆர் (TN DIPR) நடந்துகொள்வதுடன், வெள்ளத்தின் உண்மைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் அது மும்முரமாக உள்ளது.
இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடியால், பொதுமக்களின் விரக்தி உச்சநிலையை எட்டியது. திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு நினைவூட்டல் என பதிவிட்டுள்ளார்.
- மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அண்ணாமலை ஆய்வு செய்தார்.
- மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும்.
மரக்காணம்:
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 1-ந் தேதி புதுவை-மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அங்குள்ள உப்பளங்கள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. மரக்காணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை அவர் மரக்காணம் வந்தார். மரக்காணத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. அதனை அண்ணாமலை பார்வையிட்டார். எக்கியார்குப்பம், கூனிமேடு பகுதிகளையும் பார்த்தார். வண்ணாரப்பாளையம்-அச்சங்குப்பம் இடையே சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளது. அதனையும் அண்ணாமலை பார்வையிட்டார். மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
மிகவும் கொஞ்சமாக மழை பெய்த சென்னையை மட்டுமே அரசு படம் போட்டு காட்டுகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும். முதலமைச்சர், துணை முதல்வரை விளம்பரம் செய்வதிலேயே முக்கியத்துவம் செலுத்தப்படுகிறது என்றார்.
- வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை.
இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆவேசமாக இருந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேற்றை வீசியதால் பாதியில் புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்கவில்லை என்று அரசூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கனமழையால் ஊருக்குள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற வலியுறுத்தியும், அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் பேருந்துகள், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில்
இந்த பாதையில் தற்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மறியலை கைவிட மாட்டோம். அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறினர்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
- உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
- எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
- மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு.
விழுப்புரம்:
பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலு வலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) காலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றார்.
சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட அவர் முதலில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதிக்கு சென்றார். அங்கு சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவற்றை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.
அப்போது முதல்-அமைச்சரிடம் பெண் அதிகாரி கூறியதாவது:-
இந்த பகுதியில் தோப்புக்கு ஒரு வீடு வீதம் நிறைய உள்ளது. மரங்கள் விழுந்து வீடுகள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்களும் சாய்ந்து விட்டது.
2 நாட்களாக அவற்றை சரி செய்து வருகிறோம். மின் கம்பங்களை சரி செய்ய ஊழியர்கள் குறைவாக இருந்தார்கள். இன்று கூடுதல் ஊழியர்கள் வந்துள்ளார்கள் என்றார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுத்து மாவட்ட கலெக்டரிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி அமுதா, கலெக்டர் அருண்ராஜ் ஆகியோரும் பாதிப்பு விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புடவை, பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம் ரெட்டியார் மில்லில் உள்ள வி.பி.எஸ். மெட்ரிக்கு லேஷன் பள்ளியில் (தாமரைக்குளம்) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மரக்காணத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்த்துக்கொண்டே சென்றார். அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட கலெக்டரும் உடன் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்டமும் சென்றார். திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டார்.
உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.
- எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின்ர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
* விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவு மழையை கண்டுள்ளது.
* பருவமழை தொடங்குவதற்கு முன்னரே ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தோம்.
* தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது.
* மீட்பு பணி குழு, தீயணைப்பு வீரர்கள் என பலரும் இணைந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.
* 140-க்கும் மேற்பட்ட முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
* நீர் தேங்கிய பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.
* 1.29 ஹெக்டர் பரப்பளவிற்கு வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* மழை முழுமையாக நிறைவடைந்ததும் பயிர் சேதங்களை கணக்கிட்டு நிச்சயமாக இழப்பீடு வழங்கப்படும்.
* துணை முதலமைச்சர், அமைச்சர்கள், ஆட்சியர்கள் முழு அர்ப்பணிப்புடன் மீட்பு, கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொறுப்பு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன்.
* ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சேதங்களை அறிக்கையாக மத்திய அரசிடம் அனுப்பி வைப்போம்.
* நமக்கான நிதியை ஒதுக்கவில்லை என்றாலும் எவ்வாறு சமாளிப்பது என ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.
* எந்த ஆட்சியில் மக்களுக்கான பணி சிறப்பாக நடைபெறுகிறது என மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
- போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வரக்கூடிய தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேப்போன்று, சென்னைக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு.
- விழுப்புரம், மரக்காணம், திண்டிவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்:
பெஞ்ஜல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவர் விழுப்புரம், மரக்காணம், திண்டிவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட அவர் அருகில் உள்ள சேவியர் காலனி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பிடாகம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். முன்னதாக மரக்காணம் மேட்டுத்தெருவில் தற்காலிக குடில் அமைத்து வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்டி-சேலை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள மகாராஜாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வி.வி.ஏ. திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
- போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமத்தை பார்வையிட்டு உதவ யாரும் வரவில்லை என குற்றம் சாட்டி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
- வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.






