search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
    X

    பலியான அனுசியா.

    திண்டிவனம் அருகே தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

    • ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
    • விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (19) கல்லூரி மாணவர்.

    இவர் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தில் தனது உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது தாய் அனுசியாவுடன் சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் அனுசியா தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன் பலியானார். மாணவர் சூர்யா படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். மகன் கண் எதிரே தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×