என் மலர்
தூத்துக்குடி
- பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை வழியாக பீடி இலை, மஞ்சள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான ஏராளமான பொருட்கள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் ஈடுபடக் கூடியவர்களை கைது செயயப்படுவதும், பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதனை தடுக்க காவல்துறையும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் குலசேகரப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதி வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், மற்றும் குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மனப்பாடு வடக்கு கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 35 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் 85 மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயற்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணி.
- ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற விமான மூலம் தூத்துக்குடி வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாக பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் கஞ்சா, போதை பொருள் தமிழகத்தில் எங்கிருந்து வருகிறது? அவை இங்கு அதிகம் வருவதற்கு காரணம் குஜராத் மாநில துறைமுகம், முத்ரா துறைமுகம் இந்த 2 துறைமுகம் தான் முக்கியமான துறைமுகம் தான்.
பாகிஸ்தான் எல்லையில் இருக்கக்கூடிய துறைமுகமான முத்ரா துறைமுகத்தின் மூலம் ஆந்திரா வழியாக போதை பொருட்கள் தமிழகம் வருகிறது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்தியா பார்டர் போலீஸ், மத்திய உளவுத்துறை, சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப். போதைப்பொருள் தடுப்பு பிரிவு நார்காடிக் டிபார்ட்மெண்ட் இதெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டுக்குள் போதை பொருள் வருவதை தடுக்க இயலவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதானி துறைமுகத்தில் பல லட்சக்கணக்கான மூட்டை போதை பொருட்கள் பறிமுதல் செய்து வைத்திருந்தார்கள். அதற்கு ஏதாவது எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசை பார்த்து கேட்பாரா? எப்படி கைப்பற்றி வைத்திருந்த போதை பொருட்கள் காணாமல் போய்விட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மீண்டும் கான்லா துறைமுகத்திற்கும் முத்ரா துறைமுகத்திற்கும் மறு விற்பனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறதா என்று எடப்பாடி பழனிசாமி அவர் கூட்டணியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அரசிடம் கேட்க வேண்டும்.
ஒரு காலத்தில் போதை பொருள்கள் விற்பனை செய்யும்போது வழக்குகளை பதிவு செய்யப்படாது. இப்போது போதைப் பொருள்கள் கண்டு பிடித்தால் உடனுக்குடன் வழக்கு தமிழக அரசு, தமிழக காவல்துறை பதிவு செய்கிறது. எடப்பாடி பழனிசாமி செய்த ஆட்சிக்கும், தற்போது நடைபெறும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகவும், முழுமையான விவரத்தை கேட்டு அறிவதற்காகவும் ஆறுமுகம் மங்கலம் செல்ல உள்ளேன்.
காங்கிரஸ் எப்போதுமே ஆணவ படுகொலை எதிர்த்து தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என கூறி வருகிறது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இயற்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணி. கட்சித் தலைவர்களையே இழிவு படுத்தி பேசக்கூடிய பா.ஜ.க.வுடன், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது இயற்கைக்கு எதிரான கூட்டணி. அ.தி.மு.க.வின் கொள்கைக்கு முரணான கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தமிழக நலனின் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்கள் என்றார்.
பேட்டியின் போது ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும்.
- மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடர்வோம்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அங்கு அவர் பேசியதாவது:-
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் என பெயர்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் வைக்கிறது திமுக அரசு.
அம்மா மினி கிளினிக்குகளை திறந்தாலே பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடர்வோம்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் இரும்புக் கரம் கொண்டு போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழிப்போம்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும்.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் உயரவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அ.தி.மு.க. ஆட்சியின்போது தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பணிக்காக 250 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- பனைத்தொழிலாளர்களுக்கு அரசு உதவி, உப்பளத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தூத்துக்குடியில் இன்று உப்பு உற்பத்தியாளர்கள், நிறுவனத்தார், கப்பல் தொழிலளார்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அ.தி.மு.க. ஆட்சியின்போது தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பணிக்காக 250 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தி.மு.க. அரசும், நிலம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு முழு காரணம் அ.தி.மு.க. தான்.
தொழில் நகரமான தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தததும் அதற்கான பணியை செய்வோம்.
தூத்துக்குடியில் போக்குவரத்து அதிகளவு உள்ளதால் வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அது நிலுவையில் உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும்.
பனைத்தொழிலாளர்களுக்கு அரசு உதவி, உப்பளத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நான்தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் தரமான சாலை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிக நீளமுடையது தமிழ்நாட்டில் தான் என்ற நிலையை கொண்டு வந்தோம். எங்களது ஆட்சி காலத்தில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை மந்திரியாக இருந்த நிதின்கட்கரியிடம் பேசி தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படியே தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதேபோல் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காகவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 12 சாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைபோல பல்வேறு சாலைகள் வர அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் தான் காரணம் என்று ரிதன் கருதியுள்ளார்.
