என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
- சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கு வதற்கான ஒன்றிய, நகர, பேருர் செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
அதன்படி காலை 10 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தேவகோட்டை நகர், வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டமும், பகல் 12 மணிக்கு காரைக் குடி நகர் தி.மு.க. அலுவல கத்திலும், மாலை 4 மணிக்கு சொர்ணமகாலில் செயல்வீரர்கள் கூட்டம் பொறுப்பாளர் செந்தில் குமார் முன்னிலையில் நடக்கிறது. இதில் சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் முன்னிலையில் காலை 10 மணிக்கு யாதவா திருமண மண்டபத்திலும், 12 மணிக்கு இன்பம் மகாலிலும், மாலை 4 மணிக்கு முத்துகணேஷ் மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.
இதில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், கல்லல், நெற்குப்பை, பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
சிவகங்கை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் யாழினி முன்னிலை யில் காலை 10 மணிக்கு ஆரோ மகாலிலும், 3 மணிக்கு திருப்பத்தூர் ஏ.எம்.கே. மகாலிலும், 4மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை, சிவகங்கை, திருப்புவனம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் பார்வையாளர் தினேஷ் முன்னிலையில் திருப்புவனம் மருது பாண்டியர் மண்டபத்தில் காலை 10 மணிக்கும், 4 மணிக்கு இளையான்குடி எம்.எம்.மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பிரசார பயண குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மானாமதுரை
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பிரசார பயண குழு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. மானாமதுரை வந்த இந்த குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த வரவேற்பு கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் திருச்செல்வம், தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கண்ணகி, ஒன்றியச் செயலாளர் சங்கையா ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
- எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூர் எஸ்.எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் மணிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி மேலாளர் தேவராஜ், உதவி இயக்குனர் சிவஅய்யனன், கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சிறு தொழில் தொடங்குவது குறித்தும், அதனை சிறப்பான முறையில் நடத்தி வெற்றி காண்பது குறித்தும், அதில் பின்பற்றக்கூடாத நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்தும் பேசினர். எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கீழடி அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டு கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத் தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த 6-ந்தேதி முதல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசி ரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சிய கத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறிய கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அனைவருக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை அதிகளவில் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தொல்லி யல் ஆர்வலர்கள், பொது மக்கள் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
கடந்த வாரம் மெக்சிகோ நாட்டின் இந்தியாவிற்கான தூதர் குழுவினரோடு வந்து பார்வையிட்டு வியந்தார். தற்போது பள்ளி, கல்லூரிகளில் பொது தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகளின் வருகை குறைவாக உள்ளது. கோடைவிடுமுறை முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அரசு செலவில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும். மதுரையில் உள்ள விமான நிலையம், ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள், வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் பெரிய அளவிலான ஒளிரும் டிஜிட்டல் திரைகள் அமைக்க வேண்டும்.
இதேபோல் மதுரை- விரகனூர் ரிங்ரோட்டில் இருந்து கீழடி அருங்காட்சிய கம் வரை அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- பேரூராட்சி கடைகள் பொது ஏலம் விடப்பட்டது.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள் ளகடைகள் 38 அலுவலக வணிகவளாக கடைகள் 38 மற்றும் அம்மா தினசரி சந்தை கடைகள், சிறுவர் பூங்கா கடைகள் உள்ளிட்ட கடைகள் ஏலதாரர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. கடை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்களிடம் இருந்து வரைவோலைகள் பெறப்பட்டன. வரை ஓலைகள் வழங்கிய ஏல தாரர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். பேருராட்சி கூட்ட அரங்கில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, இளநிலை உதவியாளர்கள் அழகர்சாமி, ராஜசேகர், மற்றும் அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் பொது ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு கடைகளாக கடை எண் அறிவிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. இதில் அதிக தொகை கேட்ட நபர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிங்கம்புணரி காவல்துறையினர் செய்திருந்தனர்.
- அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மாநில செயற்குழு உறுப்பி னர்களான ஜெயமங்கலம், இணை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் லட்சுமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்களான ஜெயமங்கலம், இணை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், லோன் வழங்குதல், பிரதான மையங்களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு (இன்கிரி மெண்ட்)ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் வட்டார தலைவர் உண்ணாமலை, செயலாளர் பொன்மலர், பொருளாளர் புவனேஸ்வரி, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் பாண்டி செல்வி, இணை செயலாளர்களான ஜெயா, கவிதா, வெண்ணிலா மற்றும் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
- ரூ.24.55 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
- சுகாதார வளாகம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரைக்குடி நகராட்சிக் குட்பட்ட செஞ்சை, முத்துப் பட்டினம் ஆகியப்பகுதி களில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளையும், நமக்கு நாமே திட்டம் 2021-22-ன் கீழ் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி களையும் கலெக்டர் செய் தார்.
