என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா
- தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற் றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை தலையில் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் 21 வகையான தீபாரதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரி கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் காலை வேளையில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் லட்சார்ச்சனை நடைபெற்று மாலையில் சிறப்பு அபி ஷேகம் அலங்காரம் நடை பெறும்.
தொடர்ந்து இன்று (28-ந் தேதி) முளைப்பாரி இடுதல், 31- ந் தேதி திருவிளக்கு பூஜை, 2-ந் தேதி கலை நிகழ்ச்சிகள், 3-ந்தேதி அம்மன் திருவீதி உலா, 4-ந் தேதி பால்குடம், காவடி எடுத்தல், இரவு முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல், இரவு கலைநிகழ்ச்சிகள், 5-ந்தேதி முளைப்பாரி செலுத்துதல், மஞ்சுவிரட்டு நடைபெறும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்