என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி- மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
- மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர்.
மேலும் சிலர் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 6 பேர், புதுவை மாநிலத்தை சேர்ந்த பிரபல மொத்த கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர், மெத்தனாலை விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் 2பேர் மற்றும் கள்ளச்சாராயத்தை வாகனத்தில் கடத்தி வந்த டிரைவர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகிலுள்ள பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஆவணங்களை மரக்காணம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான குழுவினர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கிருந்த போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து 13 பேர் உயிரிழந்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்திற்கு சென்றனர். அங்கு சாராயத்தை குடித்துவிட்டு பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்வையிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்