என் மலர்
திருப்பூர்
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும், மலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் இன்று காலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர். அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது.
- தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
திருப்பூர்:
தூத்துக்குடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையிலேயே படுத்து தூங்கினார்.
இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை வெளியே வர தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசன் கடையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து வேகமாக பரவிய தீ காரணமாக பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிய தொடங்கியது. மேலும் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் முருகேசன் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளார். அவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீயில் எரிந்து சேதமான பட்டாசுகள் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமண லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மலை மீது பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் மழை பொழிவு குறைந்ததால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வழக்கத்தை விட அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அங்கு கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உலக ஆடை வர்த்தக சந்தையில் இந்தியாவின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மேலும் வலுவடைந்து வருவதை காட்டுகிறது.
- முந்தைய முதல் காலாண்டை விட தற்போதைய முதல் காலாண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
திருப்பூர்:
இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.11 ஆயிரத்து 251 கோடியே 30 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.10 ஆயிரத்து 800 கோடியே 20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய முதல் காலாண்டில் ரூ.35 ஆயிரத்து 861 கோடியே 10 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.32 ஆயிரத்து 115 கோடியே 50 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது 11.7 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 69 சதவீதமாக உள்ளது. இதனால் திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் முன்னேற்றப்பாதையில் பயணிப்பது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறும்போது, '2025-26-ம் முதல் காலாண்டில் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.12 ஆயிரத்து 193 கோடியை எட்டியுள்ளது. இது 2024-25-ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் ரூ.10 ஆயிரத்து 919 கோடிக்கு நடந்துள்ளது. இதை ஒப்பிடுகையில் முந்தைய முதல் காலாண்டை விட தற்போதைய முதல் காலாண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் ஏற்ற, இறக்கமான தேவைகளுக்கு மத்தியில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நிலையான செயல்பாட்டின் நேர்மறையான வளர்ச்சியின் அறிகுறியாகும். உலக ஆடை வர்த்தக சந்தையில் இந்தியாவின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மேலும் வலுவடைந்து வருவதை காட்டுகிறது.
இந்தியாவின் ஆடை ஏற்றுமதியின் இலக்கை நோக்கி தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கொள்கை பரிந்துரை, சந்தை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு போன்ற முயற்சிகள் மூலம் வரும் காலங்களில் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி தொடரும்' என்றார்.
- நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது.
- குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்ற புத்தக திருவிழா தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
குழந்தைகளுக்கு பொன் பொருளை கொடுப்பதை விட புத்தகங்களை பரிசாக கொடுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு தெளிவு கிடைக்கும். பள்ளி குழந்தைகள் பாட புத்தகங்களை திரும்பத்திரும்ப படிக்கின்றனர். நான் இப்பகுதியில் 2 ஆண்டுகள் ஆரம்ப கல்வி படித்துள்ளேன்.
நமக்கு அச்சம் இருக்க வேண்டும். அச்சமே வாழ்க்கையாக இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கும் வகையில் நாம் எடுத்துக்கூற வேண்டும்.
கிராம பகுதியில் உள்ள குழந்தைகள் சூழ்நிலை காரணமாக அச்சத்தை எதிர்கொள்கின்றனர். நகர் பகுதியில் இருக்கும் குழந்தைகள் அனைத்து வசதிகளும் கிடைப்பதால் அவர்களுக்கு அச்சத்தை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது உழைக்கும் இளம் வயதினர் அதிகமாக உள்ளனர். இன்னும் 35 ஆண்டுகளுக்கு பிறகு நாடு வளர்ச்சி இருக்காது. ஏனென்றால் உழைக்கும் வயது குறைந்து முதியவர்கள் தான் இருப்பார்கள். ஆகையால் தற்போது நம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல உழைக்கும் இளைஞர்கள், நல்ல அதிகாரிகள் தேவை.
குழந்தைகளுக்கு 3, 4 மொழிகளாவது கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிற மாநிலங்களில் இருந்து வருவோரிடம் பேச முடியும். மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும். ஆனால் சிறந்த மொழி தமிழ் தான் என்று கூறியுள்ளார். பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறப்போவதில்லை. நாம் புத்தகங்களை படித்த பிறகு மற்றவர்களுக்கு பரிசாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
- நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து செய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 23 நாட்களுக்கு மேல் அணை நிரம்பியுள்ளது.
இந்தநிலையில் பிரதான ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலமாக 450 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ஆயக்கட்டு சம்மதம் இல்லாத பகுதிகளுக்கு யாரோ ஒருவர் உத்தரவுக்கு இணங்க தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
மடத்துக்குளம் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து வரும் நிலையில் அப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் நீர்வளத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உள்ளூர் பகுதி விவசாயிகளின் மடைகளை அடைத்து உபரி நீரை பிரதான கால்வாய் வழியாக கடந்த 7 நாட்களாக திறந்து விட்டுள்ளனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே நீர்வளத்துறை அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து செங்கண்டிபுதூர் பகுதியில் பிரதான கால்வாயில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், தற்பொழுது முறைகேடாக விவசாயிகளின் மடைகளை அடைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே தண்ணீரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மடைகளை உடைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- கடந்த ஜூன் 16-ந்தேதி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஜூன் 16-ந்தேதி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து காணப்படுவதால் அணையில் இருந்து கடந்த 25 நாட்களாக ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள கேரள மாநிலம், மூணாறு, தலையாறு, மறையூர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணை நீர்வரத்துக்கு முக்கிய ஆறாக உள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மறையூர் அருகே அமைந்துள்ள தூவானம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1கோடியாகும்.
சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, கோவை இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனிச்சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவுப்படி திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவினர் நேற்று 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.
திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், மாநகரபோலீஸ் கமிஷனருமான ராஜேந்திரன் மேற்பார்வையில் மாஜிஸ்திரேட்டுகள் செந்தில்ராஜா, லோகநாதன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது.
- சித்ராதேவியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
- சித்ரா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கணவர், மாமனாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீதான விசாரணையை 11-ந்தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனை தொடர்ந்து, சித்ராதேவியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அந்த மனுவில் சித்ராதேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் விசாரணை நடந்தது. இதனை தொடர்ந்து, சித்ரா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.
- காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சீலநாயக்கன்பட்டி செரியன்காடு தோட்டம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான காற்றாலை எந்திரங்கள் நிறுவப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக காற்றாலையில் அமைக்கப்பட்டு இருந்த காற்றாடி எந்திரம் உடைந்து விழுந்தது. மேலும் 6 துண்டுகளாக சிதறியது. காற்றாலை அமைந்துள்ள பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.
சேதமடைந்த காற்றாலை எந்திரத்தின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும். காற்றாலை எந்திரம் அருகே உள்ள மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி கிராமமக்கள் அவதிக்கு உள்ளாகினர். எனவே காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கணவர், மாமனாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜாமின் மனு மீதான விசாரணையை 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் 10-ந் தேதி நடக்கிறது.
- மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அவினாசி:
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் 10-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பழங்கரை, அவினாசி லிங்கம் பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், தேவம் பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி,
ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப் பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






