என் மலர்
விழுப்புரம்
- கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும்.
விழுப்புரம்:
தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் பல்வேறு மாவட்டகளுக்கு நேரடியாக சென்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி விழுப்புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்கள் முன்பு அறிவிப்பு பலகை என்ற புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் போலீஸ் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதி இல்லை. இப்படிக்கு போலீஸ் நிலையம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது:-
போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்தது.
குறிப்பாக சிவில் வழக்கு, மகளிர் போலீஸ் நிலையங்களில் குடும்ப நல வழக்குகள், அடிதடி வழக்குகளில் வழக்கு பதிவு செய்வதில் புகார்தாரர்கள், எதிர் தரப்பினர்களை வைத்து கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக புகார் கூறப்பட்டது.
மேலும் இடைத்தரகர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்து போலீஸ் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாறி வருவதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பான புகார்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்ற நிலையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்கள் முன்பும் கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில உள்ள போலீஸ் நிலையங்கள் முன்பு கட்டப் பஞ்சாயத்துக்கு இடமில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும். மற்றபடி பேச்சு வார்த்தை போன்ற பஞ்சாயத்துக்கள் நடைபெறாது.
இதனை வெளிப்படையாக தெரிவிக்கவே இந்த போர்டுகளை போலீஸ் நிலையம் முன் வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் இடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கின்ற ஜெயசந்திரன், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியில் உள்ள விடுதலை சிறுத்கதைகள் ட்சி கொடி கம்பத்தின் அருகே பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை ஆட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த ராவணன், சுபாஷ், கன்னியப்பன் ஆகியோர் ஏன் கட்சி கொடி கம்பத்தை இதுபோல் செய்து உள்ளீர்கள் என கேட்டு உள்ளனர்.
ஆனால் அதற்கு லட்சுமணன் தரப்பினர் தாங்கள் அந்த கொடியை சேதப்படுத்தவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்களுக்குள் மோதல் உருவாகும் சூழலை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ராவணன் தரப்பினர் லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . இதனால் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதில் எதிர்தரப்பை சேர்ந்த பா.ம.க. கட்சியில் உள்ள லட்சுமணன் தரப்பினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த மயிலம் போலீசார் இரு தரப்பினையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அப்பொழுது லட்சுமணன் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினர் ஒரு தரப்பினரை மட்டுமே போலீஸ் விசாரிப்பதாக கூறி திடீரென லட்சுமணன் தரப்பினர் சென்ற காரை வழிமறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திடீரென பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம் ஜக்காம் பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் சமாதானம் பேசி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்துசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது.
- ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை,வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பிவைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து 10 நாட்கள் கடந்தும் மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை அளிக்க வில்லை. எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி 946 கோடி ரூபாயில் செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கும்வரை காத்திருக்க இயலாது. இன்னும் முழுமையான கணக்கெடுப்பை முடித்து விரிவான அறிக்கையுடன் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து நிதி வழங்க வலியுறுத்தவேண்டும்.
விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகக்கூடிய நிலையில் ரூ.6800 என்பதை ஏற்கமுடியாது. ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும். பின் மத்திய அரசு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அறிவிக்கப்பட்ட நிதியைக்கூட மாநில அரசு வழங்க மறுக்கிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 6 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 6 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க.கடன் வாங்குவதிலும், வட்டி கட்டுவதில் முதன்மை மாநிலமாக திக்ழ்கிறது. 8.34 லட்சம் கோடி கடனுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. வட்டி கட்டுவதில் தற்போது ரூ. 54,676 கோடியுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு திவாலாகிவிடும்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் தமிழ்கட்டாயப்பாடம் என சட்டம்நிறை வேற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்தும் அதை அமல்படுத்த முடியவில்லை. இச்சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதி மன்றம் சென்றும், இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க தமிழக அரசு வலியிறுத்தவில்லை. இது தமிழுக்கு தி.மு.க.செய்யும் துரோகமாகும்.
