என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நவராத்திரி கொலுவை பார்வையிடும் பக்தர்கள்
- நவராத்திரி கொலுப்படிகள் அமைக்கும் பணி தொடங்கியது.
- புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது.
தஞ்சாவூர்:
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரையும் போற்றி வணங்கும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது. நவராத்திரி கொண்டாடும் ஒன்பது நாட்களுக்கும் அம்பாளை அழைக்கும் விதமாக கொலு வைக்கும் வைபவம் கோயில்கள் மற்றும் வீடுகளில் நடக்கும்.
இதில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை அழைத்தும் , இறுதி 3 நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறவும் போற்றி வழிபடுகின்றனர்.
அதன்படி நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. வரும் 23-ம் தேதி சரஸ்வதி பூஜையும், 24-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி கொலுப்ப டிகள் அமைக்கும் பணி தொடங்கியது.
தஞ்சை -நாகை சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில், மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய கலை, கலாச்சாரம் ,வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலும், விநாயகர், பார்வதி தேவியுடன் சிவபெருமான், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், துர்க்கை, நடராஜர் ,கருப்பசாமி, தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.
இதேபோல் பல்வேறு வீடுகளிலும் பெண்கள் விரதம் இருந்து கொலு வைக்க தொடங்கியுள்ளனர். அஷ்டலட்சுமி ,ஆண்டாள், சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி என பல்வேறு வகையாக பொம்மைகள் வைத்து அலங்கரித்து மங்களப் பொருட்கள் வைத்து அம்பாளை சிறப்பு பூஜை செய்து வீடுகளுக்கு அழைக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்