என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • தட்டுகளில் உளுந்தை நிரப்பி 9 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டார்.
    • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த திருநா கேஸ்வரம் நாகநா தசாமி கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

    அவருக்கு கோவில் அறநிலையத்துறை சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, கோவிலில் தனி சன்னதியில் அருள்பா லித்து வரும் நாககன்னி, நாகவல்லி சமேத ராகுப கவானுக்கு மஞ்சள், சந்தனம், பால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அவர் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசித்தார்.

    ராகு தோஷம் நீங்க தட்டுகளில் உளுந்தை நிரப்பி 9 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தார்.

    தொடர்ந்து, அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபாட்டார்.

    பின்னா, திருபுவனத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தர்மசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் கோவிலுக்கு சென்று கம்பகரேஸ்வரர், அம்பாள் மற்றும் சரபேஸ்வரர் சன்னதிகளில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.

    முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், இழப்புகள் குறித்து மதுக்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்கள் பாலக்குமார், கோவிந்தராஜ், ஆசிரியர் தேவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    • கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை.
    • 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு வழங்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பொறுப்பாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பாபநாசம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலைகளுக்கான கூலி பாக்கி வழங்கப்படவில்லை, 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் இழப்பீடு தொகையாக 5 தவீதம் கூடுதலாக சேர்த்துழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் தஞ்சை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர் அன்புமணி, செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், மனோகரன் , வினோத், ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர்
    • ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கான கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் 100 அடியை தாண்டி இருந்த தண்ணீர் நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக குறைந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது . இதனால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகிவிட்டது. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 78486 ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டன. இவற்றில் 49000 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிந்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் போதிய மழைப்பொழிவு இல்லாததாலும் பிரபாகரன் குறுவைப் பயிர்கள் கருகி வீணாகி விட்டது. இந்த ஆண்டு 33 சதவீதம் அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் வேளாண் துறை, புள்ளியல் துறை அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தனர். அதில் அறுவடை செய்யும்போது ஹெக்டேருக்கு சராசரியாக 6000 கிலோ நெல் கிடைத்த இடத்தில் தற்போது சராசரியாக 4232 கிலோ நெல் தான் கிடைத்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் கூறும்போது:-

    முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை குறுவையில் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பெருமளவில் குறுவைப் பயிர்கள் வீணாகிவிட்டது. அடுத்து சம்பா சாகுபடி தொடங்கலாமா என்பதே தெரியாத நிலையில் உள்ளோம். ஏக்கருக்கு 45 மூட்டை கிடைத்த நிலையில் தற்போது 30 முதல் 36 மூட்டை தான் கிடைக்கிறது. இதற்கு முன் இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது கிடையாது. இலக்கிய மிஞ்சி குறுவை சாகுபடி செய்தும் தற்போது அது பயன் இல்லாமல் போய்விட்டது என்றனர்.

    • சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார்.

    கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பூதலூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில போராட்ட குழு செயலாளரும், தஞ்சை மேற்கு மாவட்ட தலைவருமான சிமியோன் சேவியர்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட துரித நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புகளை கைகளில் ஏந்தியப்படி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, அனந்தமுருகன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் பழ.இராசேந்திரன், சாமி.கரிகாலன், இராசு.முனியாண்டி, வைகறை, இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டீபன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முத்துராஜன், தெற்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துகிரு ஷ்ணன் நன்றி கூறினார்

    • பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
    • வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி?

    தஞ்சாவூர்:

    பேரிடர்களினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 1989-ம் ஆண்டு முதல் அக்டோபர் 13-ம் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக ஐக்கிய நாடு பொது சபையினால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    பேரிடர்களின் தன்மையை அறிந்து அதன் அபாயத்தை எவ்வாறு குறைப்பது, பேரிடர் காலத்தில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

    இந்த நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

    இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியானது தஞ்சாவூர் அழகி குளத்தில் முடிவடைந்தது.

    மன்னர் சரபோஜி கல்லூரி , பாரத் கல்லூரி, மருதுபாண்டியர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி, டாக்டர் நல்லி குப்புசாமி மகளிர் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ- மாணவிகள் பேரிடர் குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.

    பேரணியின் முடிவில் அழகிகுளத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியினை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி, செல்வம் மற்றும் தீயணைப்பு, மீட்புத்துறையினர், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் ஆத்தபுத்திரா தன்னார்வலர்களுடன் இணைந்து வழங்கினார்கள்.

    இதில் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு செயல்களை பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் செய்து காண்பித்தனர்.

    இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி, தாசில்தார் சீமான், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர் , ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ், 108 ஆம்புலன்ஸ் மேலாளர் விமல், பேரிடர் பயிற்றுனர்கள் பெஞ்சமின், சுரேஷ், மாநகர உறுப்பினர் செந்தில்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2-ம் நாளான 16-ந் தேதி மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகின்றன.
    • அம்மனுக்கு காலை அபிஷேக ஆராதனையும், மாலை சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலைவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    அன்றைய தினம் பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படுகிறது.

    2-ம் நாளான 16-ந் தேதி மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகின்றன.

    இதேபோல் 3-ம் நாளான 17-ந் தேதி சதஸ் அலங்காரமும், 18-ந் தேதி காயத்ரி அலங்காரம், 19-ந் தேதி அன்னபூரணி அலங்காரம், 20-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 21-ந்தேதி சரஸ்வதி அலங்காரம், 22-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், 24-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படுகிறது.

    நவராத்திரி விழாவின்போது தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    • மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.
    • பேரணியானது நகரின் முக்கிய இடங்களின் வழியாக சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    தஞ்சாவூர்:

    உலக வனவிலங்கு தின விழாவை முன்னிட்டு தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சிவகங்கை பூங்கா நுழைவாயில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார்.

    தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மலர்விழி முன்னிலை வகித்தார். பேரணியை காலநிலை திட்ட அலுவலர் ஸ்ரீதர்ஷிணி முடித்து வைத்தார்.

    இதில் கல்லூரி மாண விகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வனம் காப்போம், உயிர் காப்போம், வனவிலங்குகளை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    செல்லும் வழியில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.

    பேரணியானது பல்வேறு வழியாக சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியை விலங்கியல் துறை தலைவர் சந்திரகலா ஒருங்கிணைத்தார்.

    இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் ராஜசேகரன், கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் சுகுமாறன், மணிவண்ணன், துரைராஜ், நாசர், வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
    • 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவிலில் ஒன்றாகத் திகழ்கிறது.

    மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    இங்கு பிரதி அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் மகாளய அமாவாசை சனிக்கிழமை வருவதால் அன்றைய தினம் மூலை அனுமாரை தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்றத்தை பெறலாம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நாளை ( சனிக்கிழமை ) மகளாய அமாவாசையை முன்னிட்டு காலை7.30 இலட்சம் ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து மூலை அனுமாருக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்குபழங்களான சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    இதையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் நிகழ்ச்சியும் அதையடுத்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ,உதவி ஆணையர் கவிதா,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை கைங்கர்யம் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தெய்வேந்திரன்.

    இவரது மனைவி கோமளவல்லி (வயது 48).

    சம்பவத்தன்று காலையில் இவர் தனது பிள்ளையின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி உள்ளே சென்று பார்த்தார்.

    பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்த அவர் தஞ்சை தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மகா நந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது.

    மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டி டக்க லைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதோடு உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.

    பெரிய கோவிலில் உள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தப்படும்.

    அதன்படி நேற்று பிரதோஷம் என்பதால் மகாநந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ரூ.14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்குமாறு கூறினாா்.
    • போலீசார் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் நாஞ்சி க்கோட்டை சாலையில் புதிதாகக் கட்டடப்படும் ஆஸ்பத்திரிக்கு தடையில்லாச் சான்று பெற அதன் உரிமையாளா் அரண்மனை வளாகத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட உதவி அலுவலா் முனியாண்டியிடம் (வயது 56) கடந்த செப்டம்பா் 13 ஆம் தேதி விண்ணப்பித்தாா்.

    அப்போது ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட முனியாண்டி, பின்னா் அதில் ரூ. 1000 குறைத்துக் கொண்டு ரூ. 14 ஆயிரத்தை பழைய பஸ் நிலையத்துக்கு வந்து தருமாறு கூறினாா்.

    ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவமனை உரிமையாளா் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவினரிடம் புகாா் செய்தாா்.

    இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் துணைக் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், பத்மாவதி ஆகியோர் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.

    அப்போது பழைய பஸ் நிலையத்துக்கு வந்த முனியாண்டி கைப்பேசி மூலம் மருத்துவமனை உரிமையாளரை வரவழைத்து ரூ. 14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்கு மாறு கூறினாா்.

    அதன்படி உரிமையாளா் பணத்தை வைத்ததும், புறப்பட முயன்ற முனியா ண்டியை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் முனியாண்டியை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து முனியாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×