தமிழகத்தில் 26 இடங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசுமுடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. மணலுக்கு மாறாக செயற்கை மணல் மற்றும் இறக்குமதி மணலை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். தமிழகத்தில் கவுரவ பேராசிரியர்களுக்கு ரூ 25 ஆயிரம் போதுமான தல்ல. ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ .6 ஆயிரம் வழங்குவது நியாயமல்ல.
ஒரேநாடு ஒரே தேர்தல் என நடத்தப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும்போது அந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே இருக்கும். இதை பா.ம.க. ஏற்காது. அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை போற்றித்தான் ஆகவேண்டும். அவரை கொச்சைபடுத்தியோ, அவமதிப்பதை ஏற்க முடியாது. ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலையை நான் திறந்தேன். அம்பேத்கர் இல்லை என்றால்பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. அம்பேத்கரை விமர்சிப்பதை யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. மது விலக்கு என்ற துறையை வைத்துக்கொண்டு மது விற்பனையை அதிகரிக்கிறார்கள். அந்த துறையை எடுத்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
- பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.
விழுப்புரம்:
புயல் கரையை கடந்து 2 வாரங்கள் ஆகியும் விழுப்புரம் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ந்தேதி புதுவை அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 செ.மீ. மழை பெய்தது. விழுப்புரம் நகரில் 63.5 செ.மீ. மழை பெய்தது.
இதன் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.
குறிப்பாக விழுப்புரம் நகரத்திற்குட்பட்ட பெரும்பா லான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடு களை மழை நீர் சூழ்ந்தது.
அதில் விழுப்புரம் புறநகர் பகுதியான கிழக்கு பாண்டி சாலையில் உள்ள லிங்கம் நகர், ஆசிரியர் நகர், நேதாஜி நகர், கணபதி நகர் மற்றும் கீழ் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீருடன் கலந்த மழை நீர் சுமார் 4 அடி உயரத்துக்கு தற்போதும் தேங்கி உள்ளது.
இதனால் அப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அப் பகுதி பொதுமக்கள் சிலர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.
புயல் பாதித்து 2 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் புறநகர் பகுதியில் வெள்ளம் வடியாததால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வட்டா ரங்களில் விசாரித்தபோது, ஆசிரியர் நகர், லிங்கா நகர் இடையே உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள நீர் வழிப்பாதையில் தண்ணீ ரை வெளியேற்ற முடிவெடுத்த போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு 2 பைப் மூலம் தொடர்ந்த னூர் ஏரியில் நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.அப் பகுதி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.
- கவியரசன், சுனிலை பார்த்து ‘உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்’ என கண்டித்துள்ளார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.
கண்டமங்கலம்:
புதுச்சேரி ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுனில். ரவுடியான இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை சுனில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி சினேகாவை பார்க்க, சுனில் கடந்த 8-ந் தேதி சித்தலம் பட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் யாசிக், கவியரசன் உள்ளிட்டோருடன் திருக்கனூரில் உள்ள மதுக் கடையில் மது அருந்தியுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் சுனில், யாசிக் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சுனில், மறைத்து வைத்திருந்தபேனா கத்தியால் யாசிக்கின் தொடையில் கிழித்துள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. கவியரசன், சுனிலை பார்த்து 'உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்' என கண்டித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு, கவியரசன் வீட்டின் முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. குண்டு வெடித்த இடத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஒரு கறவை மாடு காயம்அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர்சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோ தம் காரணமாக ரவுடி சுனில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே பதுங்கி சுனில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சுனில் விக்ரவாண்டி அருகே மதுரப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்ற கணேஷ்ராஜ் (25) ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் 2 முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது. விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும் மேலும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட பொது மக்கள் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதுச்சேரி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் பள்ளி பாழடைந்துள்ளதாகவும் பள்ளிகளில் பல இடங்களில் மின் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாழடைந்த பள்ளியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்ற தாசில்தாரை அருகே உள்ள மொளசூர் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு அவரை முற்றுகையிட்டு தங்கள் ஊருக்கும் நிவாரணம் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. நீர்நிலைகள் முழுக்கொள்ளவை எட்டிய நிலையில், நீர் திறந்துவிடப்பட்டதால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாக நிலையில், தற்போது கனமழை எச்சரித்துள்ளது.
- பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
- அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
சேதராப்பட்டு:
புதுவை அருகே அரசு நிவாரண தொகை வழங்காததை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பெரியக்கோட்டகுப்பம் பகுதியில் 10 மற்றும் 11-வது வார்டு உள்ளது. பெஞ்ஜல் புயல் மற்றும் கனமழைக்கு இந்தப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை எனவும், புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூபாய் 2 ஆயிரம் தொகை மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை தொகுப்பு இந்த இரண்டு வார்டு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு கோட்டகுப்பம் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் தீவிரமடைந்தது.
அப்போது அரையாண்டு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் தனியார் பள்ளி பஸ்சில் வந்த நிலையில் மறியல் போராட்டத்தால் சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் பஸ் நிறுத்தப்பட்டது.
ஆட்டோக்களில் வந்த பள்ளி மாணவர்களும் மறியலில் சிக்கித் தவித்தனர். காலாப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கனரக வாகனங்கள் அரசு பஸ்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
கோட்டகுப்பம் ரவுண்டானாவில் இருந்து சிவாஜி சிலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெஞ்ஜல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து வீடுகள் சேதம் அடைந்தது. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 16 வார்டுகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகையை அரசு அறிவித்துள்ளது.
10 மற்றும் 11-வது வார்டு பகுதியில் சேதம் மதிப்பு குறித்து கணக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. முற்றிலும் 2 பகுதி மக்களும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அரசு நிவாரணத்திற்கான எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.
அதிகம் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கு உடனே தமிழக அரசு வழங்கும் நிவாரண நிதியை பாதிப்புக்கு ஏற்றார் போல் வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என கோஷங்கள் எழுப்பினர்.
தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக வழி விடுங்கள் என கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டதன் பேரில் பள்ளி வாகனங்களை மட்டும் போராட்டக்காரர்கள் விரைவாக செல்ல அனுமதித்தனர்.
பின்னர் மீண்டும் சாலை மறியல் ஈடுபட்ட அவர்களிடம் கோட்டக்குப்பம் துணை போலீஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தங்களுடைய பாதிப்புகளை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அப்போது போலீசாருக்கும் மறியல் ஈடுபட்ட ஒரு சில இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் கோட்டக்குப்பம் ரவுண்டான பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
சுமார் 1:30 மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தில் அந்த வழியாக அலுவலகம் சென்றவர்கள் சென்னை சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது போலீசார் வருவாய்த்துறை அதிகாரியிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 2 வார்டு மக்களுக்கும் அரசு வழங்கும் நிவாரணத் தொகையை வழங்குவதாக2 வார்டு பெயர்களையும் நிவாரண பட்டியலில் இடம் பெறச் செய்தனர். இதனை போலீசார் பொதுமக்களிடம் காண்பித்தனர். இதன் அடிப்படையிலேயே பொதுமக்கள் தற்காலிகமாக தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கோட்டக்குப்பம் பெஞ்ஜல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு 50-க்கும் மேற்பட்ட நபர்களை படகுமூலம் மீட்டனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. நிறைய கால்நடைகள் இறந்து போயின. நான்கு நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
எனவே கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை உடனே வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து அந்த மக்கள் மீண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2 ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் தண்ணீர் வடியாத காரணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மழைநீர் வடிந்து சகஜநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.
- நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர்.
- செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செல்ல இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை இணைச் செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அந்தக் குழுவினர் சந்தித்தனர். குழுவில் மத்திய அரசின் வேளாண்மைத் துறை இயக்குநர் பொன்னுசாமி, நிதித்துறை இயக்குநர் சோனாமணி கவுபம், மத்திய நீர்வளத்துறை இயக்குநர் சரவணன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய குழுவிடம் புயல் பாதிப்பு குறித்த விவரங்களை அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை இடைக்காலமாக மற்றும் நிரந்தர அடிப்படையில் சீர் செய்ய ரூ.6,675 கோடி தேவைப்படுகிறது என மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அறிக்கையை பெற்றுக்கொண்ட மத்திய குழு அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம் என்றனர். நேற்று இரவு மத்திய குழு அதிகாரிகள் சென்னையில் தங்கினார்கள்.
