என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவருக்கு இடையில் சிக்கிய ஆட்டை போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்
    X

    சுவருக்கு இடையில் சிக்கிய ஆட்டை போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

    • பள்ளிக்கூட சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டிருந்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன்அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரையாண்டு விடுமுறை காரணமாக அப்பள்ளியில் மைதா னத்தில் மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பந்து பள்ளிக்கூட கட்டிடம் அருகில் விழுந்தது. பந்தை மாணவர்கள் எடுக்க சென்ற போது பள்ளிக்கூடத்தின் சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டு இருந்தது.

    இது குறித்து மாணவர்கள் உடனடியாக தங்களது பெற்றோர்களிடம் கூறியு ள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து திருவாரூர் தீயணைப்பு துறையி னருக்கு தக வல் தெரிவிக்க ப்பட்டது.

    உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.

    இரவு நேரம் என்பதால் ஒற்றை டார்ச் லைட் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணைய தளங்க ளில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×