- உடலை அங்கேயே அந்த கும்பல் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப்-1 பண்டுகரை பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன்கள் மாரிப்பாண்டி(வயது 35), அருள்ராஜ்(30). இவர்கள் 2 பேரும் சமீபத்தில் மாயமாகி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வ.உ.சி. துறைமுக சாலையில் தனியார் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டுகரையில் அவர்கள் 2 பேரும் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர். தகவல் அறிந்து தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு மதன், தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 பேர் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து 2 பேரையும் கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் மாரிபாண்டியனின் உறவினரான கோவில்பிள்ளை நகரை சேர்ந்த ரிதன்(25) என்பவரின் சகோதரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மாரிபாண்டி மற்றும் அருள்ராஜ் ஆகியோர் தான் காரணம் என்று ரிதன் கருதியுள்ளார்.
இதையடுத்து கடந்த 28-ந்தேதி ரிதன் மற்றும் அவரது கூட்டாளிகளான முனீஸ்வரன், முகமது மீரான், சங்கர் மற்றும் ஒரு இளஞ்சிறார் உள்ளிட்டோர் சேர்ந்து மாரிபாண்டி மற்றும் அவரது சகோதரர் அருள்ராஜ் ஆகிய இருவரையும் கம்பு, கல்லால் தாக்கி உப்பாற்று ஓடைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு வைத்து 2 பேரையும் சரமாரி தாக்கியதில் அவர்கள் இறந்தனர். தொடர்ந்து அவர்கள் உடலை அங்கேயே அந்த கும்பல் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் கூடுதலாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று பண்டுகரை ஒடை பகுதியில் புதைக்கப்பட்ட வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது.
- ஒரு கும்பல் அருள் ராஜின் வீடு அருகே கஞ்சா போதையில் ரகளை செய்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.
இவருக்கு பாண்டியன் (வயது 36), அருள் ராஜ் (30), வேல்முருகன் என்ற 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதில் பாண்டியன் அடிக்கடி வெளியே சென்று விட்டு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அருள் ராஜ் திடீரென மாயமாகியுள்ளார். அவரை வேல்முருகன் தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் தெர்மல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனிடையே நேற்று அங்குள்ள பண்டுகரை ஓடை பகுதியில் நாய்கள் சண்டையிட்டவாறு குறைத்துக் கொண்டிருந்தது.
இதனை அப்பகுதியினர் பார்த்தபோது ஒரு வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது.
இது குறித்து உடனடியாக தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் சோபா ஜென்ஸி, ஜெயந்தி மற்றும் தாசில்தார் முரளிதரன், கிராம நிர்வாக அதிகாரி பிரேமலதா ஆகியோர் விரைந்து சென்றனர்.
இரவு நேரம் என்பதால் போலீசார் இன்று காலை அங்கு சென்று புதைக்கப்பட்ட உடலை தோண்ட முடிவு செய்தனர். இதற்கிடையே அருள் ராஜின் அண்ணனான பாண்டியனும் மாயமானார். இதனால் அவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று பண்டுகரை ஒடை பகுதியில் புதைக்கப்பட்ட வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கொன்று புதைக்கப்பட்டது அருள் ராஜ் மற்றும் அவரது அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து பாண்டியன், அருள் ராஜ் ஆகியோரது உடல்கள் அதிகாரிகள் முன்னிலையில் அடுத்தடுத்து வெளியே எடுக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் ஒரே கும்பல்தான் கொன்று புதைத்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த 26-ந் தேதி அருள் ராஜூக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அருள் ராஜின் வீடு அருகே கஞ்சா போதையில் ரகளை செய்துள்ளனர். இதை அருள்ராஜ் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று நள்ளிரவில் கும்பல் அருள் ராஜின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெளியே குண்டு கட்டாக பண்டுகரை பகுதிக்கு கடத்திச் சென்று தாக்கி கொலை செய்துள்ளனர்.
சத்தம் கேட்டு பாண்டியன் அங்கு சென்ற நிலையில் அவரையும் கும்பல் தாக்கி கொலை செய்துள்ளது. பின்னர் 2 பேரின் உடல்களையும் அங்கேயே புதைத்தது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று ஒருவரது கை வெளியே தெரிந்த நிலையில் நாய்கள் அந்தப் பகுதியில் வந்து கையை கடித்து இழுத்ததால் இந்த சம்பவம் வெளியாகி உள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர்.
- தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.
கோவில்பட்டி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் மேற்கொண்டுள்ளார்.