இன்று (சனிக்கிழமை) காலை மத்திய குழு அதிகாரிகள் 7 பேரும் விழுப்புரம் மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் மத்திய குழுவினரிடம் எடுத்து கூறினார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு படங்களையும் மத்திய குழுவிடம் அதிகாரிகள் கொடுத்தனர். அவற்றை மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து மத்திய குழு விக்கிரவாண்டி பகுதிக்கு புறப்பட்டு சென்றது.
அங்கும் வெள்ள சேத பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு கலெக்டர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதன் பிறகு நாளை மதியம் மத்திய குழு அதிகாரிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு செல்ல உள்ளனர்.
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்தியக்குழு வர வேண்டும், புதுவைக்கு நிவாரணமாக ரூ.614 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார்.
அதை ஏற்று மத்திய இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் புதுச்சேரி வருகின்றனர் அவர்கள் புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று பார்வையிடுகின்றனர்.
புதுவை காலாப்பட்டு, தேங்காய் திட்டு துறைமுகம், பாகூர் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் புதுச்சேரி அதிகாரிகளுடன் மழை சேதம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய நிபுணர் குழுவினர் வருகையையொட்டி புதுவை தலைமை செயலாளர் சரத் சவுகான் கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் மத்தியக்குழுவினர் பார்வையிட உள்ள இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செல்ல இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து படங்கள் மற்றும் தகவல்களை அதிகாரிகள் மத்திய குழுவுக்கு அனுப்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அந்த மாவட்டங்களுக்கு மத்திய குழு செல்லுமா? என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பாதிக்கப்பட்ட கள ஆய்வு செய்த பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறையிடம் அறிக்கையை அளிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.
- தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் அம்மணபாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர்-அங்காளம்மாள் தம்பதியரின் மகள் தர்ஷினி.
இவர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட்டுப்பாடும் போட்டியில் கலந்து கொண்டு தனது மெல்லிசை குரலால் அனைவரையும் கவர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய மாணவி தர்ஷினி தான் படிக்கும் பள்ளிக்கு சென்று வர அம்மணபாக்கம்-அமந்தமங்கலம் வரை பஸ் போக்குவரத்து வசதி இல்லை என்றும், அரசு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது பற்றிய தகவலறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் பகுதியில் பஸ் போக்குவரத்து சேவையை வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அம்மணபாக்கம்-அனந்தமங்கலம் இடையே இலவச பஸ் சேவையை 8-ம் வகுப்பு மாணவி தர்ஷினி முன்னிறுத்தி தொடங்கி வைத்தார்.
அந்த பஸ்சில் அமைச்சர் சிவசங்கர், மாணவி தர்ஷினியுடன் சென்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் கிராமத்தில் தர்ஷினி மற்றும் பள்ளி மாணவர்களை இறக்கி விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ் (வயது35) விவசாயி.
இவரது உறவினர் வி.பாஞ்சாலத்தை சேர்ந்த தீனதயாளன் (21) சென்னை வேளச்சேரியில் தனியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார் .
நேற்று மாலை 5 மணிக்கு சுரேஷ் ராஜ் தனது வயலில் மாமரத்தில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்க்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக அருகிலிருந்த மின்கம்பத்தின் ஒயரை பிடித்த போது மின்சாரம் தாக்கி கீழே சாய்ந்தார்.
அப்போது உடனிருந்த தீனதயாளன் அவரை துாக்க முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். அருகிலிருந்த பக்கத்து நிலத்துக்காரர் 2 பேரையும் சிகிச்சைக்காக காரில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .
இறந்து போன சுரேஷ்ராஜூக்கு வேதவல்லி என்ற மனைவியும், கிருத்திகைராஜ் (8), தருண்ராஜ் (7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.