இறகுப்பந்து உள்விளை யாட்டு அரங்கம் கட்டும் பணிகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பருப்பு ஊரணி, சோமு பிள்ளை தெரு, கணேசபுரம் ஆகிய இடங்களில் கட்டப் பட்டு வரும் சுகாதார வளா கம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.30 கோடி மதிப் பீட்டில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் மற்றும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிக ளையும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 14 நகராட்சி பள்ளிகளில் 1,631 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.18.57 லட்சம் மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டப்பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், நகராட்சிப் பொறியாளர் கோவிந்தராஜன், நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- தி.மு.க.வில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- ஜூன் 3-ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் காரைக்குடியில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது.மாவட்ட அவைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமாகிய கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த வாரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது வருகிற ஜூன் 3-ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.
வருடம் முழுவதும் நாம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் சுமார் 2 கோடி வாக்குகளை பெற்றோம். நம் உறுப்பி னர்கள் ஒரு கோடி பேர் தவிர நடுநிலையாளர்கள், பொதுமக்கள் 1 கோடி பேர் நமக்கு வாக்களித்துள் ளார்கள். அந்த 1 கோடி பேரையும் நமது கழக உறுப்பினர்களாக மாற்ற வேண்டும்.
நமது மாவட்டத்தில் சுமார் 2 இலட்சம் புதிய உறுப்பினர்களை வருகிற ஏப்ரல் 3 முதல் ஜூன் 3-ந்தேதிக்குள் அவசியம் சேர்த்தாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்த லுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), மருத்துவர் யாழினி (சிவகங்கை), வழக்கறிஞர் தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.இதில் மாவட்ட துணை செய லாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ்ரூசோ, மணிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில் குமார், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.ஆனந்த், சின்னத் துரை, நெடுஞ்செழியன், தேவகோட்டை நகர செயலாளர் பெரி.பாலா, பொதுக்குழு உறுப்பினர்கள் அசோகன், பள்ளத்தூர் ரவி, தெய்வானை இளமாறன், ஒன்றிய துணை செயலாளர் சத்யாராஜா, நகர்மன்ற உறுப்பினர் திவ்யா காரைசக்தி, கொத்தமங்கலம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி நகர செயலாளர் குணசேக ரன் நன்றி கூறினார்.
- தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற் றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் 21 வகையான தீபாரதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரி கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் காலை வேளையில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் லட்சார்ச்சனை நடைபெற்று மாலையில் சிறப்பு அபி ஷேகம் அலங்காரம் நடை பெறும்.
தொடர்ந்து இன்று (28-ந் தேதி) முளைப்பாரி இடுதல், 31- ந் தேதி திருவிளக்கு பூஜை, 2-ந் தேதி கலை நிகழ்ச்சிகள், 3-ந்தேதி அம்மன் திருவீதி உலா, 4-ந் தேதி பால்குடம், காவடி எடுத்தல், இரவு முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல், இரவு கலைநிகழ்ச்சிகள், 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.
- திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- “கோவிந்தா...கோவிந்தா...” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணன் பெருமாள் கோவில் உள்ளது. திவ்விய தேசங்களில் ஒன்றான இந்த கோவில்களில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. இந்தப்பணிகள் முடிவ டைந்ததையொட்டி கும்பாபி ஷேக விழா தொடங்கியது. அதன்படி கடந்த 23-ந்தேதி யாகசாலை பூஜை நடை பெற்றது. பட்டாச்சாரியார் ராமகிருஷ்ணன் தலைமை யில் 60-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
கடந்த 3 நாட்களாக காலை, மாலைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (28-ந்தேதி) கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெரு மாள்-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
நேற்று காலை 8ம் கால யாக பூஜை நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தாயார், ஆண்டாள் மற்றும் ராஜ கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோ வில் நிர்வாகம் செய்திருந்தது.
- கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
- 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 339 மனுக்கள் பெறப்பட்டன.
வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
இளையான்குடி வட்டம் கீழாயூர் கிராமத்தில் அரவிந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பேட்டரி தெளிப்பான்களையும், 3 பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,465 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 395 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பண்ணைக் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
மேற்கண்டவை உள்பட மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- தாய்-மகன் கொலை வழக்கில் மர்மம் நீடிக்கப்பட்டுள்ளது.
- 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தை அடுத்துள்ள பூமலை கண்மாய் பகுதியில் வசித்து வந்த சாத்தையா மனைவி அடக்கி (வயது 46), இவரது மகன் சின்ன கருப்பன் (26) ஆகியோர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். தாய் -மகனின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோ தனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கொலை தொடர் பாக நெற்குப்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட் டது.
தனிப்படை போலீசார் தாய்- மகன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். ஆனாலும் தற்போது வரை கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரிய வில்லை.
கொலையாளிகள் யார் என்பது மர்மமாகவே உள்ளது. இதற்கிடையில் கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படை யில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