இன்று கோவில்பட்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ பேரவை போதகர்களை சந்தித்தார். பின்னர் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அதனைத்தொடர்ந்து தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அச்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும். கோவில்பட்டியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதே போல் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுகளில் கடலை மிட்டாயை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சிறு, குறு தொழில்கள் அதிகமாக செயல்பட்டால் தான் அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. எப்போதெல்லாம் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த தொழிலுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருந்தது.
இதனை குறைக்க சிறு, குறு தொழில் துறையினர் எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை செய்தோம். தமிழகத்தில் முன்பு தீக்குச்சி இறக்குமதிக்கு 5 சதவீதம் மாநில அரசு வரி இருந்தது. இதனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 5 சதவீத வரியையும் ரத்து செய்தார்.
தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர். இந்த தொழிலை காக்க பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்த அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் இதுகுறித்து கொண்டு சென்றதாக கூறியுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலை மிட்டாய் என்றாலே கோவில்பட்டி தான் என்கிற அளவுக்கு இங்குள்ள கடலை மிட்டாய்கள் தரமானது என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மற்ற பகுதிகளில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என போலியாக லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு கோவில்பட்டியில் உள்ள கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் லேபிள் தயாரித்து சோதனை முறையில் அதனை நடைமுறைபடுத்தலாம்.
நாடு செழித்தால் தான் உற்பத்தி பெருகும். தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். இதற்காகத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் நீர்மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சி அதனை கிடப்பில் போட்டு விட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தாமிரபரணி-வைப்பாறு திட்டம் நிறைவேற்றப்படும்.
இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவு விளைவிக்கப்படுவதாக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார். தமிழகத்தில் 3 எத்தனால் தொழிற்சாலைகள் தொடங்க திட்டமிடப்பட்டு 2 தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு 40 டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதற்கு வருங்காலத்தில் தினமும் எத்தனால் தொழிற்சாலைக்கு 12 ஆயிரம் டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதனால் அதன் விற்பனையும் அதிகரிக்கும்.
அதேபோல் பருத்தியும் அதே அளவு விளைவிக்கப்படுகிறது. தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் சிறக்க அ.தி.மு.க. துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.
- சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான்.
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
* கவினும் நானும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.
* காதலிக்கிறாயா என எனது அப்பா கேட்டார். அப்போது இல்லை என கூறிவிட்டேன்.
* செட்டிலாக 6 மாதம் டைம் வேண்டும் என கவின் தெரிவித்ததால் அப்பா கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.
* அப்பாகிட்ட சுர்ஜித் இந்த தகவலை சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டார்.
* சகோதரர் சுர்ஜித்துக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் தந்தையிடம் கூறிவிட்டார், அவர் கேட்டபோது காதலிக்கவில்லை என தெரிவித்தேன்.
* சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான்.
* உங்கள் திருமணம் முடிந்தால்தான் எனது வாழ்க்கையை திட்டமிட முடியும் எனக்கூறி சுர்ஜித் அழைத்துள்ளான்.
* கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வருமாறு சகோதரர் சுர்ஜித் கூறியது வீட்டிற்கு வந்து பேசும்போது தான் தெரிந்தது.
* அதன்பின்னர் கவினுக்கும் சுர்ஜித்தும் இடையில் என்ன விதமாக பேச்சுவார்த்தை நடந்தது எனத் தெரியவில்லை.
* 28-ந்தேதி மாலையில் தான் அவனை வரச்சொல்லி இருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
* இஷ்டத்திற்கு யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.
- கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
* எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும்.
* கவின் கொலைக்கும் எனது தாய் - தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
* எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவு குறித்து தெரியாமல் தவறான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
* கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்.
* கவின் கொலையில் தனது தாய், தந்தையை தொடர்புபடுத்த வேண்டாம்.
* எனது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). என்ஜினீயரான இவர் சென்னையில் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கவின் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரது மகளுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் கடந்த 27-ந்தேதி கவினை பாளையங்கோட்டையில் வைத்து வெட்டிக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்யும் வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4-வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக்கொள்வதாக கவின் தந்தை சந்திரசேகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
- காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
- கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். காசி பாண்டியன் காவல் ஆய்வாளர் இல்லை, கூலிப்படை தலைவன். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, காசி பாண்டியனும், கவினை கொலை செய்த கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கவினை மிரட்டியது போல் 2023-ல் பா.ஜ.க. பிரமுகர் ஜெகன் கொலையிலும் காசிபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகார் கூறப்படுகிறது.
- சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார்.
- பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கவின் ஆணவ படுகொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கவின் கொலை தொடர்பாக கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை தொடர்ந்து சுர்ஜித்தின் தந்தையான சிறப்புக் காவல் படை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆணவ படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள கவின் வீட்டிற்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார். அவருடன் பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.






