என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • கலெக்டர் அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் கேட்டறிந்தார்.
    • விவசாயிகள் நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். அவர் கொங்கரப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தோட்டக்கலை துறை மூலம் அவுரி பயிர் செய்யப்ப ட்டுள்ளதை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னோடி விவசாயி அன்பழகன் இப்பகுதியில் அதிக அளவு அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் தெரிவித்தார். பயிர் செய்ய பூச்சி தாக்குதல் குறைவாக இருப்பதாகவும் சாகுபடி செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதாகவும் அதனால் அதனை பயிர் செய்வதாக அவர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் அவுரி பயிர் செய்த விதைப்பு முதல் அறுவடை செய்வது ஏற்றுமதி செய்வது வரை விவரங்களை விவசாயி களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் அவுரி பயிருக்கு மானியம், அவுரி தழை காய வைக்க உலர் களம், சேமிப்பு கிடங்கு, அவுரிபயிருக்கு காப்பீடு, அவுரி விதை உற்பத்தி செய்தல், நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட கலெக்டர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துறை) சண்முகம் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உதவிய இயக்குனர் தோட்ட கலைத்துறை அப்துல் லத்தீப் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சத்தியமூர்த்தி வல்லம் வேளாண்மை உதவி இயக்குனர் உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    • மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • புஷ்பா வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம மரக்காணத்தில்கரி பாளையம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன். இவருடைய மனைவி புஷ்பா ( வயது 52). இவர் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் கள்ளச்சாராய விற்பது மரக்காணம் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்தத் தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் கரி பாளையம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் புஷ்பா தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்து அவர் வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர். அவரை சாராய வழக்கில் கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
    • 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலைகடத்தி வந்த வேலுர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 3 நாட்கள் அவகாசம் வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்ட 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாார்.

    இதனை தொடர்ந்து 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு 11 பேரையும் தனித்தனி அறையில்அடைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.

    விஷச்சாராயம் கடத்தலுக்கு பின்னணியில் யார் உள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த காவல் துறையினர், வருவாய்துறையினர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
    • விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (19) கல்லூரி மாணவர்.

    இவர் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தில் தனது உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது தாய் அனுசியாவுடன் சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் அனுசியா தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன் பலியானார். மாணவர் சூர்யா படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். மகன் கண் எதிரே தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிர் இழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 11 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்..பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்குமாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். இதற்காக நேற்று விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சாராய வியாபாரிகள் 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கண்டமங்கலம் ெரயில்வே மேம்பாலம், அரியூர், எம்.என்.குப்பம் ஆகிய 7 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • வாகன ஓட்டிகளும் மணிக்கணக்கில் காத்திருந்து சாலையில் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    கிருஷ்ணகிரி - நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி விழுப்புரம் இடையே தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கெங்கராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரையிலான புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையம், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோயில், கண்டமங்கலம் ெரயில்வே மேம்பாலம், அரியூர், எம்.என்.குப்பம் ஆகிய 7 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று கண்டமங்கலம் ெரயில்வே மேம்பால பணி நடக்கும் இடத்தில் குறுகிய சாலையில் ஜே.சி.பி. எந்திரம் பெரிய பள்ளம் தோண்டியதால் இன்று காலை முதல் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் ெரயில்வே கேட் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை முதல் பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையில் வரிசையாக நின்று கொண்டிருப்பதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மணிக்கணக்கில் காத்திருந்து சாலையில் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர்.
    • வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பைகள், கவர்களுக்கு தடைவிதித்தது. விழுப்புரம் நகராட்சி சார்பில் நகர சபைத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பா ட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் மஞ்சள் பை என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தும் வண்ணம் மஞ்சள் துணிப்பையும் பொதுமக்களுக்கு அடிக்கடி இலவசமாக வழங்கி விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள் இதனை மீறியும் ஹோட்டல்கள், சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள், காய்கறி கடைகள் பழக்கடைகளில் பிளாஸ்டிக் பை, கவர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கு மூல காரணமாக செயல்படும் மொத்த பிளாஸ்டிக் கைப்பை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சுரேந்தர் ஷா உத்தரவின்படி விழுப்புரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனகுமார் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த உரிமையாளர் ஹரிதாஸ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து விழுப்புரம் புதுவை சாலை உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக தெரியவந்தது. வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் செயல்களில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நேரிடும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இரு கடைகளிலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பை, கவர்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் ஆகும்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மே 2023-ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. தற்ேபாது நிர்வாக காரணங்களை முன்னிட்டு, வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    • மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.

    மேலும் சிலர் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 6 பேர், புதுவை மாநிலத்தை சேர்ந்த பிரபல மொத்த கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர், மெத்தனாலை விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் 2பேர் மற்றும் கள்ளச்சாராயத்தை வாகனத்தில் கடத்தி வந்த டிரைவர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகிலுள்ள பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஆவணங்களை மரக்காணம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான குழுவினர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கிருந்த போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்திற்கு சென்றனர். அங்கு சாராயத்தை குடித்துவிட்டு பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்வையிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அந்த சாலை பள்ளம் மேடாக இருப்பதால் சாக்கடை நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது.

    மேலும், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகி றார்கள். இது தொடர்பாக அங்கு வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளம் மேடாக உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
    • கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் பலியானார்கள். செங்கல்பட்டில் 8 பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு படிப்படியாக வீடு திரும்பி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மரக்காணத்தில் 13 பேர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டடர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மரக்காணம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை மற்றும் சென்னையில் இருந்து வந்த மெத்தனால் என்ற விஷசாராயத்தை குடித்து 13 பேர் உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சாராய வியாபாரிகள் அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் புதுச்சேரி முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி உள்ளிட்ட 12 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. சுனில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதியிடம் ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாராய வியாபாரிகள், கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் சில ஆவணங்கள் இல்லை என்றும் அவற்றை ஒப்படைக்கும் மாறும் மரக்காணம் போலீசாருக்கு சி.பி.சிஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும் கெமிக்கல் ஆலை உரிமையாளர்கள், முக்கிய சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். 12 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    சாராய வியாபாரிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
    • பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது உள்ளது ரங்கநாத பெருமாள் கோவில். இக்கோவில் பல்லவர் கால குடவரை கோவிலாகும். செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு வணங்கிய தெய்வம். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடந்தது. காலை, இரவு சாமி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வாக இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஏற்றப்பட்டு தேர் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராம ங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை யத்துறை மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ஜீவா னந்தம் மேற்பார்வையில் உபயதாரர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தி ருந்தனர். பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×