என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • திட்ட தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
    • 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் குழுவில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

    முன்னாக திட்டத்தின் தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை, சில்வர் பால் வாலி ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி உநுப்பினார்கள் பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், செங்குட்டுவன், லோகநாதன், கலையரசன், குழு நிர்வாகிகள், உறுப்பினார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
    • படுகாயமடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் கூலிதொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி ( வயது 41) விவசாயி. இவரது வீட்டில் அதே பகுதி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுபேந்திரன் ( வயது 39) என்பவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்ததால் அவர் சுபேந்திரனை வேலைவிட்டு நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுபேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி அரிவாளால் சுபேந்திரனை வெட்டினார். அதில் படுகாயம் அடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பரவக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வெட்டி கொலை செய்யப்பட்ட சுபேந்திரனுக்கு கவிதா என்ற மனைவியும், 1 ஆண் ,2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.

    • கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

    மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

    இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.

    சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.

    • புத்தாண்டு கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.
    • ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொள்வர்.மேலும் தேவாலயங்கள் போன்றவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் அருகிலுள்ள ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் விக்கி என்கிற கணேசன் வயது 20.

    ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் திருவாரூர் ெரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடந்து ெரயில்வே காலணி பகுதிக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ெரயில் மோதியதில் சிறிதுரம் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கணேசன் உடல் சிதறி தண்டவாளத்திலேயே உயிரிழந்து கடந்துள்ளார்.

    அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ெரயிலின் டிரைவர் ெரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இளைஞர் எந்த ெரயில் மோதி உயிரிழந்தார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று ெரயில் மோதி இளைஞர் உடல் சிதறி பலியான சம்பவம் என்பது ெரயில்வே காலணி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உலக பொதுமறைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.
    • ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கிளை தொடக்க விழாவும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் ஆனந்த குருகுலம் என்கின்ற ஆன்மீக கல்வி நிலையம் தொடங்கும் விழா பிறவிமருந்தீசர் கோவில் மங்களநாயகி மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் விமலா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜா, வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார், தொழிலதிபர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார். ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் கனகராஜன் அறிமுக உரையாற்றினார். குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆனந்த குருகுலம் என்ற அமைப்பினை இந்து சமய அறநிலையத்துறை மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசும்போது,

    குழந்தைகளுக்கு இளம் பிராயத்திலேயே தேவாரம், திருவாசகம் போன்ற பன்னிரு திருமுறைகளையும் திருக்குறள் போன்ற உலகப் பொதுமறைகளையும் கற்றுக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. வருங்காலத்தில் நல்ல விளைவுகளை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்துவார்கள் என்பது நிச்சயமான ஒன்று. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேவாரம் பயிற்றுவிக்கும் ஓதுவார்களோடு இணைந்து ஒரு நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கினால் நமது நாடு உலக அரங்கில் இன்னும் மிகச்சிறந்த நாடாக திகழும். வந்திருக்கின்ற அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை இது போன்ற ஆன்மீக கல்விகளை போதிப்பதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். பெற்றோர்கள்தான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து முன்னாள் நகர் மன்ற தலைவர் பாண்டியன், ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் சிவக்குமார், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவர் ஸ்ரீதரன் ,நகரமன்ற உறுப்பினர் எழிலரசன், மாடன் நர்சரி பள்ளி நிர்வாகி முருகானந்தம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தணிகாசலம், பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக திருவாரூர் ஆனந்த குருகுல மாணவர்களின் தேவார இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் கிளைச் செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார்.
    • இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. முஸ்லிம்களின் முக்கிய வழிபாட்டு தளமாக கருதப்படும் நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லிம்கள் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த சேக்நூர்தீன் (வயது 34) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று கந்தூரி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று இரவு நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் எடையூர் அடுத்த பின்னத்தூரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளிவந்தது. உடனே காரை நிறுத்தி விட்டு அனைவரும் வெளியேறினர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட அனைவரும் எந்தவித தீக்காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • குப்பை மேலாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான்.
    • கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் துணிப்பை வழங்கும் விதமாக 'துணிப்பை தூக்க துணிவோம்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நகராட்சி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமை தாங்கினார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பையை வெளியிட்டு பேசுகையில்:-

    தற்போது சுற்றுச்சூழலு க்கும், குப்பை மேலாண்மைக்கும் பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான், இதனால் நீர்நிலைகள், வடிகால், கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    இதன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தவும், தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள நத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 39).

