என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நடக்கிறது.
    • 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நடக்கிறது.

    காரைக்குடி அருகே உள்ளது குன்றக்குடி. இங்கு புகழ் பெற்ற சண்முகநாதபெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு வெள்ளிக்கேடயத்தில் சண்முகநாதபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    வருகிற 30-ந்தேதி வள்ளி நாயகி திருமணம் நிகழ்ச்சியும், 1-ந்தேதி தங்க ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ந்தேதி இரவு 8 மணிக்கு தெப்பம் மற்றும் வெள்ளி ரதம் நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 3-ந்தேதி காலையில் தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்ட நிகழ்ச்சியும், இரவு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந்தேதி பங்குனி உத்திர விழாவையொட்டி காலை உத்திரம் தீர்த்த விழாவும், பக்தர்கள் காவடி, அக்னி காவடி, அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் ஊராட்சியில் உதவி இயக்குநர் ஆய்வு நடந்தது.
    • அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி மாங்குடி கடந்த மாதம் பொறுப்பேற்றார்.

    பின்னர் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவர் பாண்டியராஜன் கவுன்சிலர்கள் சங்கரிபாபு, லட்சுமி, நல்லம்மாள், செல்வராணி, பாபு, வள்ளி, ரஞ்சித்குமார், ஆனந்தம், ராமஜெயம், ரேவதி, பாண்டிச்செல்வம் ஆகியோர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முறைப்படி உறுப்பி னர்களுக்கு தெரியப்படு த்தவில்லை என்றும், இதில் சட்ட விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது என்றும், புதிய வீடுகளுக்கான வரை பட அனுமதியில் முறை கேடுகள் தொடருகிறது.

    சொக்கலிங்கபுரத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து பாதை அமைத்து கொடுத்தது தவறானதாகும். வைரவபுரத்தில் கோவில் அருகே இருந்த நாடக மேடையை கள ஆய்வு மேற்கொள்ளாமலும் மன்ற அனுமதி இல்லாமலும் இடிக்கப்பட்டது என்றும் பல்வேறு காரணங்களை கூறி வெளிநடப்பு செய்தனர்.

    அதை மனுவாக கலெக்டருக்கும் அனுப்பி வைத்தனர்.கலெக்டர் உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், சங்கரா புரம் ஊராட்சி அலுவல கத்தில் ஆய்வு செய்தார்.

    அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோசப் அருள்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    உதவி இயக்குநர் குமார் கூறுகையில், கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்துள்ளேன். புகார் அளித்தவர்களிடம் அதற்கான ஆதாரங்களை கேட்டுள்ளேன்.

    வருவாய் கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டபிறகு எனது அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிப்பேன் என்றார்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடியின் ஆதரவு கவுன்சிலர்கள் கூறுகையில், பொதுமக்களின் வேண்டு கோளின் பேரிலேயே சொக்கலிங்கம் நகரில் பூங்கா இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.

    வைரவபுரம் நாடக மேடை பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து இருந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் ரேசன் கடைகட்டுவதற்காக அப்புறப்படுத்தப்பட்டது.

    கட்டிட வரைபட அனுமதி அவ்வப்போது மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அனுமதி வழங்குவது வழக்கம். துணை தலைவர் மீது கடந்த காலங்களில் உள்ள புகாரை உதவி இயக்குநரிடம் மனுவாக அளித்துள்ளோம் என்றனர்.

    ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி கூறுகையில், நான் பதவியேற்று சில நாட்கள்தான் ஆகிறது. இன்னும் 1½ வருடங்களே உள்ள நிலையில் துணை தலைவர் மற்றும் சில உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மக்கள் நல பணிகளை செய்ய முடியவில்லை.பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.அனைவருடன் இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.

    • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் முத்து விநாயகர் கோவில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தன.

    பரிவார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பழனியப்ப தேவர், சோலை மணி தேசிகர் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள், செய்திருந்தனர்.

    இதில் மகிபாலன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 24½ கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம்-பிரசாதம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காங்கிரஸ் அறப்போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி மகர்நோன்பு திடலில் உள்ள காந்தி சிலை அருகே மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்.

    முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், காரைக்குடி நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத் தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி.

    மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ். ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செய லாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி. அருணா.

    மணச்சை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன் இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
    • வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். மறுநாளில் இருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் வந்து இலவசமாக பார்வையிட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் உள்நாட்டினை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படும். வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லாரி மீது பைக் மோதல்; முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.
    • சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது45), இவர் ராணுவத்தில் பணியாற்றி விட்டு தற்போது சிவகங்கை யில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஜெயசங்கர் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றார். அவர் மானா மதுரை அருகே கொன்னக் குளம் விலக்கு பகுதியில் சென்றபோது சாலை யோரத்தில் நின்று கொண்டி ருந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசங்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந் தார்.

    இந்த விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    • சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத்தில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கேஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத் தில் நடக்கிறது.

    மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரா ளுமன்ற தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), ந.செந்தில் (காரைக்குடி), மருத்துவர் யாழினி (சிவ கங்கை). எஸ்.தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தல் பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை வழங்குகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்துவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடநதது.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி 5 விளக்கு அருகில் எம்.எல்.ஏ. மாங்குடி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத்தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், நகர்மன்ற கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி, மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, மாநில மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீவித்யா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ்.ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி, அருணா, மணசை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன், இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சி-கருத்தரங்கு நடந்தது.
    • ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

    வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டு தேவைக்கு என இளைஞர்களுக்கான வேலை அளிக்கும் வகையில் வேளாண்மை தொழில் முனைேவார்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ள காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் வனத்துறையின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.84.30 லட்சம் மதிப்பீட்டில் 6101 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் கருவிகள், வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி , தமிழரசி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வழங்கினர்.

    இதில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை தொழில்நுட்ப முகமை (அட்மா), வேளாண்மை துணை இயக்குநர்கள் சுருளிமலை, பன்னீர்செல்வம், செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாடிபில்டிங் அமைப்பு தொடக்க விழா நடந்தது.
    • அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி தாப்பா கார்டனில் பாடிபில்டிங்கின் சிவகங்கை மாவட்ட பிஸிக் அலையன்ஸ் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் டாக்டர் பிரபு வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார்.முன்னாள் மிஸ்டர் இந்தியா மற்றும் தமிழ்நாடு பிஸிக் அலை யன்ஸ் தலைவருமான பொன்னம்பலவாணன் முன்னிலை வகித்தார்.

    நடிகரும் பாடிபில்டிங் பயிற்சியாளருமான பரத்ராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை பேசுகையில், விளையாட்டு வீரர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோரும் விளையாட்டு.மைதா னங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.

    மாவட்ட தலைவர் டாக்டர்.பிரபு பேசும்போது, பாடிபில்டிங்கில் உச்ச போட்டியான ஒலிம்பி யாவில் கலந்து கொள்வதற்கு முதல்படி இந்த மாவட்ட பிஸிக் அலையன்ஸ் அமைப்பாகும்.இதன்மூலம் மாவட்ட, மாநில, தேசிய, உலக போட்டிகளில் வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடந்த பாடிபில்டிங் போட்டிகளை நமது மாவட்டத்திலும் வரும் காலங்களில நடத்துவோம்.இதன்மூலம் பாடிபில்டி ங்கில் அதிகளவு இளைஞர் களை கவர முடியும்.மேலும் பாடிபில்டிங் வீரர்களுக்கு அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    தொழிலதிபர் பி.எல்.பி.பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் துணை தலைவர் ராமசாமி, பொருளாளர் காளிதாசன், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், தொழிலதிபர்கள் விசாலம் சிட்பண்ட்ஸ் உமாபதி, மகரிஷி கல்வி குழுமம் அஜய்யுக்தேஷ், ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், சூர்யா அரிசி ஆலை கணேஷ் கிருஷ்ணன், மூன்ஸ்டார் லெட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், மல்லீஸ் கிச்சன் திருப்பதி, கங்க அம்பரீஷ், உள்பட அலையன்ஸின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே இருந்து வந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பதவியேற்றவுடன் நகரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நகராட்சி பகுதியில் உள்ள 93 மண் சாலைகளை ரூ. 653.95 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    23-வது வார்டில் நடந்து வரும் சாலை பணிகளை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி, நல்லுப்பாண்டி ஆகியோர் பார்வையிட்டனர். 

    • சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மன்றக்கூட்டம் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    10-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி கடந்த ஒரு ஆண்டாக நகராட்சி நிர்வாகம் தனது வார்டில் வளர்ச்சி பணிகளை செய்யாமல் புறக்கணிப்பதாக புகார் கூறும் வாசகங்கள் கொண்ட பதாகையை ஏந்தி வாயில் கருப்புதுணி கட்டி வந்து கூட்டரங்கில் தரையில் அமர்ந்து மவுனமாக இருந்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சி லர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பெரும்பா லான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர், கழிவுநீர், வடிகால் சாலை, தெருவிளக்கு அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியு றுத்தினர். கவுன்சிலர் சண்முகப்பிரியா பேசுகையில், ஆனந்த வல்லி சோமநாதர் சுவாமி கோவிலை சுற்றி தேரோடும் வீதிகளில் அதிகரித்து வரும் இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் வீதிகளில் பழுதடையும் தெருவிளக்குகளை சரி செய்ய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தலைவர் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:-

    மானாமதுரை நகராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வீதிகளை சுத்தம் செய்வதில் ஏற்பட்டிருந்த தொய்வு தற்போது படிப்படியாக குறைந்து துப்புரவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    வரும் காலங்களில் துப்புரவுப்பணி இன்னும் சிறப்பாக நடைபெறும். அனைத்து வீதிகளிலும் புதிய தெருவிளக்குகள் அமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மானாமதுரையில் விரைவில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக ரூ.5லட்சம் மதிப்பீட்டில் திருவிழாவிற்காக பொதுமக்கள் கூடும் நகர் பகுதி, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வியாபாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகராட்சியில் தொழில் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எந்த வார்டும் புறக்கணிக்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. உறுப்பினரின் வார்டில் திட்டப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×