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனிடையே சம்பவத்தன்றும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேசன்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா?
    • புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அகரதிருநல்லூர், இலவங்கார்குடி, விளமல், தியானபுரம் ஆகிய பகுதியிலுள்ள நியாய–விலைக் கடையினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    அனைத்து நியாய விலைக்கடையில் எடை எந்திரம் சரியாக இயங்கு–திறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அதில் தண்டலை ஊராட்சி, விளமல் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் புழுங்கல் அரிசி 1050 கிலோ கூடுதலாக இருப்பு இருப்பதனை கண்டறியப்பட்டு ரூ.26 ஆயிரத்து 250 அபாரதம் விதித்தார்.

    இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இவ்ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, தாசில்தார் நக்கீரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பள்ளிக்கூட சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டிருந்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன்அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரையாண்டு விடுமுறை காரணமாக அப்பள்ளியில் மைதா னத்தில் மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பந்து பள்ளிக்கூட கட்டிடம் அருகில் விழுந்தது. பந்தை மாணவர்கள் எடுக்க சென்ற போது பள்ளிக்கூடத்தின் சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டு இருந்தது.

    இது குறித்து மாணவர்கள் உடனடியாக தங்களது பெற்றோர்களிடம் கூறியு ள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து திருவாரூர் தீயணைப்பு துறையி னருக்கு தக வல் தெரிவிக்க ப்பட்டது.

    உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.

    இரவு நேரம் என்பதால் ஒற்றை டார்ச் லைட் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணைய தளங்க ளில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்ட துணை இயக்குநர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய மருத்துவமனை கட்டடமாக தகவமைப்பு செய்து தர கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில், வரப்பெற்ற 204 கோரிக்கைகளில், 48 கோரிக்கைகள் வட்டார அளவிலும், 143 கோரிக்கைகள் மாவட்ட அளவிலுள்ள நிதியின் மூலமாக தீர்வு காணும் வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இக்கோரிக்கைகளில் 13 கோரிக்கைகள் மட்டும் மாநில நிதி மூலம் மட்டுமே தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. 13 கோரிக்கைகளுக்கு உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

    திருவாரூர் பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் செயல்பாடின்றி உள்ளது. அதனை அகற்றிவிட்டு 100 படுக்கைகள் கொண்ட புதிய மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும். விஜயபுரம் மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.

    மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீரை என்பது சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். இதன்மூலம் திருவாரூர் பொதுமக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
    • முன்னாள் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரையா ற்றினார்.

    கட்சியின் ஒன்றிய செயலாளர் வி. ஜவகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில கட்டு ப்பாட்டு குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட செயலாளருமான வை. செல்வராஜ் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. மாரிமுத்து, மாநில குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே. உலகநாதன், வட்டார ஊராட்சி தலைவரும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான அ. பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஞானமோகன், பி.வி சந்திர ராமன் கே ஆர் ஜோசப் விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோ ஜெயபால் விவசாய தொழிலாளர் சங்கத்தின்ஒன்றிய செயலாளர் எம். மகாலிங்கம்

    மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சு. தமிழ்ச்செல்வி ராஜா மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ் கவிதா மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே சுஜாதா வட்டார ஊராட்சி உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி இராயநல்லூர் ஊராட்சி தலைவர் எம் ரஜினி சுப்பிர மணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.ஜெயபால் வங்கிஊழியர்சங்கத்தின் பொறுப்பாளர்கள் தோழர் சி.பாஸ்கர், தோழர் எஸ்.ராமச்சந்திரன்உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

    ×